தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தை பிடித்த சிம்பு

தென்னிந்திய நடிகர்களில் முதல் இடத்தை பிடித்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிக அளவில் பெண் ரசிகைகளை கொண்டுள்ள நடிகர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் ஒரு கோடியை தொட்டிருக்கிறார்.

இதனால் நடிகர் சிம்பு தென்னிந்திய நடிகர்களில் அதிக பாஃலோயர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமையுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதுவரை வெறும் 152 போஸ்ட்க்களை மட்டும் சிம்பு பகிர்ந்துள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சினிமாவில் இந்த இடத்தை அடைய……; ‘மகான்’ செட்டில் நடந்த மகா சம்பவம்.. மகனிடம் பகிர்ந்த விக்ரம்

சினிமாவில் இந்த இடத்தை அடைய……; ‘மகான்’ செட்டில் நடந்த மகா சம்பவம்.. மகனிடம் பகிர்ந்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசுகையில்…

, ” கோப்ரா படம் எனக்கு ஸ்பெஷலானது. நான் விக்ரம் சார் படத்தை பார்த்து வளர்ந்தவள். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் நடிக்கும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. கோப்ரா படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆவல் மற்றவர்களைப் போல் எனக்கும் இருக்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று திரையரங்கில் சந்திக்கலாம்” என்றார்.

நடிகை மிருணாளினி ரவி பேசுகையில்….

” 2019 ஆம் ஆண்டில் சின்ன சின்ன வீடியோக்கள் மூலம் கவனத்தை கவர்ந்து வந்த என்னை, இயக்குநர் அஜய் சார் தொடர்பு கொண்டு, ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். சீயான் விக்ரம் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அந்த கனவையும் இயக்குநர் அஜய் நனவாக்கினார்.

அவர் நடித்த ‘சாமி’, ‘அந்நியன்’ ஆகிய படங்களை பார்த்து, தீவிர ரசிகையாக இருந்த எனக்கு, அவருடன் இணைந்து நடிக்கும்போது … இப்போது வரை அது கனவாகவே இருக்கிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று ‘கோப்ரா’ படத்தை ரசிகையாக பார்க்க ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.

நடிகர் துருவ் விக்ரம் பேசுகையில்,…

” இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவும், பெருமிதமாகவும் கருதுகிறேன். நடிகனாக இல்லாதிருந்தாலும், ரசிகனாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’ என்ன ஸ்பெஷல்? என கேட்டேன். “அஜய், அஜயின் விஷன். கிரியேட்டிவிட்டி.. திரையில் சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் திரையரங்கத்தில் ஒரு திரைப்படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும்.” என பதிலளித்தார்.

எனக்கும் ‘கோப்ரா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன்.

ஏனெனில் இந்தப் படத்தின் அஜய் மற்றும் அப்பா ஆகிய இருவரும் தங்களுடைய கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநர் அஜயின் கற்பனையை திரையில் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்பா கடினமாக உழைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். உங்களுக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் ‘கோப்ரா’வில் நடித்திருக்கும் உங்களுக்கும் இங்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.

மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி ஆகிய இருவரும் இந்த படத்தில் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என நம்புகிறேன்.

என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் ‘மகான்’ படத்தில் பணியாற்றும்போது ஒரு விசயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு புள்ளியில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல், உற்சாகத்துடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், “என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்விட்டது. சோர்வாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் உற்சாகத்துடன் வளைய வருகிறீர்களே எப்படி?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர், ” இந்த தொழிலில் ஒரு இடத்தை பெறுவதற்காக கடுமையான போராட்டத்தை சந்தித்திருப்பதால்.. இந்த உற்சாகம் தொடர்கிறது என நினைக்கிறேன்” என பதிலளித்தார். அவர் பேசி முடித்ததும், அவரைப் பற்றிய ஒரு திறனாய்வு எனக்குள் ஏற்பட்டது. அவர் ஒரு சிறப்பு மிக்க மனிதர். இதன் காரணமாகவே அவர் நடித்திருக்கும் ‘கோப்ரா’ மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ” சீயான் விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இந்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை இயல்பாக இருக்க வைத்து, படப்பிடிப்பு முழுவதையும் உற்சாகமாக பணியாற்ற வைத்ததில் விக்ரம் சாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. தமிழில் முதன் முதலாக அறிமுகமாகும் இந்த படத்தில் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.’: என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில்..

