சிரஞ்சீவி அறக்கட்டளை மீது புகார்.; ரஜினி தங்கைக்கு ஜெயில் தண்டனை விதித்த கோர்ட்

சிரஞ்சீவி அறக்கட்டளை மீது புகார்.; ரஜினி தங்கைக்கு ஜெயில் தண்டனை விதித்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜசேகர்.

1980-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார்.

அவர் நடத்தும் ரத்த வங்கிக்குத் தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாகக் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராஜசேகரும் ஜீவிதாவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து, சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடக்கும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகரும் ஜீவிதாவும் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17- வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், 12 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சாய் சுதா நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையைத் தவறாகப் பேசியது நிரூபணம் ஆனதால் ராஜசேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டியதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், நடிகை ஜீவிதா ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajasekhar and Jeevitha receive one year jail sentence

சமந்தாவை போல் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ நடிகை

சமந்தாவை போல் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

இதை தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘டாணா’ உள்ளிட்டட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபமகாலமாக தமிழில் அவர் பெரிய அளவில் படங்களை நடிப்பதில்லை.

இந்நிலையில், நடிகை நந்திதா ‘பைப்ரோமியால்ஜியா’ என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை நந்திதா ஸ்வேதா கூறுகையில், ‘‘பைப்ரோமியால்ஜியா’ என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட என்னுடைய தசைகளில் இது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால், அதிக கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது. சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும். மேலும், மோசமாக நினைவாற்றலையும் பாதிக்கும். இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, என்னுடைய அடுத்தப் படத்துக்காக உழைத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், நடிகை சமந்தா இதே போன்ற அறிகுறி உடைய ‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nandita Swetha Suffering From Fibromyalgia Disease

‘ஐ எம் சோ ப்ராப்ளம்…’ சந்தானம் படத்தின் சாங் ரிலீஸ் அப்டேட்

‘ஐ எம் சோ ப்ராப்ளம்…’ சந்தானம் படத்தின் சாங் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடிக்க, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஐ அம் சோ பிராப்ளம்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

the team of dd returns announced the second song today release

வாடி போஜனுடன் யோகிபாபு இணைந்து வைக்கும் ‘சட்னி சாம்பார்’

வாடி போஜனுடன் யோகிபாபு இணைந்து வைக்கும் ‘சட்னி சாம்பார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை’ திரைப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியவர்.

இவர் தற்போது “சட்னி சாம்பார்” என்ற வெப் தொடரை இயக்குகிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் வாணிபோஜன், ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“சட்னி சாம்பார்” வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இதையடுத்து இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சில் நடிகர் யோகிபாபு பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும் என்றார்.

Yogi Babu & Vani Bhojan come together for Radha Mohan’s ‘Chutney Sambar’

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒன்றை விஜய்ஆண்டனி செஞ்சிட்டே இருப்பார்.; ஆச்சர்யத்தில் ஆர்யா

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒன்றை விஜய்ஆண்டனி செஞ்சிட்டே இருப்பார்.; ஆச்சர்யத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’.

ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது…

“இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம்.

நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார்.

அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் சிறந்த பணியைக் கொடுக்கக் கூடியவர்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்.

In every movie Vijay Antony tries new ideas says Arya

ஹீரோயின்ஸ் கூட ரொமான்ஸ் செய்ய விடாமல் சதி பண்றாங்க… – விஜய் ஆண்டனி

ஹீரோயின்ஸ் கூட ரொமான்ஸ் செய்ய விடாமல் சதி பண்றாங்க… – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’.

ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…

“பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது.

கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல.

எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு பத்திரிகையாளர்கள் நீதி கிடைக்க செய்ய வேண்டும்.

ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலாஜி, எலோன் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் (உலகில் மிகப்பெரிய பணக்காரர்) எலான் மஸ்க் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது.

இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி”.

Vijay Antony emotional complaint about his romantic scenes

More Articles
Follows