தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன் ஜி இயக்கியுள்ள ‘பகாசூரன்’ என்ற படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.
செல்வராகவன் நட்டி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோகன் ஜி பேசும்போது…
“நான் ஒரு இயக்குனராக வெற்றி பெற்று விட்டேன்.. தயாரிப்பாளராக வெற்றி பெறுவேனா என்பது மக்கள் கையில் தான் உள்ளது.
நானும் செல்வராகவனும் நிறைய பேசியிருக்கிறோம். செல்வராகவனைப் பார்த்தே சினிமாவுக்கே வந்தேன்.
தினமும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவேன். நட்டி நட்ராஜை மனதில் வைத்து தான் படத்தை எழுதினேன்.
நானும் ரஞ்சித்தும் குறிப்பிட்ட சமூகத்திற்காக படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
நானும் ரஞ்சித்தும் பேஸ்புக் நண்பர்கள். அவரது படங்களை பார்த்து பாராட்டு தெரிவித்து இருக்கிறேன்.
சாதி இருக்கிறது என நான் சொல்லும்போது திட்டினார்கள். வெற்றிமாறன் சொல்லும்போது பாராட்டுகிறார்கள். யார் சொல்வது என்பதுதான் இங்கே முக்கியம்” என பேசினார் மோகன்ஜி.
Ranjith is my friend Mohan speech at Bakasuran event