சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘சூரரைப் போற்று’ படைத்த சூப்பர் சாதனை

சர்வதேச திரைப்பட விருது விழாவில் ‘சூரரைப் போற்று’ படைத்த சூப்பர் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த ‘சூரரை போற்று’ 78 ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிட தேர்வானது.

அதையடுத்து மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படமாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான பல்வேறு பிரிவுகளில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றது. இதில் சிறந்த நடிகர், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை (விமர்சகர்), சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, ஏழு விருதுகளை வென்றிருக்கிறது.

இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில்‌ 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா பாலமுரளி, ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே சிறந்த படங்களுக்கான ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச திரைப்படங்களை வரிசைப்படுத்தும் இணையதள பட்டியலில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட மூன்றாவது படமாக ‘சூரரை போற்று’ (9.1) பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru wins big at SIIMA 2021

மக்களின் சந்தேகங்களை தவிடு பொடியாக்கியது ‘கோடியில் ஒருவன்’ – தனஞ்செயன்

மக்களின் சந்தேகங்களை தவிடு பொடியாக்கியது ‘கோடியில் ஒருவன்’ – தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசியது:

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும்.

ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை வைத்து படம் இயக்க வேண்டும்.

அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. மக்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்த்ததற்கு ஊடக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தயாரிப்பாளர் டி .டி ராஜா பேசியவை,

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது.6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல் இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .

தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும் ,பத்திரிகை துறையும் தான்.

தனஞ்ஜெயன் பேசியவை,

இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்த முதல்படம் கோடியில் ஒருவன் தான். இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா இல்லையா என்ற கேள்விகளை தவிடுபொடியாக்கி கோடியில் ஒருவன் ஜெயித்து இருக்கிறது.

இந்த படத்தை எந்தவித பிரச்சனையுமின்றி தயாரித்துக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார்.

படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு வருடங்களாக படத்தின் செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு நன்றி.

நடிகர் கதிர் பேசியவை,

தமிழ் சினிமாவில் திமிருபிடித்தவன் படத்தின் மூலம் எனக்கு அறிமுகம் கொடுத்தவர் விஜய் ஆண்டனி சார் தான். தற்போது கோடியில் ஒருவன் படம் மூலம் ஒரு அங்கீகாரம் கொடுத்தவரும் விஜய் ஆண்டனி சார் தான் . பிச்சைக்காரன் 2 படத்திலும் நான் நடிக்கிறேன்.

இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் பேசியவை:

என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று .எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது.

மெட்ரோ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன .ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது.

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்த படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான்.

இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ,ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .கண்டிப்பாக கோடியில் ஒருவன் 2 படம் இருக்கிறது.

கமல் போக்ரா பேசியவை,

இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி.கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்காக பல நல்ல படங்களை கொடுப்போம்

Producer Dhananjayan speech at Kodiyil Oruvan success meet

விதார்த் – ரம்யா இணையும் ‘என்றாவது ஒரு நாள்’ படம் நேரடியாக டிவி ரிலீஸ்.?

விதார்த் – ரம்யா இணையும் ‘என்றாவது ஒரு நாள்’ படம் நேரடியாக டிவி ரிலீஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விதார்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் உருவான படம் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படம் உருவாகியுள்ளது.

இதில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் உள்ளிட்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

தற்போது இந்தப் படம் நேரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்தப் படம் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

#EndraavathuOruNaal Direct Television Premiere on 3rd October at 02:30 PM

6வது படிக்கும் போதே குறும்பட இயக்கம்.; 18 வயது இளைஞர் இயக்கிய படத்தை பார்த்து பாக்யராஜ் & ரவீந்தர் பாராட்டு

6வது படிக்கும் போதே குறும்பட இயக்கம்.; 18 வயது இளைஞர் இயக்கிய படத்தை பார்த்து பாக்யராஜ் & ரவீந்தர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய ‘காற்றினிலே’ என்ற 50- நிமிட-திரைப்படம் இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்த படம் சமீபத்தில் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு தனது கருத்துகளைப் பகிர்ந்த பாக்யராஜ், “ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முதல் காட்சி மிகவும் முக்கியமானது, அதை இந்த இளம் குழு அற்புதமாக செய்துள்ளது.

இயக்குநர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டும். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் நண்பர்களையும் பாராட்டுகிறேன்.

தங்கள் மகனின் ஆர்வத்தை அடையாளம் காட்டியதற்கும், அவர் விரும்பிய பாதையில் தொடர ஊக்குவிப்பதற்கும் ஈஸ்வரின் பெற்றோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்றார்.

