தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன் டச்சு இயக்கத்தில் உருவான படம் ‘அங்காரகன்’. ஜூலியன் மற்றி, ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீபதி நாயகனாக நடித்துள்ளார்.
இவர் திரைக்கதையை எழுதியுள்ளதுடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
இதில் டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் நாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆகஸ்ட் 19 சென்னை பிரசாத் லேபிள் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நடிகர் சத்யராஜ் பதில் அளித்தார்.
அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு…
சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது ரஜினி சார் மட்டும்தான். சினிமாவில் சார்லின் சாப்ளின் சூப்பர் ஸ்டார் என்றார்கள். அதன் பின்னர் ராஜேஷ் கண்ணா என்றார்கள்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை தியாகராஜ பாகவதரை முதல் சூப்பர் ஸ்டார் என்றார்கள். ஆனால் அவருக்கு ஏழிசை மன்னர் என்ற பெயர் உண்டு. அவருக்கு அடுத்ததாக எம்ஜிஆரை சூப்பர் ஸ்டார் என்றார்கள். ஆனால் அவரை மக்கள் திலகம் என்று அழைக்கிறோம்.
அடுத்த ஏழிசை மன்னர் எம்ஜிஆர் என்று யாரும் அழைப்பதில்லை. கமல்ஹாசன் மிகச்சிறந்த கலைஞன்.. ஆனால் அவரை யாரும் அடுத்த நடிகர் திலகம் என்று அழைப்பதில்லை. அப்படி அழைத்தாலும் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.
நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி மட்டும் தான். அது போல மக்கள் திலகம் என்றால் எம் ஜி ஆர் மட்டும்தான். அது போல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர் மட்டும்தான்” என்று பேசினார் சத்யராஜ்.
அதன் பின்னர் மீண்டும் படம் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்ட போது.. “தற்போது நிறைய படங்களில் கேரக்டர் ஆரிட்டிஸ்ட் ஆக நடித்து வருகிறேன்.
படத்தை இயக்குவது மிகப்பெரிய வேலை. ஒரு நடிகர் என்றால் ஷார்ட் ரெடி ஆனதும் சென்று விடலாம். ஆனால் இயக்குனர் வேலை அப்படி அல்ல. எனவே அது நமக்கு வேண்டாம். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப படம் இயக்குவது என்னால் முடியுமா என்று தெரியவில்லை.
அரசியலுக்கு வருவீர்களா ? என்று கேட்கப்பட்டது இப்போது கூட அரசியல்தான் இருக்கிறேன். அரசியல் என்பது தேர்தலில் நின்று எம்எல்ஏ எம்பி ஆவது சட்டசபைக்கு செல்வது மட்டும் அரசியல் அல்ல. அது ஓட்டு அரசியல்.
சமீபத்தில் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டேன். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார். அது எனக்கு பிடித்திருந்தது.
என்னை கவர்ந்தவர் மணிவண்ணன். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சித்தாந்த குருவாகவும் எனக்கு அவர் இருந்தார்.
30 வருடங்களுக்கு முன்பு பி வாசு, பாரதிராஜா, பாசில் ஆகியோர் என்னை சத்யராஜை வேறுவிதமாக காட்டி இருந்தார்கள். அன்று போட்ட விதைதான் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் ஒரு மிகப்பெரிய கலைஞன். அவர் நினைத்திருந்தால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் அவர் நடித்திருக்கலாம்.
ஆனால் அந்த படத்தை அவர் தயாரித்து இருந்தார் அதுபோல பி வாசு இயக்கிய பல படங்களில் எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டது.
மகா நடிகன் என்ற படத்தில் காமெடியாக செய்திருந்தார். அதே சமயம் வால்டர் வெற்றிவேல் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக காட்டி இருந்தார்.
இதுபோல பல இயக்குனர்கள் என்னை அப்போதே அப்படி காட்டி விட்டார்கள்.
நான் பல படங்களில் ரஜினி கமலுக்கு வில்லனாக நடித்தாலும் அவர்கள் எனக்கான இடத்தை கொடுத்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் எனக்கு பெரிய வசனங்கள் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னை பேச வைத்து அழகு பார்த்தார்கள்..
இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் சத்யராஜ்.
Sathyaraj reply to Next Super Star Political entry