தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு கீர்த்தி, புகழ், சிங்கம் புலி, விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிஎஸ்பி’.
இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வந்த கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது….
“நான் இப்போது ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கிய வருகிறேன்.
தலைவர் ரஜினி என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ரெடி என்றால் நான் அவருக்கான கதையை உருவாக்குவேன். தற்போது எதுவும் முடிவாகவில்லை.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது இயக்குனர் சங்கர் படம் தயாரிக்க ஏதாவது கதை இருக்கா? என்று கேட்டிருந்தார்.
கதை ரெடியானதும் சந்திப்பேன்”.
இவ்வாறு கார்த்தி சுப்புராஜ் தெரிவித்தார்.
Karthik Subbaraj talks about Rajini and Shankar Project