ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

ஏப்ரலில் வெளியாகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anushka in silenceபீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க, இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ‘ஏ ஃபிளாட்’, ‘வஸ்தாடா நா ராஜு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைகளமாக அமைகிறது. இப்படத்தில் ஒரு வாய் பேசமுடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இப்படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திகிலுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாதவன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் இணைந்து, அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ’ஹேரோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷானில் தியோ ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பை கவனிக்க, அலெக்ஸ் டெர்சிஃப் சண்டை காட்சிகளை அமைக்க, சாட் ராப்டர் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்று இருக்கிறார்.

இப்படத்திற்கு மணி சியான் வசனம் எழுத, காட்சிகளுக்கு ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைக்க, பின்னணி இசைக்கு கிரீஷ் கோவிந்தன் பொறுப்பேற்று இருக்கிறார்.

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வ பிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில், மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், 5 மொழிகளில் உருவாகியிருக்கும் திகில் படமான ‘சைலன்ஸ்’, உலகமெங்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்
மாதவன்
அனுஷ்கா ஷெட்டி
அஞ்சலி
ஷாலினி பாண்டே
மைக்கேல் மேட்சன்
சுப்பராஜூ,
ஸ்ரீநிவாஸ் அவசரளா
ஹன்டர் ஓ’ஹேரோ உள்ளிட்ட பலர்

தயாரிப்பு: பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத், கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட்
இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா
ஒளிப்பதிவு: ஷானில் தியோ
படத்தொகுப்பு: பிரவீன் புடி
இசை: கோபி சுந்தர்
பின்னணி இசை: கிரீஷ் கோவிந்தன்
பாடல்கள்: கருணாகரன்
கலை: சாட் ராப்டர்
சண்டை பயிற்சி: அலெக்ஸ் டெர்சிஃப்
ஸ்டைலிஸ்ட்: நீரஜா கோனா
திரைக்கதை, வசனம்: மணி சியான்
கதை, இயக்கம்: ஹேமந்த் மதுக்கர்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கல்தா

சமூக பிரச்சனையை மையமாக கொண்ட கல்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaltha audio launchமலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் நடிகர் கருணாநிதி பேசியதாவது…

இந்த படம் ஒரு சமூகப்படம் இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். வைரஸ் எப்படி உருவாகிறது என்பதை இப்படத்தில் எடுத்திருக்கிறோம். சமூக பிரச்சனையை இந்தப்படத்தில் எடுத்துள்ளோம்.இந்தப்படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனக்கேட்டு கொள்கிறேன் நன்றி.

நடிகர் ராதாரவி பேசியது….

“கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயகுநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும் நன்றி.

நடிகர் ராஜ சிம்மன் பேசியதாவது…

இந்தப்படத்தின் பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும். ஹரி உத்ரா நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் நன்றி.

நடிகர் ஆண்டனி பேசியதாவது…

மேற்கு தொடர்ச்சி மலை படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

நடிகை திவ்யா பேசியது….

இந்தப்படத்தில் இயக்குநர் இரவு பகலாக தூக்கமே இல்லாமல் உழைத்துள்ளார். படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய ஒரு படம் நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

இசையமைப்பாளர் ஜெய் கிரிஷ் பேசியதாவது….

இயக்குநர் இப்படத்தில் மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளார். அவர் எனக்கு நண்பர். இயக்குநர் சமூக அக்கறை கொண்டவர். வைரமுத்து சார் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்தப்படம் மிக முக்கியமான பிரச்சனையை பற்றி பேசுகிறது. இந்தப்படம் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் நன்றி.

நாயகி ஐரா பேசியது….

