தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதனை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
வழக்கம்போல நாயகி நயன்தாரா இந்த விழாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் நயன்தாரா பற்றி சிவகார்த்திகேயன் பேசினார்.
அவர் பேசியதாவது….
அஜித் நடித்த ஏகன் படத்தின் சூட்டிங்கின்போதுதான நான் நயன்தாராவை முதன்முதலில் பார்த்தேன்.
அதன்பின்னர் எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய போது அவரை சந்தித்தேன்.
அதன்பின்னர் 3வது முறையாக வேலைக்காரன் சூட்டிங்கில்தான் அவரை நேரில் சந்தித்தேன்.
இன்றும் அவர் மிகப்பெரிய நடிகையாக வந்துவிட்ட போதிலும் அந்த நேரம் தவறாமை மற்றும் நேர்மை அவரிடம் உள்ளது.
இன்றும் அதே குணத்துடன் இருக்கிறார்.” என்று பேசினார்.