இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கும் ஷங்கர்

இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankarஇந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.
ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.
எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy மதுவை அன்று mortuary-ல் பார்த்ததும் உடைந்துவிட்டேன்.
Art Department சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த schedule-ல் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை.
எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவரின் மனைவிக்கும் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், திரு சந்திரனின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

ஷங்கர்

துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க; சூப்பர் ஸ்டாருக்கு பவர் ஸ்டார் வேண்டுகோள்

துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க; சூப்பர் ஸ்டாருக்கு பவர் ஸ்டார் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Power Star Srinivasan request to Super Star Rajiniசிவகாமி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் கடம்பூர் ராஜீ உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

இந்த படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ராதாரவி மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது…

நான் நடிகனாக ஆவதற்கு முன்பே ராதாரவியை சந்தித்து என் ஆசையை கூறினேன். அவர் வேண்டாம் என அப்போவே தடுத்தார்.
ஒருவேளை பொறாமையால் சொல்கிறார் என படத்தில் நடிக்க தொடங்கினேன்.

நான் சிரித்தால் திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

லத்திகா, மற்றும் அன்பு தொல்லை படங்களில் நடித்தேன்.

எல்லாரும் பிறக்கிறோம்.. எல்லாரும் இறக்கிறோம். ஆனால் பேர் புகழ் வேண்டும் என நினைத்தேன்.

அதன்படி சினிமாவில் நடித்தேன். அதற்காக ரூ. 40 கோடி வரை செலவழித்து விட்டேன்.

ரஜினி சாருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் கட்சி ஆரம்பிக்க சார். எனக்கு துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க.

இல்லேன்னா நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்க வாங்க” இன்னும் நிறைய பேச வேண்டும். மற்றொரு மேடையில் விரைவில் பேசுகிறேன்”

என பேசினார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

Power Star Srinivasan request to Super Star Rajini

sivagami audio launch

பிப்ரவரி 28ல் மோதும் துல்கர் ரிச்சர்ட் ஸ்ரீகாந்த் த்ரிஷா படங்கள்

பிப்ரவரி 28ல் மோதும் துல்கர் ரிச்சர்ட் ஸ்ரீகாந்த் த்ரிஷா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil films 2020ஞாயிற்றுக்கிழமை வந்தால் எல்லாம் தரப்பினருக்கும் மகிழ்ச்சிதான். அது விடுமுறை தினம் என்பதால் இருக்கலாம்.

அதுபோல் வெள்ளிக்கிழமை வந்தாலே சினிமா ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் கொண்டாட்டம்தான். அன்றைய தினம் புதுப்படங்கள் ரிலீசாகும்.

நாளை பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஓர் பார்வை இதோ…

முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் வந்தாலும் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய திரௌபதி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட், ஷீலா இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் நடித்துள்ள உன் காதல் இருந்தால், திரிஷா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படங்கள் வெளியாகவுள்ளன.

இத்துடன் கல்தா (அரசியல் பழகு), கட்டு மரமாய், இரும்பு மனிதன் படங்களும் திரைக்கு வருகின்றன.

பின் குறிப்பு… த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் நாளை வெளியாகவில்லை. மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் வாழ்த்துவேன்.; சீமான் வைத்த ட்விஸ்ட்

ரஜினி கட்சி ஆரம்பித்தால் வாழ்த்துவேன்.; சீமான் வைத்த ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seeman rajiniநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் நிகழ்ச்சிகளில் ரஜினியை நிச்சயம் தாக்கி பேசாமல் இருக்க மாட்டார்.

ஒருவேளை அவர் பேசாவிட்டாலும் ரஜினி பற்றி கேள்வியை ஊடகங்கள் கேட்பதால் அவரும் இதை வாடிக்கையாக்கி விட்டார்.

இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருக்கு வாழ்த்து சொல்வேன் என ஒரு ட்விஸ்ட் வைத்து தெரிவித்துள்ளார் சீமான்.

அதாவது…. என் தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும். ரஜினி தமிழர் அல்லர்.

அவர் கர்நாடகத்தில் அல்லது மராட்டிய மாநிலத்தில் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு வாழ்த்து சொல்வேன்” என தெரிவித்துள்ளார்.

ஜிவி. பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ஜிவி. பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash saindhaviஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் படங்களில் ஒன்றாக பணியாற்றிய போது காதலித்து 2013ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது 7 ஆண்டுகள் ஆன நிலையில் நைட் பார்ட்டி, உள்ளிட்ட பல காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் விவாகரத்து வாங்கவுள்ளனர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் இல்லை) செய்தியில் உண்மை இல்லை என்றால் நாம் அதுபோன்ற செய்திகளை பதிவிட மாட்டோம்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்

மேலும் ஜிவி. பிரகாஷின் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இது குறித்து பாடகி சைந்தவி கூறியுள்ளதாவது..

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்னுள் பாதி. (BETTER HALF) என தெரிவித்துள்ளார்.

இது தான் தன்னுடைய பதிவிலும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நீங்க கேப்டன்; உங்களுக்கும் ஷங்கருக்கும் பொறுப்புள்ளது..; கமலுக்கு லைகா கடிதம்

நீங்க கேப்டன்; உங்களுக்கும் ஷங்கருக்கும் பொறுப்புள்ளது..; கமலுக்கு லைகா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Shankarலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் படம் இந்தியன் 2.

இதன் சூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து லைகா நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார் கமல்.

நாயகன் முதல் கடை நிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியன் 2 விபத்து எதிரொலி; இன்சூரன்ஸ் செய்த ‘மாநாடு’ படக்குழு

படப்பிடிப்பில் விபத்து நடந்தால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார் கமல்.

தற்போது கமலுக்கு விளக்கம் அளித்து லைகா கடிதம் அனுப்பியுள்ளது.

அதில்….

உங்களின்(கமல்) கடிதம் கிடைக்கப் பெற்றோம். பிப்., 19 சம்பவத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடுகளும் செய்தோம். அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தங்களின் கடிதம் கிடைப்பதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்தோம். இது உங்களின் கவனத்திற்கு வராமல் போனது துரதிர்ஷ்டமானது.

லைகா நிறுவனம் உலகதரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது.

இதில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களான நீங்களும், ஷங்கரும் தான் படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் ஆப் தி ஷிப்பாக இருந்தீர்கள்.

பாதுகாப்பு விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்பாடாது என நாங்கள் நம்பினோம். முழு படப்பிடிப்பும் உங்கள் இருவரது கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதை நினைவூட்ட கடினமாக உள்ளது.

இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்கும் நாங்கள், பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் என நீங்கள் நம்புவீர்கள் என எதிர்பார்த்தோம்.

இதற்காக எங்களது நிறுனவனத்தின் சார்பில் சுந்தர்ராஜன், மணிகண்டன் என்ற விமலை இருவரை நியமித்துள்ளோம். படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு அளிக்கும் விதமாக அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளோம்.

3 பேரின் இறப்பு அந்த குடும்பத்தினருக்கு எதிர்பாராத இழப்பு. இதிலிருந்து அவர்கள் மீண்டு வரவும், அவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்கவும் ஆண்டவனை நாம் அனைவரும் வேண்டுவோம்.

இவ்வாறு லைகா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

More Articles
Follows