ஜெயலலிதா-விஜய் இடையே பிரச்சினை உருவாக காரணம் இதுதானா..?

ஜெயலலிதா-விஜய் இடையே பிரச்சினை உருவாக காரணம் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and jayalalithaஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் முக்கிய கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் ராதாரவி.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார் ராதாரவி.

அதில்.. ‘‘ஜெயலலிதா இருந்தபோதே தைரியமாக பல வி‌ஷயங்களை செய்தவர் விஜய். அதனால்தான் இருவருக்கும் பிரச்சினை உருவானது.

அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இது 6 வருடங்களில் நடக்க வாய்ப்புள்ளது.” என ராதாரவி கூறியுள்ளார்.

இன்சூரன்ஸ் பண மோசடியை சொல்ல வரும் *படித்தவுடன் கிழித்துவிடவும்*

இன்சூரன்ஸ் பண மோசடியை சொல்ல வரும் *படித்தவுடன் கிழித்துவிடவும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Padithavudan Kizhithuvidavum shooting spotநடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும்.

அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது.

இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா.

கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செ.ஹரிஉத்ரா (இவர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்க படுகின்றன என்பதை மையமாக வைத்து “ தெரு நாய்கள் “ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது )

படம் பற்றி இயக்குனர் ஹரிஉத்ரா பகிர்ந்து கொண்டது…

இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான்.
அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த “படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை.

இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம்.

90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம்.

அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது.

படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

ஒளிப்பதிவு – வாசு
இசை – நிரோ பிரபாகரன்
பாடல்கள் – மாஷா சகோதரிகள் மற்றும் அபிநந்தன்
கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ்
சண்டை – ஸ்டன்ட் கோட்டி
எடிட்டிங் – முத்துமுனியசாமி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணைத் தயாரிப்பு – சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர்
தயாரிப்பு – R.உஷா

Padithavudan Kizhithuvidavum movie deals with Insurance amount and its politics

Padithavudan Kizhithuvidavum movie deals with Insurance amount and its politics

தமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா

தமிழை அடுத்து தெலுங்கு கன்னடத்திலும் நுழையும் நந்திதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nandita swethaமுன்னணி இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி ராசியான நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை நந்திதா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான முதல் படமான ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா ’ என்ற படம் பெரிய வசூலைக் குவித்ததால் தெலுங்கிலும் ‘வெற்றிகரமான நடிகை ’ என்று பெயர் பெற்றார். இவர் அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

இது குறித்து நந்திதா பேசுகையில்,‘ தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சீனிவாசா கல்யாணம் ’ என்ற படத்தில் பத்மாவதி என்ற கிராமீய பின்னணியிலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். குடும்ப பாங்கான படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளர் தில்ராஜுவின் இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தில் பல வீர தீர காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறேன். தற்போது இந்த படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறேன்.

இதற்கு முன் ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் வெளியான டார்லிங் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிரேம கதாசித்திரம் 2 படத்திலும் நடித்து வருகிறேன். இதற்கான படபிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

தமிழில் வைபவ் உடன் ஒரு படத்திலும், ‘நர்மதா ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க விரைவில் ஒப்பந்தமாகவிருக்கிறேன்.’ என்றார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதாவை அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

*அண்ணனுக்கு ஜே* போட மேக்கப் இல்லாமல் நடித்த மஹிமா நம்பியார்

*அண்ணனுக்கு ஜே* போட மேக்கப் இல்லாமல் நடித்த மஹிமா நம்பியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahima nambiar“அண்ணனுக்கு ஜே ” திரைப்படம் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார் .இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இந்தப்படத்தில் கதநாயகனாக தினேஷ் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.மேலும் ராதாரவி ,மயில் சாமி ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
.அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார்.விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார்.எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் தினேஷ் பேசியவை “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மஹிமா அருமையாக நடித்துள்ளார்.இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார் .ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது.இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் ” இவ்வாறு பேசினார் .

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியவை ” முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார் .நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன்.நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள் ,இந்தபடத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசைஅமைப்பாளர் அர்ரோல் கொரளி பேசியவை ” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எனது மற்ற படங்களை விட இந்த படத்தில் ஒருவித வித்யாசமான முறையில் இசைஅமைத்துள்ளேன்.7 பாடல்களுள் ஒவ்வொருவிதம் ” இவ்வாறு பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை மஹிமா நம்பியார் பேசியவை ” வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது.இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்” இவ்வாறு பேசினார் .

பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் பேசியவை ” நடிகர் தினேஷ் தனது முழு எனர்ஜி வாய்ந்த நடிப்பை தந்துள்ளார்.படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தை தந்துள்ளார்.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என பேசியுள்ளார்.

பாலிவுட்டில் கால் பதிக்கும் *காலா* பட டைரக்டர் ரஞ்சித்

பாலிவுட்டில் கால் பதிக்கும் *காலா* பட டைரக்டர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director pa ranjithரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித்.

ரஜினி படத்தை இயக்கியதால் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

தற்போது பாலிவுட்டிலும் இவருக்கு அழைப்பு வந்துள்ளது.

பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்த ஷரீன் மத்ரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் அடுத்து ரஞ்சித் இயக்கும் இந்தி படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளனர்.

இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் பீரியட் படம் என கூறப்படுகிறது

சிவகார்த்திகேயனை அடுத்து சூர்யா படத்திலும் சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்.

சிவகார்த்திகேயனை அடுத்து சூர்யா படத்திலும் சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and senthil ganeshசூப்பர் சிங்கர் 6’ போட்டியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ் அவர்கள் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீமராஜா’வில் பாடுகிறார்.

இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை முதலில் அறிவித்தார்.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார் செந்தில் கணேஷ்.

இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்.ஜி.கே.’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படாததால் ‘சூர்யா 37’ என்றே சொல்லப்படுகிறது.

More Articles
Follows