தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை சமந்தா. இவர் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
இரு மாநிலங்களிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இதனையடுத்து நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.
சில மாதங்கள் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த சமந்தா திடீரென ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
இந்த நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த தெனாலி சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவுக்கு, கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
தெனாலி சந்தீப் வீட்டின் ஒரு பகுதியில் எழுப்பப்பட்ட இக்கோயிலில் சமந்தாவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர் சமந்தாவின் தீவிர ரசிகர் என்றாலும், அவரது படங்களைவிட, அவரின் பிரதியுஷா அறக்கட்டளை மூலம் சமந்தா செய்துவரும் நற்பணிகள் தன்னை ஈர்த்ததுள்ள காரணத்தாலேயே கோயிலை கட்டியுள்ளதாக தெனாலி சந்தீப் தெரிவித்துள்ளார்.
இன்று ஏப்ரல் 28 சமந்தாவின் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கோயில் திறக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகின்றது.
கூடுதல் தகவல்..
1990களில் நடிகை குஷ்பு பிரபலமாக இருந்தபோது அவருக்கு தமிழக ரசிகர்கள் கோயில் கட்டினர்.
அதுபோல நடிகராக வளர்ந்து மக்களின் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கும் தமிழகத்தில் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Fan of Samantha builds a temple for her in AP