தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து விட்டு ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமௌலி.
பாகுபலி ஏற்படுத்திய எதிர்பார்ப்பினால் இவரது அடுத்த படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இவருடைய அடுத்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நடிக்கின்றனர்.
பொதுவாக ராஜமௌலி படங்களில் ஹீரோவுக்கு இணையாக வில்லனும் பேசப்படுவார்.
ஆனால் புதிய படத்தின் வில்லன் யார்? என்பதை ராஜமௌலி இன்னும் அறிவிக்கவில்லை.
நவம்பர் 3வது வாரத்தில் சூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் அப்போது வில்லனை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.