இந்தப்படத்தில் நடித்தது சந்தோஷம். ஒரு சமூக பிரச்சனையை படம் பேசுகிறது. இப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் நன்றி

நாயகன் சிவ நிஷாந்த் பேசியது…

இந்தப்படம் தான் என்னை தேர்ந்தெடுத்தது. இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இப்படியான படத்தில் நாயகனாக நடித்தது சந்தோஷம். எனக்கு நடனம் சுத்தமாக வராது. நடனம் வராத என்னை இப்படத்தில் நடனம் ஆட வைத்துள்ளார்கள். எல்லோரும் புதுமுகங்களாக இருந்தாலும் கடுமையாக உழைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். உண்மையான உழைப்பு ஜெயிக்கும். இந்தப்படமும் ஜெயிக்கும் நன்றி.

இயக்குநர் லெனின் பாரதி பேசியது….

கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும் நன்றி.

தயாரிப்பாளர் ரகுபதி பேசியது…

எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும். நன்றி.

இயக்குநர் ஹரி உத்ரா பேசியதாவது..

“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடுத்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.

இயக்குநர் பாக்கியராஜ் பேசியதாவது…

நல்ல கருத்துள்ள படத்தை எடுக்க இவர்கள் துணிந்திருப்பதே நல்ல விசயம் தான். அரசியல் பழகு என டைட்டிலில் சொல்கிறார்கள் அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும் இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பாளர்கள் – மலர்க்கொடி, ரகுபதி, செ.ஹரி உத்ரா,
ரா.உஷா

எழுத்து இயக்கம் – S.ஹரி உத்ரா

ஒளிப்பதிவு – B.வா

படத்தொகுப்பு – முத்து முனியசாமி

இசை – ஜெய் கிரிஷ்

பாடல்கள் – வைரமுத்து, வித்யா சாகர்

கலை இயக்கம் – இன்பா ஆர்ட் பிரகாஷ்

சண்டை – கோட்டி

நடனம் – சுரேஷ் S

ஸ்டில்ஸ் – பா. லக்‌ஷ்மண்

வரைகலை – பிளசைன்

“ஓ மை கடவுளே” ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – அசோக் செல்வன் !

“ஓ மை கடவுளே” ரசிகர்கள் கொண்டாடுவார்கள் – அசோக் செல்வன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oh my kadavule stillsஇளமை ததும்பும் காதல், இளைஞர்களின் நவீன வாழ்வியல் என அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில், டிரெய்லரிலேயே பரபரப்பை கிளப்பியிருக்கிறது “ஓ மை கடவுளே” படம். டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை YouTube தளத்தில் கடந்து, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பிப்ரவரி 14 படம் வெளியாகவுள்ளது.

படம் குறித்து நடிகர் அசோக் செல்வன் கூறியதாவது…

கடவுள் தந்த காதல்… Oh My கடவுளே விமர்சனம் 3.5/5

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இத்தனை பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இக்கதை திரைக்கதை மீது மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது. எங்கள் திரை வடிவம் அனைவரையும் கவரும் என்று நம்பினோம் ஆனால் ரசிகர்களின் இத்தகைய பிரமாண்ட வரவேற்பு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டது. “ஓ மை கடவுளே” படத்தில் கதையின் பின்னிருக்கும் ரகசியம், கொஞ்சமேனும் மாற்றி, வித்தியாசமாக யோசிக்கலாமே எனும் சிறு பொறி தான். நாம் கண்டிப்பாக பல காதல் கதைகளை கடந்து வந்திருக்கிறோம் ஆனால் இதில் கொஞ்சம் ஃபேண்டஸியும் கலந்திருக்கிறது. அது மற்றிலும் புதிதாக இருக்கும். இயக்குநர் அஷ்வத் உடனான எனது நட்பு, பல்லாண்டு கால வரலாறு கொண்டது. நாளைய இயக்குநரில் குறும்படங்கள் இயக்கிய காலத்தில் இருந்து, எங்கள் நட்பு தொடர்ந்து வந்திருக்கிறது. அப்போதே இருவரும் படம் செய்வதாக உறுதிபூண்டிருந்தோம். எனது சகோதரி அபிநயா செல்வம் தான் இந்தப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார். தயாரிப்பாளர் டில்லிபாபு சார் தந்த ஆதரவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது. “ராட்சசன்” போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்திற்கு பிறகு எங்களின் இந்த சின்ன படத்தின் மீது நம்பிக்கை வைத்து, உருவாக்க ஒப்புக்கொண்டார். அவரது தயாரிப்பு படத்திற்கு பெரும் பலமாக மாறியிருக்கிறது.
இப்படத்தில் நாயகி கதாப்பாத்திரம் மிகவும் முக்கியமானது. ரித்திகா சிங் செய்தால் நன்றாக இருக்குமென நினைத்தோம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து வெகு சில படங்களே செய்துகொண்டிருந்தார். அவர் ஒப்புக்கொள்வரா ? என ஒரு சிறு தயக்கம் இருந்தது. ஆனால் கதை கேட்டதும் அவருக்கு பிடித்திருந்தது. படமே அவரை சுற்றி தான் நடக்கும். ரித்திகா மிக நட்பாக இருந்தார். அது நடிக்கும் போது எனக்கு பேருதவியாக இருந்தது. படத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். வாணி போஜனுக்கு ஒரு முக்கியமான ரோல். அவருக்கு இது தமிழில் முதல் படம் நன்றாக செய்துள்ளார். எல்லோருடைய கிரஷ்ஷாக அவர் மாறிவிடுவார்.

விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் குறித்து கூறியபோது…

படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு ரசிகர்களிடம் எளிதாக சென்றடையும் பிரபல ஆளுமை தேவைப்பட்டது. விஜய் சேதுபதி அண்ணாவிடம் கேட்டோம். அவர் என் சகோதரர் போல்தான். ஆரம்பம் முதலே நான் நன்றாக இருக்கவேண்டுமென உண்மையாக விரும்பும் நபர் அவர். கதாப்பாத்திரம் குறித்து ஏதுமே கேட்கமால் ‘நடிக்கிறேன் என்ன செய்யனும் சொல்’ என்றார். அவருக்கு பெரிய மனது. எளிமையா வந்து நடித்து கொடுத்துவிட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் சக்திகள் கொண்ட நபராக நடிக்கிறார். அவருக்கு உதவியாளராக ரமேஷ் திலக் வருகிறார். அவரது பாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். இதை தவிர இப்போதைக்கு படம் பற்றி ஏதும் சொல்லமுடியாது. படத்தில் அந்த சுவாரஸ்யங்களை நீங்களே கண்டுகளியுங்கள். இந்தப்படம் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் கொண்டாட்டமானதாக இருக்கும் என்பது உறுதி என்றார்.

பிரபலங்கள் பாராட்டிய பாரம்

பிரபலங்கள் பாராட்டிய பாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baaram press meetதானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross Root Films நிறுவனம் பெயரில் SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய

SP Cinemas நிறுவனர் கிஷோர் பேசியதாவது…

எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல வேண்டும். நன்றி

தயாரிப்பாளர் ஆர்த்ரா ஸ்வரூப் பேசியதாவது…

நான் ஒரு மும்பை பெண். இந்த வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாது. இதைப்பற்றி அறிந்த போது அது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. என் அம்மா ப்ரியா கிருஷ்ணசாமி இந்தக்கதையுடன் வந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய இருந்தது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இக்கதை தந்த பாதிப்பில் இதை உருவாக்க உதவிக்கரம் நீட்ட நான் முடிவு செய்தேன். இம்மாதிரி முதியவர்களுக்கு அன்பு கிடைக்க வேண்டும். என் அம்மாவுடன் இப்படத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

நாங்கள் இப்படத்தை மிக சிறிய படமாக தான் எடுத்தோம். தேசிய விருது கிடைத்தது இப்படத்திற்கு நிறைய கதவுகளை திறந்து வைத்தது. இங்கு வந்திருந்து பெரிய இயக்குநர்கள் பாரட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிமாறன் இல்லையெனில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இயக்குநர் ராம் மூலம் தான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தேன். இப்போது படம் ரிலீஸாகிறது. இவர்களின் பெரிய மனதிற்கு நன்றி. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் நேரம் ஒதுக்கி இப்படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் கமலகண்ணன் பேசியது…

