தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார்
இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு 2022 ஜனவரியில் ரிலீசாகவுள்ளது.
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் இந்த சூட்டிங் செட்டுக்குள் சந்தித்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை பெருங்குடி என்ற பகுதியிலுள்ள ஒரு பிரபல ஸ்டூடியோவில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வந்துள்ளது.
இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
இந்த படங்களில் சூட்டிங்கில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விஜய்யும் சூர்யாவும் சந்தித்து பேசிக் கொண்டுள்ளனர்.
Reason behind Vijay Suriya sudden meet?