தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்தவொரு துறையும் நாம் நேசித்தால் மட்டுமே, அந்த துறையில் வெற்றிப்பெற முடியும்.
அதுபோல் சினிமாவை நேசிப்பவர்களால் மட்டுமே அந்த துறையில் வெற்றிக் காண முடியும்.
ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவை தான் வெறுத்துவிட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதில் தற்போது வரை தொடர தான் நேசிக்கும் பாபாதான் காரணம் என்றார்.
ஆன்மிக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது…
சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஒதுங்கிய போது. அமெரிக்கா செல்ல நேர்ந்தது.
அப்போது பாபாஜி பற்றிய பத்தகத்தை படித்தேன்.
என்னை அறியாமல் ஏதோ ஒரு ஒளி என்னுள் பாய்வதை உணர்ந்தேன்.
ஆனால் அது கண்களுக்கு தெரியவில்லை. என்னுள் சில மாற்றங்கள் நடைபெற்றது.
சினிமா வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஆன்மிகத்தை சினிமாவில் நிச்சயம் சொல்லமுடியும்.
அப்படி சொன்னால் நிறைய பேரை அது சென்றடையும் என்றார்கள்.
அதன்பின்னரே நானே கதை எழுதி, பாபா படத்தை தயாரித்தேன்.
படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால், பாபாவினால் யாரும் நஷ்டமடைய கூடாது என்பதால் பணத்தை திருப்பி கொடுத்தேன்.
இவரு என்ன திடீரென இமயமலை செல்கிறார். குழப்புகிறார், இவர் குழப்பவாதியா என்று சிலர் நினைக்கலாம்.
அவர்கள் குழப்பத்தில் இருப்பதால் என்னை குழப்பவாதி என்று நினைக்கிறார்கள்.” என்று பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.