தனுஷின் ‘நானே’ வருவேன்…; நானே தருவேன் அப்டேட் – செல்வராகவன்

தனுஷின் ‘நானே’ வருவேன்…; நானே தருவேன் அப்டேட் – செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தம்பி நடிகர் தனுஷ்… அண்ணன் இயக்குனர் செல்வராகவன்.. இவர்கள் இணைந்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம்தான்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் இந்த கூட்டணியில் யுவன் இணைந்தால் அது பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.. எனவே இவர்களின் கூட்டணிக்கு எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றி வருகின்ற படம் தான் ‘நானே வருவேன்’.

தற்போது நானே தருவேன் அப்டேட் வழங்கியுள்ளார் செல்வராகவன்.

“யுவனுடன் ‘நானே’ வருவேன் பாடல்களை தற்போதுதான் முடித்தேன். இதை உங்களுடன் ஷேர் செய்யாமல் இருக்க என்னால் காத்திருக்க முடியவில்லை,” என பதிவிட்டுள்ளார்.

இத்துடன் செல்வராகவன் யுவனுடன் எடுத்த ஒரு செஃல்பி போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

Selva Raghavan gives Dhanush starrer Naane Varuven film update

இளையராஜா இல்லாத மிஷ்கின் படம்..; விஜய்சேதுபதியுடன் கூட்டணி

இளையராஜா இல்லாத மிஷ்கின் படம்..; விஜய்சேதுபதியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலமான நடிகர்களின் படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை போல் தங்கள் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின்.

சித்திரம் பேசுதடி… அஞ்சாதே.. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.. நந்தலாலா முதல் துப்பறிவாளன், சைக்கோ வரை அனைத்து படங்களையும் வித்தியாசமாக இயக்கியிருந்தார்.

இவரது படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையே உயிரூட்டியது.

இவை அனைத்தும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

துப்பறிவாளன் 2 இயக்கி கொண்டிருந்தபோது அப்பட நாயகன் விஷாலிடம் ஏற்பட்ட பிரச்சினையால் அது இருந்து விலகி தற்போது பிசாசு 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம் மிஷ்கின்.

இந்த படத்திற்கு இளையராஜா குடும்பத்தினர் இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக மிஷ்கின் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Mysskin and Vijay Sethupathi joins for a new film

JUST IN ‘ஆர்ஆர்ஆர்’ பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராஜமௌலி

JUST IN ‘ஆர்ஆர்ஆர்’ பட புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள மிகப்பிரம்மாண்ட படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’.

இதனை சுருக்கமாக ஆர்ஆர்ஆர் என அழைக்கின்றோம்.

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இப்படம் வரும் கடந்த 2022 ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து பின்னர் ஒத்தி வைத்தது.

இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலாகி வருகிறது.

எனவே தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்திய சினிமாவின் பெருமையைச் சரியான நேரத்தில் நாங்கள் வெளியிடுவோம்” என அப்போது தெரிவித்து இருந்தனர்.

அதன்பின்னர் ஜனவரி 21ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில்..

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றால் மார்ச் 18ஆம் தேதி படத்தை வெளியிடுவோம். அல்லது மற்றொரு தேதியாக ஏப்ரல் 28ல் படத்தை வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது.

அந்த சமயத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று ஜனவரி 31ஆம் தேதி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்.. மார்ச் 25ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

New release date announced for RRR movie

கொரோனா பாதிப்பில் வைகோ & பாரதிராஜா.; சீனுராமசாமி உருக்கமான பதிவு

கொரோனா பாதிப்பில் வைகோ & பாரதிராஜா.; சீனுராமசாமி உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல அரசியல்வாதியும் மதிமுக கட்சித் தலைவருமான வைகோ கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அதுபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஒரு வாரம் காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விரைவில் குணமடைய வேண்டி சீனுராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காலத்தின் நாயகர்களே விரைந்து வருக

இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது.

நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன்.

‘கலிங்கப்பட்டியின் சிங்கம்’ தலைவர் வைகோ அவர்களும்

என் ‘தென்கிழக்குச்சீமை’ இயக்குனர் பாரதிராஜா அவர்களும்

தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன்.

என பதிவிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு பின் குணமாகி பாரதிராஜா வீடு திரும்பி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் நடேசனின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று(டிச., 31) இல்லம் திரும்பிவிட்டேன். நடேசன், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை பற்றி நலம் விசாரித்த நண்பர்கள், திரைத்துறையினர், அரசியல் பெருமக்கள், உறவுகள் ஆகியோருக்கும் நன்றி. பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்கள் அணிந்து பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Seenu Ramasamy tweet on Vaiko and Bharathi Raja health

‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமானவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘லிப்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பேய் படம் என்றாலும் பேயை காட்டாமல் ரசிகர்களை பயமுறுத்தி இருந்தனர்.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பெரிய திரைக்கு வருவதற்கு முன்பே நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளவர் கவின்.

இவர் தற்போது நடித்துள்ள வெப் தொடரின் பெயர் ஆகாஷ்வாணி.

இதில் ரெபா மோனிகா ஜான், ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மெல்வின் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எனோக் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார், சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார்.

சோனியா ராம்தாஸ் தயாரித்துள்ள இந்த தொடர் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட டீசரை நாளை பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் பட டைரக்டர் நெல்சன் வெளியிடுகிறார் என அறிவித்துள்ளனர்.

Kavin’s AakaashVani release date is here

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஜெய் ஜீவா.; 3 ஹீரோயின்ஸ் & இசை யார் தெரியுமா?

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஜெய் ஜீவா.; 3 ஹீரோயின்ஸ் & இசை யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அரண்மனை 3’ படத்தின் வெற்றிக்கு பிறகு என்ன மாதிரியான படத்தை அடுத்து இயக்குவார் சுந்தர் சி என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அடுத்த படம் பேய் படமா.? அல்லது காமெடி படமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சுந்தர்.

வி.இசட்.துரை இயக்கத்தில் தலைநகரம் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சுந்தர். அடுத்ததாக இயக்கவுள்ள படத்தின் பணிகளைத் தற்போது துவங்கியுள்ளார்.

இந்த புதிய படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர் இணைந்து நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

கூடுதல் தகவல்கள்…

ஜீவாவும், ஜெய்யும் ஏற்கனவே சுந்தர்.சியின் இயக்கத்தில் கலகலப்பு 2 படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

நண்பன் படத்தில் ஜீவாவும் ஸ்ரீகாந்தும் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தனர்.

சுந்தர்.சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, வின்னர் போன்ற படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sundar C is back With big Entertainer with Srikanth Jai and Jeeva

More Articles
Follows