தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் காலா படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சமூக நலம் கொண்டு பணியாற்றும் பீம் நிறுவனமும், ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து வரும் ஜீன் 30ம் தேதி ‘மஞ்சள்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றினை அரகேற்ற முடிவு செய்துள்ளனர்.
இதற்கு நடிகர்கள் சத்யராஜ், விவேக் ஆகியோர் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து சத்யராஜ் மற்றும் விவேக் கூறியுள்ளதாவது…
‘1993ம் ஆண்டே இந்த அவல செயலுக்கு சட்டம் தடை விதித்துள்ளது.
ஆனால் அதற்கான மாற்று வழியினை அரசு மேற்கொள்ளாத காரணத்தினால் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்று விவேக் கூறியுள்ளார்.
“குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மக்களிடம் உள்ள இரக்கத்தினால் இந்த கழிவுகளை அள்ள இயந்திரம் தயாரிக்கும் முயற்சியை கூட நம் நாடு எடுக்கவில்லை.
இந்த கொடுமையான செயலை நிறுத்தி புது மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்று சத்யராஜ் கூறியுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை அள்ளும் பணியின் போது மொத்தம் 10 பேர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sathyaraj and Vivek voice for Pa Ranjiths Manjal awarness drama