இந்த மேடையில் இயக்குநர் ப்ரியா சந்திக்கின்ற சூழ்நிலை எனக்கு ஏற்கனவே பழக்கமான ஒன்று. சுதந்திர பாணி படங்கள் எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவது எத்தனை பிரச்சனை என்பது எனக்கு தெரியும். இப்போது இந்தப்படம் பெரிய அளவில் ரிலீஸாவதில் மகிழ்ச்சி. படம் பார்த்து இரண்டு நாள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் மனதிற்குள் படத்தின் அழுத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மனதை பாரமாக்கும் கதையை தத்ரூபமாக சொல்லியுள்ளார்கள் இப்படம் தந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆதித்யா பேசியதாவது…

“பாரம்” படம் பார்த்தேன் மிகுந்த பாரமாக இருந்தது. கிராமங்களில் சுமை தாங்கி கல் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் கல். அது போல் வீட்டில் சுமை தாங்கியாக சிலர் இருப்பார்கள். ஆனால் நாம் மறந்து விடுகிறோம். அதை இந்தப்படம் ஞாபகப்படுத்தியது. இந்தப்படம் ஆழமான பாதிப்பையும், நல்லதை கற்றுக்கொடுக்கும் படைப்பாகவும் இருக்கும் அனவரும் பார்க்க வேண்டிய படைப்பு இது.

இயக்குநர் அருண் கார்த்திக் பேசியது…

இயக்குநர் பிரியாவை முன்னதாகவே தெரியும். மும்பையில் இருந்து வந்து இம்மாதிரி படைப்பை எடுத்ததற்கு அவருக்கு நன்றி. முதல் படைப்பை உங்கள் ரத்தத்திலிருந்து உருவாக்குங்கள் என்று ஃப்ரெஞ்ச் இயக்குநர் கூறுகிறார். ஆனால் அப்படி உருவாக்கினால் படத்தை வெளியிடுவதில் தமிழ் சினிமாவில் நிறைய பாரம் இருக்கிறது. இந்தப்படம் அனைவரையும் போய்ச் சேர வேண்டும் என ஆசைப்படுகிறேன் அது நடக்க வேண்டும் நன்றி.

இயக்குநர் அஜயன் பாலா பேசியது…

வயதானவர்கள் படும் துன்பத்தை அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. அதன் உச்சத்தை சொல்கிறது இந்தப்படம். நம் கலாச்சாரத்தின் ஒரு அவலத்தை பேசியிருக்கிறது இந்தப்படம். இந்தப்படம் தேசியவிருது பெற்ற போது படம் பற்றி தெரியாமல் நானே விமர்சனம் செய்தேன் அதற்கு இப்போது மன்னிப்பு கேட்கிறேன். இப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் வெற்றிமாறனால் இன்று அது நடக்கிறது அதற்கு அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தவர்கள் ரியலிசத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். கண்ணில் பார்க்கும் வாழ்க்கையை திரையில் காட்டியிருக்கிறது பாரம். இப்படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. எதார்த்தம் அவ்வளவு இயல்பாக இழையோடுகிறது. நம் அனைவரையும் பாதிக்கும் வகையில் இருக்கிறது “பாரம்”. இந்தப்படத்தை கொண்டாடுங்கள் நன்றி.

இயக்குநர் ராம் பேசியதாவது…

தேசிய விருது வாங்கினால் மட்டும் நல்ல படம் என சொல்ல முடியாது. வாங்காவிட்டால் கெட்ட படமும் கிடையாது. “பாரம்” நல்ல படம். கோவாவில் இயக்குநரை சந்தித்தபோது இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வாருங்கள் என்றேன். எப்படி கொண்டு வருவது எனத் தெரியாது என்றார். தமிழ் நாட்டுக்கு வாருங்கள் என்றேன் வந்தார். திரை விழாக்காளில் எப்படி படம் பார்க்கிறார்களோ அதே போல் தான் தமிழகத்து திரையரங்குகளிலும் படம் பார்ப்பார்கள். இங்கு படத்தை கொண்டாடுவார்கள். பாரம் படத்தை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தினேன் அவர் ரிலீஸ் செய்கிறார் நன்றி. இப்படம் நல்ல படம் வெற்றி பெற வேண்டியது அவசியம். தேடிப்போயாவது இந்தப்படத்தை பாருங்கள் நன்றி

