தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்….
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…” என அழியாத புகழோடு என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருபவர் எம்ஜிஆர்.
தமிழக அரசியலையும் சினிமாவையும் இவர் பெயரின்றி பிரித்து பார்க்க முடியாது.
உழைக்கும் கரங்கள் என்ற படத்தில் விவசாயியாக நடித்தார் எம்.ஜி.ஆர்.
அதே படப்பெயரை கொஞ்சம் உல்டா செய்து ‘உழைக்கும் கைகள்’ என்ற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது.
இதில் எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடைகளில் தோன்றும் நாமக்கல் எம்.ஜி.ஆர் என்பவர் நாயகனாக நடிக்கிறார்.
கிரண்மயி நாயகியாக நடிக்கிறார்.
மேலும் டைரக்டர் செந்தில்நாதன், ஜாகுவார் தங்கம், தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்க தலைவர் பிரேம்நாத் ஆகியோர் நடித்துள்ளனர்.
தென்காசி, குற்றாலம், நாமக்கல், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
எம்.ஜி.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் நாட்டில் நிலவி வரும் விவசாயிகள் பிரச்சினைகளை எப்படி கையாண்டிருப்பார் ? என்பது தான் படத்தின் கதையாம்.
Reel MGR’s film titled Uzhaikkum Kaigal