தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு’.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ஏற்கெனவே வரவேற்பை பெற்றுள்ளன.
இப்பட டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
‛‛மாநாடு படத்தில் என் டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன்.
என் நாடி, நரம்பு, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பின்னுது, 10 நாட்களாவது ஓய்வு.
ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவம்பர் 25 தாண்டா தீபாவளி” என பதிவிட்டுள்ளார்.
I almost covered 8days dubbing work of mypart for “MAANAADU”,in 5 https://t.co/a16iyxQQZQ naadi,narambu,neck,back,spine and throat are gone& begging me to give minimum10days rest(heavy work-valli pinnudhu)BUTafter seeing the out-put , tell U all one thing DIWALI NOV25TH THANDA
ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது.
இதே நாளில் சிம்பு எஸ்ஜே சூர்யா நடித்த ‘மாநாடு’ படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் குறைவான தியேட்டர் & லாபம் பாதிப்பு ஆகிய காரணங்களால் நவம்பர் 25க்கு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யாவின் இந்த ட்வீட் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் ரஜினி ரசிகர்களிடையே டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
SJ Suryah talks about Maanaadu movie