65 ஆண்டுகள் ப்ளாஷ்பேக்..: சினிமாவில் PRO பணியை தொடங்கி வைத்த MGR – RMV

65 ஆண்டுகள் ப்ளாஷ்பேக்..: சினிமாவில் PRO பணியை தொடங்கி வைத்த MGR – RMV

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க இன்று பல மீடியாக்கள் இருந்தாலும் 65 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொடர்பாளர்களை இந்தப் பணியை செய்து வந்தனர்.

ஒரு படம் பற்றிய தகவல்களை மீடியாக்களிடம் கொண்டு சேர்க்க திரைத்துரைக்கும் மீடியாக்களுக்கும் பாலமாக இருப்பவர்தான் இந்த பி ஆர் ஓ (எ) மக்கள் தொடர்பாளர்கள்.

இவர்கள் கொடுக்கும் செய்திகளையே மீடியாக்கள் தங்களது நாளிதழ்கள் இணையதளங்கள் யூடியுப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

முதல் முதலாக தமிழ் திரைப்படம் துறையில் ‘பொதுஜனத் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ) என்ற பணி புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் மூலம் 22/ஆகஸ்ட் 1958 இன்றுதான் உதயமானது.

தமிழ் திரைப்பட துறையில் ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் முதல் பொதுஜனத் தொடர்பாளர் (பி.ஆர்.ஒ) பிலிம் நியூஸ் ஆனந்தன் உதயமானதற்கு காரணமாக இருந்தவர்கள். இவர்களே…

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர்*.

*இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு*.

*ஆர்.எம் வீரப்பன்*.

*வித்வான் வே.லட்சுமணன்*.

*திரைப்பட துறையில் பி.ஆர்.ஓ என்ற பணிக்கு ஆணிவேராக இருப்பதற்கு இந்த நான்கு பேர் தான் காரணம்*.

ஆனந்தன்

Cinema PRO profession started in 1958

‘ஜாலிவுட்’டில் பங்கேற்ற ‘ஜெயிலர்’ நடிகர்.; ஐசரி கணேஷ் உருவாக்கிய தீம் பார்க்.!

‘ஜாலிவுட்’டில் பங்கேற்ற ‘ஜெயிலர்’ நடிகர்.; ஐசரி கணேஷ் உருவாக்கிய தீம் பார்க்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சினிமா குடும்ப பொழுதுபோக்கு இடமான ’ஜாலிவுட்’ பிரம்மாண்டமாக பெங்களூரு நகரில் தொடங்கியுள்ளது.

விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் ‘ஜாலிவுட்’ குழுவின் நடனத்துடன் இந்த நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் ஸ்ரீ டி.கே. சிவக்குமார், புகழ்பெற்ற நடிக டாக்டர். சிவராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ டி.கே.சுரேஷ், ஸ்ரீபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ., திரு.எச்.ஏ.இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ., மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

ஜாலிவுட்டின் சேர்மனான டாக்டர். ஐசரி கே கணேஷ், விழாவை சிறப்பித்த அனைத்து பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

ஐசரி கே கணேஷ்

தனது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது கனவுகள் மீதான நம்பிக்கை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

விருந்தினர்கள் அனைவரும் ஜாலிவுட்டின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பெயர் போன பெங்களூரு நகரத்தில் நிச்சயம் இந்த ஜாலிவுட் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், டைட்டானிக், தி லாஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஐரோப்பிய பின்னணியிலான தெரு, ரோமன்சியா, பல்வேறு நீர் பூங்காக்கள் மற்றும் கடல் அலைகளைக் கொண்ட குளம் போன்ற ஜாலிவுட்டின் சிறப்பம்சங்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. இதுமட்டுமல்லாது, இங்கிருக்கும் பலதரப்பட்ட உணவு வகைகளும் மக்களை சுவை தரத்தை கூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில், புதுமையான சினிமா அனுபவத்தை தேடுபவர்களுக்கான பொழுதுபோக்கு களமாக ‘ஜாலிவுட்’ அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐசரி கே கணேஷ்

Isari Ganesh launches Jollywood at Bangaluru

MUST WATCH உங்க பார்ட்னர்கிட்ட எவ்ளோ GAP..? ‘இறுகப்பற்று’ டீசர் உணர வைக்கும்.!

MUST WATCH உங்க பார்ட்னர்கிட்ட எவ்ளோ GAP..? ‘இறுகப்பற்று’ டீசர் உணர வைக்கும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுகப்பற்று’ திரைப்படத்தின் வித்தியாசமான டீஸர் ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘இறுகப்பற்று’. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘டாணாக்காரன்’, ‘மான்ஸ்டர்’, ‘மாநகரம்’ என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தின் வெளியீடு விரைவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பை உருவாக்கும் வண்ணம், ஒரு புதுமையான பாணியில் டீஸர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக திரைப்பட டீஸர்களில், அந்தத் திரைப்படங்களின் காட்சிகளே இடம் பெறும். ஆனால் இறுகப்பற்று டீஸரில் உண்மையான திருமணமான ஜோடிகளின் வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் அன்பு, அன்யோன்னியம், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது புலனாகி அது இறுகப்பற்று படத்தின் கருவைப் பிரதிபலிக்கும் வண்ணம் டீஸராகப் பயனபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக திருமணமான தம்பதிகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை படக்குழு நடத்தியது. இதில் பங்கேற்ற ஜோடிகள் தங்களின் துணை குறித்து சரியாக தெரிந்து கொள்ளும் வகையில், தங்கள் திருமண வாழ்க்கை குறித்து, புரிதல் குறித்து பேசி, கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தனர்.

