தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தை முடித்தவுடன் அதிரடியாக இரண்டு படங்களை ஒப்புக் கொண்டார் சிவகார்த்திகேயன்.
ஒரு படத்தை மோகன்ராஜா இயக்க, அதில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
தற்போது வேலைக்காரன் என்று பெயரிடப்பட்ட இதன் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து மற்றொரு படத்தை பொன்ராம் இயக்க அதில் சமந்தா உடன் நடிக்கவிருந்தார்.
ஆனால் அதன் சூட்டிங் இதுவரை தொடங்கவில்லை.
அதற்குள் சமந்தா வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற துவங்கவுள்ளது.
சமந்தாவை நிச்சயம் செய்த நாக சைதன்யாவும் அக்டோபர் மாதத்திற்குள் திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
எனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் போது கால்ஷீட் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிலிருந்து சமந்தா விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது