தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் சிம்பு கலந்து கொண்டனர்.
நடிகர் சிம்பு மேடையில் பேசும்போது..
“நான் ஒரு இரவு மனிதன். பெரும்பாலான என் பணிகளை இரவில் தான் கண் விழித்து செய்வேன்.
அப்படி இருந்த என்னை மாற்றியவர் மணிரத்னம். இப்பொழுது பகல் நேர முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். தற்போது அதிகாலையில் ஷூட்டிங் சென்று வருகிறேன்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ ஆர் ரகுமான் சிறந்த ஒரு இசையை கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
மேலும்.. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உங்களை நடிக்க அழைத்திருந்தால் எந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் என கேட்டனர்?
அதற்கு மணிரத்னம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் செய்திருப்பேன்” என்று பேசினார் சிம்பு.
மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் அரவிந்தசாமி அருண் விஜய் விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்திருந்தார் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.
simbu speech at Ponniyin Selvan 2 audio launch