நவம்பர் 25 தான்டா தீபாவளி.. இதோ சொல்லிட்டார்ல சூர்யா.; அப்போ ரஜினி படத்தோட மோதியிருந்தா.?

நவம்பர் 25 தான்டா தீபாவளி.. இதோ சொல்லிட்டார்ல சூர்யா.; அப்போ ரஜினி படத்தோட மோதியிருந்தா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு’.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ஏற்கெனவே வரவேற்பை பெற்றுள்ளன.

இப்பட டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

‛‛மாநாடு படத்தில் என் டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன்.

என் நாடி, நரம்பு, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பின்னுது, 10 நாட்களாவது ஓய்வு.

ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவம்பர் 25 தாண்டா தீபாவளி” என பதிவிட்டுள்ளார்.

I almost covered 8days dubbing work of mypart for “MAANAADU”,in 5 https://t.co/a16iyxQQZQ naadi,narambu,neck,back,spine and throat are gone& begging me to give minimum10days rest(heavy work-valli pinnudhu)BUTafter seeing the out-put , tell U all one thing DIWALI NOV25TH THANDA

ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது.

இதே நாளில் சிம்பு எஸ்ஜே சூர்யா நடித்த ‘மாநாடு’ படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் குறைவான தியேட்டர் & லாபம் பாதிப்பு ஆகிய காரணங்களால் நவம்பர் 25க்கு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யாவின் இந்த ட்வீட் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் ரஜினி ரசிகர்களிடையே டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

SJ Suryah talks about Maanaadu movie

கஷ்டப்பட்டுதான் கார் வாங்குறோம்.. நீதிபதி அப்படி சொல்லலாமா..? மன உளைச்சலில் தவித்த தளபதி கோர்ட்டில் புகார்

கஷ்டப்பட்டுதான் கார் வாங்குறோம்.. நீதிபதி அப்படி சொல்லலாமா..? மன உளைச்சலில் தவித்த தளபதி கோர்ட்டில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ல் இங்கிலாந்து நாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார் நடிகர் விஜய்.

அப்போது வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியை அணுகினார். நுழைவு வரி தொடர்பாக, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற உத்தரவிட்டார் போக்குவரத்து அதிகாரி.

அதன்படி இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‛‛நடிகர்கள் வரி விலக்கு கோருவை ஏற்க முடியாது. நடிகர்கள் வரி விலக்கு கேட்பது ஏன்.?

வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து இருந்தார்.

நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்தார்.

அப்போது தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களையும், அபராதத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ‛‛ சட்டவிரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை, வரிவிலக்கு கோருவது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதாலேயே வழக்கு தொடர்ந்தோம்.

வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சம் ஆகஸ்ட் மாதம் ,7ஆம் தேதியே செலுத்தப்பட்டு விட்டது.

இதுபோன்ற வழக்கு விவரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தொழிலை பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை.

சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் இதுபோன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என் மனதை புண்படுத்தி உள்ளன.

சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கிய நிலையில் நீதியின் விமர்சனம் தேவையற்றது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Thalapathy Vijay Pays Tax For Rolls Royce, Insists On Expunging Judge’s Remarks

மீண்டும் இணைந்த ‘டெடி’ கூட்டணியில் கைகோர்த்த தனுஷ் பட நடிகை

மீண்டும் இணைந்த ‘டெடி’ கூட்டணியில் கைகோர்த்த தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

இவரின் நாணயம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது.

அதன்பின்னர் இயக்கிய நாய்கள் ஜாக்கிரதை படமானது துப்பறியும் கதை. மிருதன் படமானது ஸாம்பி கதை. டிக் டிக் டிக் விண்வெளி ஆராய்ச்சி கதை.

இறுதியாக வெளியான டெடி படம் பொம்மை ஃபேண்டஸி கதை.

ஆர்யா நடித்த ‘டெடி’ படம் இந்தாண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பின்னர் சின்னத்திரையிலும் ஒளிப்பரப்பானது.

இந்த படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

இப்போது ‘டெடி’ கூட்டணி மீண்டும் இணைகிறது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்ய லெட்சுமி நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஆர்யாவுக்கு இது வெகு சிறப்பான படமாக இருக்கும் என்றும் அவர் இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Teddy combo joins again for a new film

ராஜூமுருகன் வரிகளில் ஷான் ரோல்டன் இசையில் ‘தல கோதும்…’ சூர்யா

ராஜூமுருகன் வரிகளில் ஷான் ரோல்டன் இசையில் ‘தல கோதும்…’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.

ட்ரெய்லரே மெகா ஹிட் ஆன நிலையில் தற்போது படத்தின் ‘தல கோதும்..’ பாடலின் லிரிக்கல் டிராக் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். ராஜூமுருகன் எழுதியுள்ளார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. ஆகையால், தெலுங்கில் ‘சிருகாலி..’ எனத் தொடங்கும் இதே பாடலின் லிரிக்கல் டிராக்கும் வெளியாகியுள்ளது.

