Exclusive விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

Exclusive விஜய் – அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்கும் ரஜினி.; நிலைமை தலைகீழ் ஆச்சே.. இனிமே இப்படித்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் என்றும் மவுசு குறையாத சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ரஜினிகாந்த்.

இவரின் பட வெற்றிக்காக திரையுலகமே காத்திருக்கும். காரணம் இவரால் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் கேன்டீன் பாய் வரை லாபம் அடைவர்.

அதுபோல் திரையுலகினரும் ரஜினி படத்திற்காக காத்திருப்பார்கள்.

அதாவது ரஜினியுடன் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் இளம் நடிகைகளை தங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்படுவர் இளம் நடிகர்கள்.

அப்போதுதான் தன் படத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்பதும் இவர்களின் கணக்காகும்.

ரஜினியுடன் நடித்த மீனா முதல்… இந்த கதை தொடர்கிறது.

ரஜினியின் ‘சந்திரமுகி’ படத்தில் நடித்த நயன்தாராவை ‘சிவகாசி’ படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் ஆடவைத்தனர்.

‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகாவை ‘மாஸ்டர்’ படத்தில் தன் ஜோடியாக்கினார் விஜய்.

‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுஷ்கா ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் நாயகினார்

அதுபோல் ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி ‘வலிமை’ படத்தில் அஜித்தின் நாயகினார்.

இந்த நிலையில் தற்போது நிலைமை மாறிவிட்டது.

ரஜினிக்காக காத்திருந்த அஜித் விஜய் … என்பது இப்போது மாறி… விஜய் அஜித்தின் வெற்றிக்காக காத்திருக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த்.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெற்றியடையவே அப்பட இயக்குனர் சிவாவுக்கு கால்ஷீட் கொடுத்தார் ரஜினி.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியதால் நெல்சனுக்கு வாய்ப்பளித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தலீவரே இப்படியாச்சே.? இனி இப்படித்தானா தலைவா.?

Rajinikanth’s director selection based on Ajith and Vijay film ?

ஒரே கலரில் 5 நாய்கள்.. ஆனால் 10 நாட்களில் உயரத்தில் மாற்றம்.. அதான் PLAN B போட்டோம் – இயக்குனர் சரோவ்

ஒரே கலரில் 5 நாய்கள்.. ஆனால் 10 நாட்களில் உயரத்தில் மாற்றம்.. அதான் PLAN B போட்டோம் – இயக்குனர் சரோவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது.

நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும்.

சமீபத்திய உரையாடலில், நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் சரவ் சண்முகம் கூறும்போது.., இந்த படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு பயிற்சி கொடுத்து பணியாற்றியுள்ளோம் என்றனர்.

100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய் பகிர்ந்துகொண்டதாவது….

இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது.

100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெயர்னர் ராஜவிற்கு ஒரு பெரிய நன்றி.

மேலும் இயக்குனர் சரவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியது எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி.”

இயக்குனர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது…

“நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படபிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.

இந்த கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம். ட்ரெயர்னர் ராஜா , நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார், அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார்.

படத்தில் விளையாட்டு போட்டி ஒரு பிரதானமான விஷயம், நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்க சொன்னேன். இது உலகம் முழுக்க உள்ள ஒரு சாம்பியன்ஷிப் போட்டி. அது இங்கும் நிகழ்கிறது.

ஓ மை டாக் திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டி சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பை கூறும் ஒரு உணர்வு பூர்வமான கதை. அர்ஜூன், சிம்பாவை சந்திக்கிறான், அது அவனை காப்பாற்றுகிறது, அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான்.

பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களை கடந்து, வெற்றிப்பாதையை அடைகிறார்கள்.

“ஓ மை டாக்” திரைப்பட தயாரிப்பு: ஜோதிகா-சூர்யா, இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB Talkies-ன் S. R. ரமேஷ் பாபு, இசை: நிவாஷ் பிரசன்னா, ஒளிப்பதிவு: கோபிநாத்.

இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், ப்ரைம் வீடியோவில், இந்தியா உட்பட 240 நாடுகளின் பகுதிகளில் ஏப்ரல் 21, 2022-ல் பிரீமியர் ஆகவுள்ளது.

Actor Arun Vijay narrates the paw-fect experience of working in Oh My Dog

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய தலைவர் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் சர்ச்சையாகியுள்ளன.

திமுக விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தனர்.

