தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.
இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.
இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது.
இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.
வட இந்தியாவில் அகோரிகள் மத்தியில் மனிதக்கறி என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளார் விஜய்ஸ்ரீ.
தமிழகத்தில் இல்லாத ஒன்றை இயக்குனர் காட்சிகளாக வைத்திருப்பது நெட்டிசன் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நரபலி கொடுத்த மனித உடலை கறி போல வெட்டி துண்டு துண்டாக சாப்பிட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர் 2 தமிழக பெண்கள்….
சடலங்களை 56 துண்டுகளாக வெட்டி மாமிசம் சாப்பிட்டதாக கேரள தம்பதியினர் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதன்மூலம் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படத்தின் காட்சிகள் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Powder movie human meat controversy now happened at Kerala
Here’s #Powder official trailer