தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன்.
இவரை இடுப்பழகி எனவும் ரசிகர்கள் அழைத்தனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார்.
17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி
இறுதியாக ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.
சிம்ரன் தற்போது டிக்டாக்கில்லும் கால் பதித்துள்ளார்.
சமீபத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலை கிரியேட் செய்துள்ளார்.
எதிரும் புதிரும் – 1999 என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் நடிகர் ராஜு சுந்தரத்துடன் சிம்ரன் இந்த பாடலில் நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மற்றொரு வீடியோவில் தல அஜித்துடன் சேர்ந்து சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம் பெற்ற ஏப்ரல் மாதத்தில்…. என்ற பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.
அந்த பாடலும் வைரலாகியுள்ளது.