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

இயக்குநர் ராம் மூலம் தான் இந்தப்படத்தை பற்றி அறிந்தேன். ராம் பார்த்துவிட்டாரல்லவா அது போதும் நான் ரிலீஸ் செய்கிறேன் என்றேன். எனது பெயர் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. SP Cinemas தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. தமிழில் எல்லாவகையான படங்களும் ஆதரிப்பார்கள். ஆனால் இங்கு மற்ற மொழிகளில் மாதிரி சுதந்திர பாணி படங்களுக்கு பெரிய அளவில் வணிக ரீதியிலான வெளியீடு கிடைப்பதில்லை. மீடியா ஆதரித்தால் மட்டுமே அப்படிபட்ட படங்கள் ஜெயிக்கிறது. நிறைய சமரசங்களுடன் தான் இந்தப்படத்தை செய்துள்ளார்கள். இந்த படத்தின் வணிக ரீதியான வெற்றி இதற்கு பிறகு வரும் இது போன்ற படங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்தபடத்தின் இயக்குநர், அம்மா, மகள் இருவருமே போராளிகள். இப்படிபட்ட ஒரு படத்தை எடுக்க தீர்மானித்து, எடுத்து தேசிய விருதுக்கு அனுப்பி, போராடி இப்போது திரைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பயணம். நான் இந்தப்படத்தில் நான் ஒன்றுமே செய்யவில்லை. இந்தப்படத்தை வெளியிட இயக்குநர் ராம் தான் அதிக சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது…

இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானெ செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள். உங்களை மாற்றும். தயவு செய்து இந்தப்படத்தை ஆதரியுங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி

இசை – வேத் நாயர்

தயாரிப்பு – Reckless Roses

தாயாரிப்பாளர் – ப்ரியா கிருஷ்ணஸ்வாமி , ஆர்த்ரா ஸ்வரூப்.

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது !

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் “பெல்லி சூப்புலு” தமிழ் பதிப்பின் டப்பிங் பணி துவங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyanதிருமணங்கள் நடந்தேறும் காலங்கள் அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும். எல்லை தாண்டி சந்தோஷ கூச்சல்கள் கேட்கும். திருமண சங்கீதங்கள் எங்கும் ஒலிக்கும். குடும்பத்தில் எல்லோரும் இணையும் திருமணம் அத்தனை மகிழ்ச்சியானதாய் இருக்கும். நாம் இங்கு பேசுவது திருமணத்தை பற்றி அல்ல. திருமணத்தை மையமாக வைத்து காதலை கொண்டாடிய “பெல்லி சூப்புலு” தெலுங்கு படத்தின் தமிழ்பதிப்பை பற்றி. விஜய் தேவரகொண்டா நடிப்பில் சக்கை போடு போட்ட “பெல்லி சூப்புலு” திரைப்படம் நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் உருவாகிவருகிறது. தமிழில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றாக முடிக்கப்பட்டு, தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

தயாரிப்பாளர் கொனேரு சத்யநாரயணா படம் பற்றி கூறியதாவது…
தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது. 2020 பிப்ரவரி 7 படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். தமிழில் வெகு நிறைவான படைப்பாக படம் உருவாகி வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுந்தர் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார். பின்வரும் காலங்களில் அவர் தயாரிப்பாளர்களின் செல்வமாக விளங்குவார். மிகப்பெரும் வெற்றியடைந்து, எல்லைகள் தாண்டி பேசப்பட்ட ஒரு படத்தை, ரீமேக் செய்வதென்பது அத்தனை எளிதல்ல. அதுவும் கலாச்சாரத்துடன் தமிழ் மொழியின் தன்மை மாறமல், வாழ்வியல் தன்மைகள் வெளிப்பபடும்படி திரைக்கதை அமைக்க பெரும் திறமை வேண்டும். அதில் அவர் வித்தகராக இருக்கிறார். இப்படம் கதாப்பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாடுகளை மையமாக கொண்ட படம். அசல் பதிப்பின் ஆத்மா எந்த விதத்திலும் சிதைந்து விடாமல் ஹரிஷ் கல்யாணும், ப்ரியா பவானி சங்கரும் தங்கள் கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக உயிர்ப்பித்துள்ளார்கள். எடுக்கப்பட்ட ரஷ் காட்சிகள் பெரிய உற்சாகத்தை தந்தது. படத்தை முழுதாக பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்றார்.