எனவே பாஜக பலரும் அவர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர்
தினா தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்…

மோடிஜி பற்றி எழுதிய புத்தகத்தில் இசைஞானி இளையராஜா தலையங்கம் எழுதியதில் என்ன தவறு உள்ளது?
பிடித்தவர்கள் கொண்டாடுங்கள்.
பிடிக்காதவர்கள் அமைதியாக இருப்பது நல்லது.”. என இசையமைப்பாளர்
தினா தன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/p/Ccczdprps73/?igshid=MDJmNzVkMjY=

Music director Dhina supports Ilaiyaraaja

சிபி – தன்யா இணைந்த ‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி இதோ

சிபி – தன்யா இணைந்த ‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இன்றைய திரை உலக சூழலில் பான் இந்திய படங்களுக்கு வரவேற்பு இருப்பது புதிய டிரெண்ட் என்றால், தரமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் படங்களுக்கு எப்போதும் டிமாண்ட்டும், வரவேற்பும் இருக்கிறது.

தமிழ் திரை உலகில் ஒரு திரைப்படம் உருவான பிறகு, அதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் என ஏதேனும் ஒரு வகையில் வெளியாகி ரசிகர்களை கவரும்.

‘மாயோன்’ பட குழுவினர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான முறையில் சிந்தித்து, இந்தியாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் முதன் முதலாக பார்வை சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படைப்பை உணர்ந்து கொள்ளும் வகையில் ‘மாயோன்’ பட டீஸரை பிரத்யேக ஒலிக்குறிப்புடன் வெளியிட்டனர். பட குழுவினரின் இந்த புதிய முயற்சிக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது.

இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே..’ எனத்தொடங்கும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியாவில் இடம்பெற்ற ‘ழ்’ என்ற சொல் குறித்து இணையவாசிகளிடம் பெரிய அளவில் விவாதமும் அரங்கேறியது.

பாடல் முழுவதும் பரவிய ஆன்மீக உணர்வு, திரையிசை ரசிகர்களை துல்லியமாக சென்றடைந்து, பாடல் வெளியான குறுகிய காலத்தில் மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை சென்றடைந்து சாதனை படைத்தது.

இதற்குப் பிறகு ‘மாயோன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் அதிகரித்துவிட்டது. படக்குழுவினர் ‘மேஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா இசையில் உருவான ‘ சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர்.

இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் ‘பகவான் கிருஷ்ணரின் ஆந்தம்’ என குறிப்பிட்டு இந்த பாடலையும் இணையத்தில் கொண்டாடினர்.

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கினர். இந்த செய்தி இணையத்தில் வெளியானபோது மக்களிடத்தில் வழக்கத்திற்கு மாறாக படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மாயோன்’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணர்ந்து நுகரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தின் வெளியீட்டை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, என். கிஷோர் (இயக்கம்), பாடல்களுக்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

The Screening Date of Maayon is announced

TRIP FACTORY சென்னை திறப்பு விழாவில் நடிகர் பிரசன்னா

TRIP FACTORY சென்னை திறப்பு விழாவில் நடிகர் பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trip Factory சுற்றுலா நிறுவனம் உலகம் முழுவதும் பதினேழு நிறுவனங்களை இயக்கி வருகிறது.

இதில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தளத்திருக்குக்கும் சுற்றுலா செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் .

Trip Factory இந்தியா முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு உள்ளது.

கோயம்பத்தூர் , ஊட்டியை தொடர்ந்து சென்னை அடையாரில் தனது மூன்றாவுது கிளையை திறந்துள்ளது.

இதை திரைப்பட நடிகர் பிரசன்னா திறந்து வைத்தார்.

Trip Factory யின் நிர்வாக இயக்குநர் திரு. *JP* அவர்கள் கூறியதாவது.
எங்களின் பல கிளைகள் சென்னையில் வருங்காலத்தில் உருவாக உள்ளது.

Trip Factory சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கும் .

சுற்றுப்பயணங்கள் மட்டும் இல்லாமல் வியாபார வளர்ச்சியின் ரீதியான பயணங்களையும் மிகச் சிறப்பான முறையில் செய்து தருகிறோம்.

Trip Factory யின் சுற்றுலா package மற்ற சுற்றுலா நிறுவனங்களை விட மிகவும் குறைவானது குறிப்பிடத்தக்கது

வாடிக்கையாளர்களின் தேவையே எங்களின் சேவை..!

என்றென்றும் உங்களின் சேவையில் Trip Factory.
என்றென்றும் நன்றியுடன்
*JP*
(நிர்வாகஇயக்குநர்)
Trip Factory.

Address: No:44, Basement, Krishna Enclave, Gandhi Nagar,1st Main Road Adyar, Chennai-600020

Trip factory new branch launched by actor Prasanna

‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்டார் வடிவேலு

‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்டார் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.

இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.

இந்த நூலை மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளியிட்டார்.

தற்போது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.

Actor vadivelu released director mari selvaraj new book

More Articles
Follows