தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்துக் கொள்கிறார் என்றால் அங்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மனதில் பட்டதை தைரியமாக பேசும் சுபாவம் அவருக்கே உரியது.
இந்நிலையில் அவரின் ஒரு பேட்டியில் தற்போது நடந்து வரும் சினிமா ஸ்டிரைக் மற்றும் விஜய், அஜித் படங்கள் வசூல் பற்றி பேசினார்.
அவர் பேசும்போது….
ஹீரோக்களின் சம்பளம் உயர ஒரு வகையில் தயாரிப்பாளர்களும்தான் காரணம்தான். ஒரு தயாரிப்பாளர் ஒரு தொகையை கொடுக்க தயாராக இருக்கும் போது அதைவிட அதிகமாக நான் தருகிறேன் என கூறி படத்திற்கு புக் செய்கின்றனர்.
பழம்பெரும் தயாரிப்பாளர்கள் இப்படி செய்வதில்லை. பணத்தை எப்போதும் ரொட்டேசனில் வைத்திருப்பவர்களே இப்படி செய்கின்றனர்.
விஜய்யின் மெர்சல் படம் 90 கோடியில் தயாரிக்கப்பட்டது. விஜய் படங்கள் எல்லாம் பெரும்பாலும் குறைந்த பட்சம் ரூ 15 கோடி லாபத்தை கொடுத்து விடுகிறது.
மெர்சல் பட்ஜெட் 90 கோடிதான். ஆனால் டைரக்டர்தான் 120 கோடியை தாண்டி செலவு செய்ய வைத்துவிட்டார்.
முக்கியமாக சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான். அதற்கு உதாரணமாக, அஜித்தின் விவேகம் படத்தை சொல்ல்லாம்.
அதுல ஒரு கண்றாவியும் இல்லை. படத்துல அஜித்தை 100 பேர் சுடுகின்றனர், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை.
ஆனால் அவர் 100 பேரை சுடுகிறார் எல்லாரும் இறந்துடுவாங்க. அதற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு ரொம்ப அநியாயம்” என பேசியுள்ளார்.
Producer K Rajan talks about Vivegam loss and Mersal hit