ஒரே நாளில் கமல் ரசிகர்களுக்கு 3 விருந்தளிக்கும் மணிரத்னம் & ஷங்கர்

ஒரே நாளில் கமல் ரசிகர்களுக்கு 3 விருந்தளிக்கும் மணிரத்னம் & ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

இதனை முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கின்றனர் அவரது பட இயக்குனர்கள்.

கமல் நடிப்பில் விரைவில் திரைக்கு வர தயாராகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.

லைக்கா தயாரித்துள்ள இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 3ம் தேதி ‘இந்தியன்2’ படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 36 ஆண்டுகளுக்கு முன் கமல் – மணிரத்னம் இணைந்து பணியாற்றிய ‘நாயகன்’ படமும் இதே தேதியில் (நவம்பர் 3ல்) ரீ-ரிலீஸ் ஆகிறது.

கமலின் மற்றொரு படமான #KH234 கமல் 234 ஆவது படம் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசன் உதயநிதி மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோவும் நவம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது.

ஆக ஒரே தினத்தில் கமல் ரசிகர்களுக்கு 3 மெகா விருந்து கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal fans will have triple treat on 3rd November

டிடிஎஃப் வாசன் ரசிகர்களே.. மனசு திடப்படுத்திக்குங்க.; மீண்டும் காவல் நீட்டிப்பு

டிடிஎஃப் வாசன் ரசிகர்களே.. மனசு திடப்படுத்திக்குங்க.; மீண்டும் காவல் நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பைக் ரேசர் டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாக பைக் ஓட்டி அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானார்.

இதனையடுத்து இவரை லட்சக்கணக்கான சிறுவர்கள் பின் தொடர்ந்தனர் . இவர் பலமுறை விபத்து ஏற்படுத்தி சர்ச்சைக்கு உள்ளானார். ஆனாலும் காவல்துறை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாட்டுகளை மீறி அடிக்கடி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளானார்.

சமீபத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டி தனக்குத்தானே விபத்து ஏற்படுத்தினார்.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகி கோர்ட்டில் வழக்கானது.

அவரது பைக்கை பறிமுதல் செய்ய வேண்டும்.. லைசென்ஸ் வழங்கக் கூடாது.. இவரால் பல சிறுவர்களும் அதிவேகமாக பைக் ஓட்ட ஆசைப்படுகின்றனர்.. அவர்களும் சாகசங்கள் செய்ய ஆசைப்படுகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார் டி டி எப் வாசன். அதன் பின்னர் மூன்று முறை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 30ஆம் தேதி 4வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

டிடிஎஃப் வாசன் யூடியுப்பில் பிரபலமானதை தொடர்ந்து ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் அந்த படம் எடுக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அவர் விபத்துக்குள்ளானதும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Bike racer and Actor TTF Vasan arrested news updates

ரூ.100 கோடியை வசூலித்த ‘மார்க் ஆண்டனி’.; டைரக்டருக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த ப்ரொடியூசர்

ரூ.100 கோடியை வசூலித்த ‘மார்க் ஆண்டனி’.; டைரக்டருக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த ப்ரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் சிலுக்கு கேரக்டரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத்குமார் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த படம் ஓடிடி-யில் வெளியாகி உள்ளது. மக்களின் பெரும் ஆதரவை பெற்ற இந்த படம் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்த நிலையில் இந்த பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி எம் டபிள்யூ என்ற காரை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் வினோத்.

மார்க் ஆண்டனி

Mark Antony Producer Vinod Kumar gifted a Luxury BMW Car to Adhik Ravichandran

யாஷிகா ஆனந்த் மிரட்டும் ஹாரர் படம் ‘சைத்ரா’ ரிலீஸ் அப்டேட்

யாஷிகா ஆனந்த் மிரட்டும் ஹாரர் படம் ‘சைத்ரா’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு ‘சைத்ரா’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
இணை தயாரிப்பு – T. கண்ணன் வரதராஜ்.
தயாரிப்பு – K. மனோகரன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

சைத்ரா

படம் பற்றி இயக்குனர் M. ஜெனித்குமார் பேசியதாவது..

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.

பீட்சா , டீமாண்டி காலணி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது.

படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம் . படம் நவம்பர் 17 ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது.

படத்தை PVR பிக்சர்ஸ் நிறுவனம் தமிழங்கமெங்கும் வெளியிடுகிறது” என்றார் இயக்குனர் M.ஜெனித் குமார்.

