தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் முக்கியமானவர் நடிகர் வையாபுரி.
இவர் கமல், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
ஆனால் இதுவரை ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
தற்போது விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பவுடர்’ படத்தில் நாயகி அனித்ராவின் தந்தையாக நடித்துள்ளார்.
இந்த படம் தனக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் ‘பவுடர்’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருந்தார். இந்த படம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.
இந்த நிலையில் ரஜினியுடன் நடிப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்…
“ரஜினியை ஒருமுறை சந்தித்தேன்.. அவர் வாங்க வையாபுரி.. கமல் கூட மட்டும் தான் நடிப்பீர்களா? என என்னிடமே கேட்டார்.
ரஜினியை பொறுத்தவரை அவர் தன் இயக்குனர்களிடம் இவரை இந்த படத்தில் நடிக்க வையுங்கள்… அவரை நடிக்க வைக்க வேண்டாம் என எதையுமே சொல்ல மாட்டார்.
இயக்குனரின் முடிவே என இருப்பார் ரஜினிகாந்த். எனவே அவரிடம் வாய்ப்பு கேட்க முடியாது. இப்போதும் கூட ‘ஜெயிலர்’ படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நெல்சனிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் எனக்கான கேரக்டர் அந்த படத்தில் இல்லை என்கிறார் நெல்சன்” என்றார் நடிகர் வையாபுரி.
Vaiyapuri asking Chance to Act with Rajini