தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மார்கெட் ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
அந்த அழைப்பிதழில் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் என அச்சிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது….
மக்களுக்கும் சினிமாவிற்கும் ஒரு பாலமாக சினிமா பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஒரு படத்தின் குறை, நிறைகளை மக்களிடமும் எங்களிடமும் கொண்டு சேர்க்கின்றனர்.
அவர்களே என்னை மாஸ் ஹீரோ என்கின்றனர். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் ரியல் மாஸ் ஹீரோக்கள் ரஜினி-அஜித்-விஜய்தான். அவர்கள் நிறைய சாதித்து இருக்கிறார்கள்” என்றார்.