சைத்ரா

Yaashika Anand starrer Chaithra releasing on 17th Nov 2023

குஞ்சுமோன் – கீரவாணி – வைரமுத்து இணைந்த ‘ஜென்டில்மேன்-2’ பட ஷூட்டிங் அப்டேட்

குஞ்சுமோன் – கீரவாணி – வைரமுத்து இணைந்த ‘ஜென்டில்மேன்-2’ பட ஷூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ஜென்டில்மேன்-2’.

A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது.

இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, ஶ்ரீ லதா, கண்மணி, ‘ லொள்ளு சபா ‘ சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை – கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் முக்கியமான ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இதை படமாக்கினார்.

ஜென்டில்மேன்-2

பிரம்மாண்ட காட்சிகள் நிறைந்த அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் மூன்றாம் வாரம் சென்னை ஹைதராபாத் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெறும்.

நான்கு கட்டங்களாக மலேஷியா, துபாய், ஶ்ரீலங்கா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தில் சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், சுமன், மனோஜ் k ஜெயன், பிராச்சிகா, ‘ காந்தாரா ‘ வில்லன் அச்சுத் குமார், படவா கோபி, முனிஷ் ராஜா, ஆர்.வி.உதயகுமார், சென்றாய்ன், மைம் கோபி, ரவி பிரகாஷ், ஷிஷிர் ஷர்மா, வேலா ராம மூர்த்தி, ஜான் மகேந்திரன், கல்லூரி விமல், ‘ ஜிகர்தண்டா ‘ ராம்ஸ், பிரேம் குமார், இமான் அண்ணாச்சி, முல்லை, கோதண்டம், ஶ்ரீ ராம், ஜான் ரோஷன்,’ லொள்ளு சபா ‘ சாமிநாதன், ஜார்ஜ் விஜய், நெல்சன், சித்தாரா, சுதா ராணி, ஶ்ரீ ரஞ்சனி, சத்ய பிரியா, கண்மணி , மைனா நந்தினி, ஶ்ரீ லதா, கருண்யா, பேபி பத்ம ராகா, பேபி அனீஷா என ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.

ஜென்டில்மேன்-2

இசை அமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி , கவி பேரரசு வைரமுத்து கூட்டணியின் ஏழு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது.

அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பு – சதீஷ் சூரியா, நடனம் – பிருந்தா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, ஸ்டைலிஸ்ட் செரீனா டிசெரியா,
தயாரிப்பு மேற்பார்வை – முருகு பூபதி, சரவண குமார், ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

ஜென்டில்மேன்-2

The first Schedule of Gentleman 2 is wrapped up.

5 வருடமாக படுத்த படுக்கையாக கிடந்த விக்ரமன் மனைவி.; நடவடிக்கை எடுத்த அமைச்சர்

5 வருடமாக படுத்த படுக்கையாக கிடந்த விக்ரமன் மனைவி.; நடவடிக்கை எடுத்த அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புதிய மன்னர்கள்’, ‘பூவே உனக்காக’, ‘உன்னை நினைத்து’, ‘சூரிய வம்சம்’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல குடும்பபாங்கான படங்களை இயக்கியவர் விக்ரமன்.

இவரது படங்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆனால் சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவது இல்லை.

அதற்கு காரணம் இவரது மனைவி படுத்த படுக்கையாக கிடப்பதால் அவரை 5 வருடமாக அருகில் இருந்து கவனித்து வருகிறார் விக்ரமன்.

இதனையடுத்து தமிழக அமைச்சர் மா. சுப்ரமணியன் விக்ரமனை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

விக்ரமன்

இது குறித்து விக்ரமன் கூறியதாவது…

“என் மனைவிக்கு தவறான செய்த ஒரு ஆபரேஷனல் அவரால் எழுந்து நடக்க முடிவதில்லை. 5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனை அறிந்து கொண்டு அமைச்சர் மா சுப்ரமணியன் ஒரு மருத்துவர் குழுவை அழைத்து வந்திருந்தார்.

என் மனைவி பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து முழுவதுமாக குணமடைய செய்வோம்” என உறுதி அளித்துள்ளார்கள்.

விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்ரமன்.

கூடுதல் தகவல்கள்…

கே எஸ் ரவிகுமார் தயாரித்து வரும் ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தில் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

விக்ரமன்

Director Vikraman wife operation TN Govt immediate action

More Articles
Follows