தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக் கூடியவர் வரலட்சுமி.
இவர் பெண்கள் மீதான பல அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.
தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தன்னிடம் வைத்திருப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.
தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
சினிமா சான்ஸ் வேண்டும் என்றால். தயாரிப்பாளர்களுடன் மற்றும் இயக்குநர்களிடமும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள சொன்னதாகவும், தான் அப்படி செய்ய மாட்டேன் அதற்காக சினிமா சான்ஸ் போனாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பலர் பேசிய ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்காப்புக்காக பெண்கள் தங்களையே தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், வரலட்சுமிக்கு ஆதரவாக ராதிகா சரத்குமார், ”சரியாக சொல்லியிருக்கிறாய் வரு… உனக்கு பலமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.