A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் கொரேனா சத்யநாரயணா மற்றும் A Havish Pictures இப்படத்தை தயாரிக்க, தயாரிப்பு பணிகளை SP Cinemas மேற்கொள்கிறது. Production No 2 என தற்போது அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஒருங்கிணைப்பை முரளி கிருஷ்ணா செய்கிறார். 2020 கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

படம் எடுக்க தெரியாத ராம்-வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – மிஷ்கின்

படம் எடுக்க தெரியாத ராம்-வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mysskins controversial speech at Baaram Press Meet அண்மையில் பாரம் என்ற தமிழ் படம் தேசிய விருதை பெற்றது.

இந்த படத்தை பெண் இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் உள்ளிட்டர்களும் கலந்துக் கொண்டு படத்தை பாராட்டினர்.

இதில் மிஷ்கினின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துவிட்டது. சில நேரங்களில் கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார் மனிதர்.

மிஷ்கின் பேசியதாவது…

எந்த நடிகனும் ஒரு கேரக்டராகவே வாழ முடியாது. கற்பழித்தால் அது போலவே வாழ முடியுமா?

கேரக்டராகவே வாழ்ந்தார் என்று என் படத்தில் எவனாவது சொன்னால் வெளியே போடான்னு சொல்லிடுவேன்.

நான் இயக்கிய சைக்கோ படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொன்னால். டேய் அது எல்லாம் ஒரு தடவ தான் பார்க்க முடியும்.

ஆனால் ஒருவன் படத்தை நிறைய முறை பார்த்தேன் என்றார்.

அவனுக்கு வேலையில்லை போல. அந்த படத்தில் ஒரு மயிரும் இல்ல..

பாரம் படம் பார்த்த அன்று நான் மது அருந்த வில்லை.

மது அருந்தி இருந்தால் பாரம் பட இயக்குனர் ப்ரியா வீட்டுக்கு சென்று அவர் காலில் விழுந்திருப்பேன். ஸ்ரீதேவி என்னடீ படம் எடுத்து இருக்க.?

நிஜமாக சொல்றேன். எனக்கு ராமுக்கு வெற்றி மாறனுக்கு எல்லாம் படமே எடுக்க தெரியல. என்னடா படம் எடுக்குறீங்கன்னு எங்களையே நீங்க திட்டலாம்.

நம் சின்ன வயதில் நம் மலத்தை அம்மா அள்ளி கழுவி விட்டுப்பார்கள். ஆனால் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் நாம் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்.

பாரம் படத்தை பார்த்தா கண்டிப்பாக உடனே நாம் எல்லாரும் அம்மா அப்பாவ பார்க்க போவோம். நான் என் அம்மா அப்பாவுக்கு பணம் அனுப்பினாலும் நன்றாக பார்த்துக் கொண்டாலும் அவர்கள் என்னுடன் இல்லையே என்பதை இந்த பாரம் படம் சொல்லுகிறது.

இந்த படத்திற்கு போஸ்டர் கூட அடிக்கவில்லை என்று சொன்னார் பிரியா. நான் என் செலவில் போஸ்டர் அடித்து நானே சுவர்களில் ஒட்டுகிறேன்.

என்று மிஷ்கின் பேசினார்.

Director Mysskins controversial speech at Baaram Press Meet

More Articles
Follows