‘கர்ணன்’ ஆக மாறும் தனுஷ்; மலையாள நடிகைகள் மீது டார்கெட்..?

‘கர்ணன்’ ஆக மாறும் தனுஷ்; மலையாள நடிகைகள் மீது டார்கெட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajisha Vijayan to star opposite Dhanush in Karnan movie‛பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் மாரிசெல்வராஜ்.

இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.

கர்ணன் என்ற பழைய படத்தலைப்பை இப்படத்திற்கு வைக்கவுள்ளனர்.

இந்த நிலையில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் என்பவர் இதில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.

சைக்கிள் வீராங்கனையாக ரஜிஷா நடித்துள்ள பைனல்ஸ் என்ற படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இவர் தன் முதல் மலையாள படத்திலேயே கேரள மாநில விருதை பெற்றவர்.

தனுஷின் சமீபத்திய படங்களில் கீர்த்தி சுரேஷ், மடோனா, மஞ்சுவாரியர் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajisha Vijayan to star opposite Dhanush in Karnan movie

இனிமே தியேட்டர்ல டிக்கெட் எடுக்க முடியாது; அமைச்சர் அதிரடி

இனிமே தியேட்டர்ல டிக்கெட் எடுக்க முடியாது; அமைச்சர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Only online No more counter tickets says TN minister Kadambur Rajuகடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் நிலவும் பல குளறுபடிகளை களைய திரைத்துறை சங்கங்கள் முயன்று வருகின்றன.

இதற்காக பல ஆலோசனை கூட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு தியேட்டரில் டிக்கெட் எடுப்பதில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க முடியாது நிலையை உருவாக்கியுள்ளது.
அதாவது இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் எடுக்க வேண்டுமாம்.

இதனால் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அதிகமான விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடியாது.

மேலும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மட்டுமின்றி விலையையும் அரசு சார்பில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு சேவை கட்டணம் ரூ. 30 இதுவரை உள்ளது. அந்த கட்டணம் குறைக்கப்படுமா? எனத் தெரியவில்லை.

Only online No more counter tickets says TN minister Kadambur Raju

சாஹோ-வுக்கு பயந்தது வேஸ்ட்டா போச்சே.; காப்பான் மைண்ட் வாய்ஸ்

சாஹோ-வுக்கு பயந்தது வேஸ்ட்டா போச்சே.; காப்பான் மைண்ட் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaappan reaction towards Saaho movie negative reviews கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் ரூ. 350 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரபாஸின் சாஹோ படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் காப்பான் ரிலீசை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் சாஹோ படம் மோசமான விமர்சனங்களை தமிழகத்தில் சந்தித்து வருகிறது.

சாஹோ படத்திற்கு பயந்து காப்பானை தள்ளி வைத்தது வீணாகிவிட்டதே என காப்பானின் மைண்ட் வாய்ஸ் கோலிவுட்டில் கேட்கிறதாம்.

ஆனாலும் சாஹோ படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ. 300 கோடியை வசூலை எட்டியுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Kaappan reaction towards Saaho movie negative reviews

2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…

2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2pointO making records in Reservation in Chinaலைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் இணைந்த படம் ‘2.0’.

ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்தாண்டு உலகமெங்கும் வெளியாகி ரூ. 700 கோடியை வசூலித்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 6ம் தேதி சீனா நாட்டில் மட்டும் 56000 திரைகளில் (47000 தியேட்டர்களில்) வெளியாக உள்ளது.

இதற்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது.

இதுவரையில் நடந்துள்ள முன்பதிவில் மட்டும் ரூ 1 கோடியை வசூலித்துள்ளதாம்.

ஒரு படத்தின் முன்பதிவிற்கே இந்த வசூல் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியால் மட்டுமே நிகழும்….

சீனாவிலும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது இந்திய சினிமாவிற்கே பெருமைதானே..

Rajinis 2pointO making records in Reservation in China

அழியும் அமேசான் காடுகள்.; போராளிகளை போற்றும் ஓவியர் ஏபி.ஸ்ரீதர்

அழியும் அமேசான் காடுகள்.; போராளிகளை போற்றும் ஓவியர் ஏபி.ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Artist AP Sridhar encourages Amazon rain forest rescue volunteersஉலகிலேயே மிக பெரிய காடுகளாக அமேசான் காடுகள் விளங்குகிறது.

உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.

இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது.

இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.

இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்து வருகிறார்.

இவை அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் என்பதில் ஐயமில்லை.

Artist AP Sridhar encourages Amazon rain forest rescue volunteers

Artist AP Sridhar encourages Amazon rain forest rescue volunteers

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் அல்லு சிரிஷ் !!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் அல்லு சிரிஷ் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தெலுங்குத் திரையுலகின் பிரபல நாயகன் அல்லு சிரிஷ் , மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ். இப்படத்தினை கமல் போரா (Shanti Telefilms), லலிதா தனஞ்செயன் (BOFTA Media Works), மற்றும் பிரதீப் குமார் (Diya Movies)ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தினை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் விஜய் மில்டன்.

தயாரிப்பாளர் Infiniti Film Ventures கமல் போரா கூறியது
“இந்தப்படத்தின் மூலம் சிறப்பான பல விசயங்கள் இணைவது எனக்கு பெரு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. விஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் இப்படம் Infiniti Film Venturesக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமையுமென்று நம்புகிறேன். தற்போது தெலுங்கு திரையுலக பிரபலம் அல்லு சிரிஷ் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் வலு கூட்டியுள்ளது. நாங்கள் கதை கேட்ட கணத்திலேயே இந்தப்படத்தின் நாயக பாத்திரத்தின் வலிமை புரிந்தது. மேலும் அத்துடன் இணைந்திருக்கும் அனைத்து பாத்திரங்களும் கதைக்கு வலு சேர்ப்பதாகவும் படத்தை பரபரவென நகர்த்தி செல்வதாகவும் இருந்தது. அல்லு சிரிஷ் கதாப்பாத்திரம் ஆச்சர்யம் தரக்கூடிய ஒரு பாத்திரமாக இப்படத்தில் இருக்கும் அவர் இந்தப்பாத்திரத்தை ஏற்றது படக்குழுவிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவருடைய சினிமா வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால், அவர் தன் பாத்திரங்களை வெகு கவனமாகவும் தரமான படங்களை மட்டுமே செய்து வருவது தெரியும். இந்தப்படம் அவரது படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இதுவரை இல்லாத பெயரை அவருக்கு பெற்றுத்தரும்” என்றார்.

அல்லு சிரிஷ் தனது பாத்திரம் பற்றி கூறியது..
“இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒரு அப்பாவி கிராமத்து மனிதன், மற்றும் ஒரு மதிப்புமிக்க குடுமபத்திலிருந்த வந்த மனிதனின் பாத்திரம்”. சற்றே சிரிப்புக்கு பின் ” இதற்கு மேல் சொன்னால் நான் படம் பற்றிய தகவல்களை உளறிவிடுவேன்” என்றார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஷீட்டிங்க் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக கோகர்னா, தியூ – தாமன் ஆகிய கடற்கரை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழிநுடப் கலைஞர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More Articles
Follows