‘சிருகாலி..’ பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார், நரசிம்மன் விருபுத்தூர் எழுதியுள்ளார்.
தல கோதும் (தமிழ்)- https://www.youtube.com/watch?v=sjhY4k6MVEc

சிருகாலி (தெலுங்கு)- https://www.youtube.com/watch?v=sYQZ52iPC7E
‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி, இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது.

நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.

படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர் பணியாற்றியுள்ளார்.

ThalaKodhum the next single from JaiBhim is out

சிம்பு உஷா டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்க AAA தயாரிப்பாளர் போலீசில் புகார்

சிம்பு உஷா டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்க AAA தயாரிப்பாளர் போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னித்தீவு கதையை போல் நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மோதல் விவகாரம் நீண்ண்ண்டு கொண்டே செல்கிறது.

சில தினங்களுக்கு முன் சிம்புவின் தாய் உஷா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை வெளியிட முடியாதபடி மைக்கேல் ராயப்பன் மிரட்டல் விடுக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கம், நடப்பு வினியோகஸ்தர் சங்கமும் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன.

இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரது வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்போம் என்றனர்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மைக்கேல் ராயப்பன் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது..

சிம்பு நடிப்பில், 2016ல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தேன். இந்த படத்தை சொன்னபடி சிம்பு நடித்து கொடுக்கவில்லை. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கினார்.

இந்த படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில், படத்தை வெளியிடுங்கள். நஷ்டம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக, மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பேன் என, சிம்பு உறுதி அளித்தார். அவரை நம்பி, நானும் படத்தை வெளியிட்டேன். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

அதில், 12 கோடி ரூபாய் வினியோகஸ்தர்களுக்கு தர வேண்டி உள்ளது. இது பற்றி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன்.அப்போது தலைவராக இருந்த விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் விசாரித்தனர்.

அவர்களிடம் படம் நடித்து தருவதாக, சிம்பு உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் மாறிய பின், ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டார்.

இது தொடர்பாக, பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்தேன். சங்க நிர்வாகிகள், நஷ்டத்தை ஈடுசெய்ய சிம்பு புதிய படத்தில் நடித்து கொடுப்பது பற்றி தான், அவரது தாய் உஷாவிடம் கேட்டனர்.

மற்றபடி கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. உஷா பொய் புகார் அளித்துள்ளார். அதற்கு, அவரது கணவர் உடந்தையாக உள்ளார். என்னை ஏமாற்றிய சிம்பு, உஷா, டி.ராஜேந்தர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

AAA producer complaint against STR family

ரஜினியின் ‘பச்சைத் தமிழன்’ இமேஜ்ஜை ஒரே வார்த்தையில் டேமேஜ் செய்த சௌந்தர்யா

ரஜினியின் ‘பச்சைத் தமிழன்’ இமேஜ்ஜை ஒரே வார்த்தையில் டேமேஜ் செய்த சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் எந்த மூலையில் எவர் வசித்தாலும் அவரை தொடர்பு கொள்ளும் எளிய சாதனமாக சமூக வலைத்தளங்கள் உருவெடுத்துள்ளன.

நம்முடைய நிஜ சமூகத்தை கூட மறந்து சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பவர்களும் உண்டு.

புதிய உறவுகளை, நட்புகளை உருவாக்கவும் தொலைந்து போன தொலைத்து விட்ட பழைய நண்பர்கள் உறவை மீண்டும் புதுப்பிக்கவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் தொடங்கியுள்ளார்.

இதை ரஜினி தன் குரலில் பதிவு செய்து நேரலையில் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது…

எனக்கு எல்லாமே என் அப்பா தான். அவரின் ஆசியுடன் இதை தொடங்குகிறேன்.

தலைவர் குரலை கேட்கும் போது எனக்கு இந்த ஹூட் வாய்ஸ் சோஷியல் மீடியா குறித்த யோசனை தோன்றியது.

சிலருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள் தங்கள் குரலில் இதில் பதிவு செய்யலாம்.

என் அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது. ஆனால் அவருக்கு பல மொழிகள் தெரியும்”

என பேசினார் சௌந்தர்யா.

ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் அரசியலுக்கு வருவேன் என 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார் ரஜினி. அதன் பிறகு சில தமிழ் ஆர்வலர்கள் ‘தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்’ என எதிர்ப்பு குரல்கள் கொடுத்தனர்.

அப்போது பல சர்ச்சைகள் உருவான நிலையில் நான் ‘பச்சைத் தமிழன்’ என பதிலடி கொடுத்து இருந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தற்போது அப்பாவுக்கு (ரஜினிக்கு) தமிழ் எழுத தெரியாது என சௌந்தர்யா சொன்னது பல சர்ச்சைகளை ரசிகர்கள் & தமிழர்களிடையே உருவாக்கியுள்ளது.

பச்சை தமிழனுக்கு தமிழ் எழுத தெரியாதோ..?? என விமர்சகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

Soundarya Rajinikanth recent speech creates controversy

More Articles
Follows