இவ்வளவு இளம் வயதிலேயே சிறப்பான ஒரு ஒரு படத்தை ஈஸ்வர் உருவாக்கியுள்ளார் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறினார்.

“இந்த இளம் குழுவினரின் திரைப்படத்தின் தரம் உண்மையில் பாராட்டத்தக்கது. முழு அணியின் கடின உழைப்பும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கிய ஈஸ்வர் திரைப்படத்தைப் பற்றி பேசுகையில்….

“இது ஒரே இரவில் இரண்டு பேருக்கு இடையே நடக்கும் காதல் கதை என்று கூறினார்.

“நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ​​ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு பாடலில் வரும் ‘கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம்’ என்ற ஒரு குறிப்பிட்ட வரி இந்த படத்திற்கு உத்வேகம் அளிக்கிறது,” என்றார்.

”காற்றினிலே படத்தில் நெருக்கமான காட்சிகள், போதை பொருட்கள் மற்றும் மதுபானங்கள் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு படத்தை நான் எடுக்க விரும்பினேன். படம் பார்த்தவர்கள் பாரட்டியுள்ளார்கள்.

ஒரு பிரபலமான ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்”, ‘என்று அவர் மேலும் கூறினார்.

“ஆறாம் வகுப்பிலிருந்து நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை உருவாக்க தொடங்கினேன். பின்னர் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க விரும்பினேன், இதன் விளைவாக இப்போது ‘காற்றினிலே’ உருவாகியுள்ளது.

என் பெரியப்பா ஒளிப்பதிவாளர் எம் வி பன்னீர்செல்வம் எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனை எனது முன்மாதிரியாக கருதுகிறேன். இந்தப் படத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு, அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில காட்சிகளும் உள்ளன.”

கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஈஸ்வர், படிப்பை முடித்த பிறகு திரைப்படங்களை எடுக்க முயற்சி செய்யவுள்ளதாக கூறினார்.

அருண் கிருஷ்ணா மற்றும் தக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் காற்றினிலே திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஈஸ்வரின் தாயார் விஜி பாலசந்தர் தயாரித்துள்ளார். யோகான் மனு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சுதர்ஷன் ஆர் செய்துள்ளார்.

Veteran Director Bhagyaraj and producer Ravindar Chandrasekaran appreciate Kaatriniley film directed by 18 year-old

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கௌரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ’96’.

கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

தமிழில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ் சினிமா அளவுக்கு இது வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், ’96’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார் அஜய் கபூர்.

இதில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

’96’ ரீமேக் குறித்து விஜய்சேதுபதி தனது ட்விட்டர் கூறியிருப்பதாவது:

“ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வதில் எனக்கு அதீத சந்தோஷம் கிடைக்கும். அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது என் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது.

’96’ படம் எனக்கு சந்தோஷமான அனுபவத்தை தந்தது.

இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர் அந்தப் பயணத்தை ஹிந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார்.

அவருக்கு என் வாழ்த்துகள். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன்”.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

As an actor, it gives me immense joy to tell stories which strike a chord with the audience, the happiness is further elevated when it reaches a wider audience. ’96’ has been a lovely experience for me, now as Producer Ajay Kapoor takes this journey ahead with the Hindi remake, https://t.co/5FABpDWeDa

I wish him all the best! Can’t wait ???

#AjayKapoor
#AjayKapoorProductions

Makkal Selvan Vijay Sethupathi about 96 movie hindi remake

‘வலிமை’ ரிலீஸை போனி ஜீ அறிவித்தவுடன் மோதலுக்கு ரெடியான விஜய் ஜீ

‘வலிமை’ ரிலீஸை போனி ஜீ அறிவித்தவுடன் மோதலுக்கு ரெடியான விஜய் ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி என்பவர் தன்னுடைய ஜி மீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் அறிமுகமாகிறார்.

இவர் பெண் வேடம் ஏற்றும் நடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் அனித்ரா நாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) படமானது 2022ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்துள்ளார் விஜய் ஸ்ரீ ஜீ.

சற்று முன் தான் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் நடித்த ‘வலிமை’ படம் அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு ரிலீஸ்’ என அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை ட்விட்டரில் டேக் செய்து தான் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#ValimaiPongal ? mass update sir @BoneyKapoor ????

#வலிமையுடன் எங்கள் பப்ஜி பொங்கல்
#PUBGPONGAL
@vijaysrig Directorial
@Onlyarjuman @Aishwaryadutta6
@mimegopi @catchAnithra @cinemabala @NaviinRavindran
@LahariMusic @onlynikil @onlygmedia #PUBGPONGAL https://t.co/BuBE00gNW2

Director Vijay’s PUBG will release on Pongal

More Articles
Follows