இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ண கூடாது; வரலட்சுமிக்கு ராதிகா ஆதரவு

இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார்…

“இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம்.

இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

Radikaa Sarathkumar receives award for her achievements in the UK Parliament

கைக்குழந்தையுடன் ‘டாடா’.; கவின் உடன் கைகோர்த்த ‘பீஸ்ட்’ பட நடிகை

கைக்குழந்தையுடன் ‘டாடா’.; கவின் உடன் கைகோர்த்த ‘பீஸ்ட்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நட்புனா என்னானு தெரியுமா’ & ‘லிஃப்ட்’ படங்களின் மூலம் பெரிய திரை ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவரின் அடுத்த படத்திற்கு ‘டாடா’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

இதில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார்.

‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ் மற்றும் ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நடிகர் கவின் ட்விட்டரில் பகிர்ந்து, ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கைக் குழந்தையுடன் கவின் இருக்கிறார்.

Kavin and Aparna Das joins for Dada

‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய பாமக அன்புமணி

‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய பாமக அன்புமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று பெரும் வசூலை ஈட்டியது.

அல்லு அர்ஜுனிடம், முன்னணி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பர படத்தில் நடிக்க அழைத்துள்ளனர்.

அந்த விளம்பர படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு பல கோடி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் இந்த செயலை பாராட்டி பாமக இளைஞரணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது.

நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.

புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அல்லு அர்ஜுனின் செய்தி இதோ…

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்.

கோடிகளில் கொட்டி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்.; ‘புஷ்பா’ நடிகர் பிடிவாதம்

PMK leader Anbumani Ramadoss praises Allu Arjun

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படத்தின் ஒன்லைன் இதுதானா.?

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் படத்தின் ஒன்லைன் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி & பாகுபலி 2 படங்களைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய படம் ‘ஆர் ஆர் ஆர்’.

இப்படம் மார்ச் 25ல் ரிலீசாகி உலகளவில் ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.

இப்படம் ரிலீசாவதற்கு முன்பே மகேஷ்பாபு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார் ராஜமௌலி.

ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் படத்தின் பட்ஜெட் ரூ 400-450 கோடி எனவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆப்பிரிக்க காடுகளில் படமாக்கப்பட உள்ளதாம்.

ரஜினி-கமலை இணைக்க ராஜமௌலி திட்டம்..; இந்த ட்விஸ்ட் செம மாஸ்..

ஒரு புதையலை தேடி நாயகன் ஆப்பிரிக்க காடுகளுக்கு செல்வதாக கதைக்களம்
அமைக்கப்பட்டு உள்ளதாம்.

வழக்கம்போல இப்பட கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

தற்போது இதன் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

All you need to know about Mahesh Babu and SS Rajamouli’s new film

விஷால் – எஸ்.ஜே.சூர்யா – ஜிவி பிரகாஷ் இணையும் பான் இந்தியா பட அப்டேட்

விஷால் – எஸ்.ஜே.சூர்யா – ஜிவி பிரகாஷ் இணையும் பான் இந்தியா பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டது.

இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளார்.

ரஜினியை மிரட்டிய வில்லன் பெயரை படத்தலைப்பாக்கிய விஷால்-சூர்யா

ஜி வி பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகவுள்ளது. ‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இப்படத்தையும் தயாரிக்கிறது.

தற்போது விஷால் ‘லத்தி’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இதன் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதை சென்னையில் 1970களில் நடப்பதால் அன்றைய சென்னையைப் போன்று செட் போடவிருக்கிறாராம் கலை இயக்குனர் உமேஷ்.

Madras of 1970s recreated in Chennai for Vishal’s new film Mark Antony

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் சூர்யா – ஜோதிகாவின் மகன்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் சூர்யா – ஜோதிகாவின் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது.

இவரின் அடுத்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேசாத படிக்காத நடிக்காத என சூப்பராக சொதப்பிய சூர்யா இன்று உலகத்தையே ஜெயிக்கிறான்..; சிலிர்க்கும் சிவகுமார்

இந்த நிலையில் இதில் நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியின் மகன் தேவ் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். ஜோதிகா தயாரிக்கிறார்.

Is Suriya’s son Dev debuting as actor in this film?

More Articles
Follows