தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இப்படம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீசானது.
இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது.
எப்போதும் ரஜினி படங்கள் வெளியானால் அவரது படமே அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும். ஆனால் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்திவிட்டதாக சில பணம் பெற்றுக் கொண்டு வதந்திகளை பரப்பினர்.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டது.
அதில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பேசியிருக்கிறார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.
அதில்… “வரும் ஞாயிற்றுக் கிழமையோடு அதாவது பேட்ட படம் வெளியான 11 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும். இது உண்மையான நிலவரம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளருக்கு அனைவருக்கும் லாபம் கொடுத்துள்ளது. எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடனிருந்தார்.
Rajinis Petta is crossing 100 Crore collection in TN alone