இந்த நிகழ்வு (அனுமதியுடன்) படம் பிடிக்கப்பட்டே, டீஸராக வெளியாகியுள்ளது.

திருமண உறவில் இருப்பது தொடர்பான பொதுவான அனுபவங்களை எடுத்துரைப்பதன் மூலம் பார்வையாளர்களை ஆழமான மட்டத்தில் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இந்த டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையான தம்பதிகள் தங்கள் தனிப்பட்ட பயணங்கள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதைக் காண்பிப்பதன் மூலம் பல்வேறு பின்னணியில் இருந்து பார்வையாளர்களுடன் இணைவதை டீஸர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிஜ தம்பதிகள், வெளிப்படையாக தங்களின் தனிப்பட்ட பயணங்கள், பிரச்சினைகள், சந்தோஷங்கள் குறித்துப் பேசுவது, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில்…

“திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் புதுமையான யோசனைகளை நாங்கள் தொடர்ந்து திரைக்குக் கொண்டு வருகிறோம். தற்போது இறுகப்பற்று திரைப்படத்தின் உலகை, அந்த உணர்வை பார்வையாளர்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது பார்வையாளர்களை அவர்களின் சொந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் யோசித்து, உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

MUST WATCH உங்க பார்ட்னர்கிட்ட எவ்ளோ GAP..? ‘இறுகப்பற்று’ டீசர் உணர வைக்கும்.!

TEASER LINK – https://youtu.be/FBdtwYDAjlw

Unveiling Teaser of Irugapatru – A Glimpse into Real Relationships

ரஜினியின் ‘கோச்சடையான்’ பட காசோலை மோசடி வழக்கு.; கோர்ட் உத்தரவு என்ன.?

ரஜினியின் ‘கோச்சடையான்’ பட காசோலை மோசடி வழக்கு.; கோர்ட் உத்தரவு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டில் திடீர் உடல் நலக்குறைவால் ரஜினிகாந்த் சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் உயர்தர சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அப்போது அவர் நடிக்க இருந்த ‘ராணா’ என்ற திரைப்படம் நிறுத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்து 2011 ஜூலை 13ஆம் தேதி சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது இளைய மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதியிருந்தார். இந்த படம் அனிமேஷன் என்ற போதிலும் திரைக்கதைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதுவே முழு படமாக அமைந்திருந்தால் பெரும் வரவேற்பு பெற்று இருக்கும் என ரசிகர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கடந்த 2014-ல் வெளியானது. அப்போதே இந்த படத்தில் சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என பிரச்சனை எழுந்தது.

இப்படத் தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து, இப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினி உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014-ல் வழங்கிய ரூ.5 கோடிக்கான காசோலை பணமின்றி திரும்பியது.

இதனையடுத்து முரளி மனோகருக்கு எதிராக அபிர்சந்த் நஹார் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதி்த்து கடந்த 2021 டிச.4 அன்று தீர்ப்பளித்தது.

மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ. 5 கோடிக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வீதம் ரூ. 7.70 கோடியை வழங்க வேண்டுமெனவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பெங்களூரு உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விளம்பர நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Rajinis Kochaidaiyaan Advertisement case issue Court order

செல்வராகவன் இயக்கத்தில் இணையும் அஜித் – தனுஷ் – பரத்.!

செல்வராகவன் இயக்கத்தில் இணையும் அஜித் – தனுஷ் – பரத்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதே போன்று நடிகர் தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் அஜித், தனுஷ் மற்றும் பரத் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் உறுதியானால் தன் வாழ்க்கை வேறு மாதிரி மாறிவிடும் என நடிகர் பரத் நேர்காணல் ஒன்றில் கூறினார்.

Ajith – Dhanush – Bharath to joins Selvaraghavan’s direction

சிரஞ்சீவி பிறந்தநாளில் ‘மெகா 157’ டைட்டில் லுக்கை வெளியிட்ட வசிஷ்டா

சிரஞ்சீவி பிறந்தநாளில் ‘மெகா 157’ டைட்டில் லுக்கை வெளியிட்ட வசிஷ்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அதை தனது பிம்பிசாரா திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும்.

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவர்ஸை வசிஷ்டா நமக்குக் காட்டப் போகிறார்.

வசீகரிக்கும் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது.

வசிஷ்டா தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தவர் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதால், #Mega157 ஒரு மகத்தான படைப்பாக இருக்கும்.

நடிகர் : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில் நுட்ப குழு
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா
தயாரிப்பாளர்கள் : வம்சி, பிரமோத், விக்ரம்
தயாரிப்பு நிறுவனம் : UV கிரியேஷன்ஸ்.

மெகா 157

Chiranjeevis Mega Mass Beyond Universe Mega157 Announced

More Articles
Follows