“‘ இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். ‘கோப்ரா’ படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார்.

அவரால் இன்று இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.

என்னுடைய நடிப்பில் தயாரான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

‘கோப்ரா’ படத்திற்கு படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள்.” என்றார்.

எப்படி இருக்கிறார் இயக்குனர் இமயம்.? பாரதிராஜாவை பார்த்த பின் வைரமுத்து பேட்டி

எப்படி இருக்கிறார் இயக்குனர் இமயம்.? பாரதிராஜாவை பார்த்த பின் வைரமுத்து பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஓரிரு தினங்களாக பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதன் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்து வருகிறார்.

இயக்குனர் பாரதிராஜாவிற்கு நெஞ்சு சளி அதிகமாக உள்ளது. ஆனால் நன்றாக பேசுகிறார். எங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்.

அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என பாரதிராஜாவை பார்த்த பின் கவிஞர் வைரமுத்து எம் ஜி எம் மருத்துவமனையில் தெரிவித்தார்.

இந்தியாவின் No.1 நியூஸ் ஆப் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த வெண்பா

இந்தியாவின் No.1 நியூஸ் ஆப் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர் பச்சானின் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா.

தொடர்ந்து ‘கற்றது தமிழ்’ படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை அள்ளியவர் இவர்.

மேலும் விஜய் உடன் சிவகாசி சூர்யாவுடன் கஜினி உள்ளிட்ட பல படங்களில் குழந்தையாக நடித்துள்ளார்

குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா.

தன்னுடைய டீனேஜ் வயதில் கதையின் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பள்ளிப் பருவத்திலே’, ‘மாயநதி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

அழகும் திறமையும் உள்ள தமிழ் நடிகைகள் அரிது. அதில் வெண்பா முன்னணியில் இருக்கிறார் என பத்திரிகைகள் பாராட்டி இருந்தன.

கடந்த வருடம் 2021ல் டிசம்பர் மாதம் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக நடித்திருந்தார்.

விரைவில் வெளியாகியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சீரியலில் நடிக்க உள்ளதாகவும் சீரியல் என்ட்ரி அவருக்கு 2வது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..” என தன்னை ஒரு முன்னணி ஆப் நிறுவனம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை கண்டித்து நடிகை வெண்பா தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்..

“நான் இப்போதும் சினிமாவில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு சீரியல் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நான் அதிலும் நடிக்கவும் ஒப்புக்கொள்ளவில்லை.

உண்மை தெரிந்துக் கொண்டு செய்தியை பதிவிடுங்கள். இது போன்ற தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என நடிகை வெண்பா பதிவிட்டுள்ளார்.

Hi @DailyhuntApp , I have not received any serial offer, have not signed any serial yet, currently acting only in films, not yet started my 2nd innings.
So don’t spread fake news without knowing the truth. Thanks

https://t.co/ZYt6Ko0n3T

கேரளாவிலும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படக்குழுவின் பிரமோஷன்

கேரளாவிலும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படக்குழுவின் பிரமோஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், ஹரி கிருஷ்ணன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தை யாழி ஃபிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தென்மா என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 31 தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.

இதனை முன்னிட்டு படக்குழுவினர் இன்று கேரளாவில் உள்ள கொச்சின் பகுதிக்கு சென்று தங்கள் பட புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘கோப்ரா’ படத்தில் என்னப்பா ஸ்பெஷல்.? சீயான் விக்ரமிடம் மகன் துருவ் கேள்வி

‘கோப்ரா’ படத்தில் என்னப்பா ஸ்பெஷல்.? சீயான் விக்ரமிடம் மகன் துருவ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது.. “மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’ என்ன ஸ்பெஷல்? என கேட்டேன்.

“அஜய், அஜய்யின் விஷன். கிரியேட்டிவிட்டி.. திரையில் சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் தியேட்டரில் ஒரு படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும்.” என அப்பா சொன்னார்.

‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 31ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

More Articles
Follows