தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வையாபுரி.
விஜய்ஸ்ரீ ஜி இயக்கிய ‘பவுடர்’ வித்தியாசமான கோணத்தில் நகைச்சுவை செய்யாமல் அனித்ராவின் தந்தையாக நடித்திருந்தார்.
இந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இதனையடுத்து ஜெயப்பிரகாஷ் இயக்கிய ‘தலைக்கூத்தல்’ படத்தில் சமுத்திரகனி, வசுந்த்ரா, கதிர், ஆடுகளம் முருகதாஸ், கலைச்செல்வன், வையாபுரி ஆகியோர் நடித்து இருந்தனர்.
இதில் பெண் வேடமிட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார் வையாபுரி. இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது
வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டினார்கள்!
மேலும் “இந்த ஆண்டுக்கான சிறப்பு தோற்ற விருதை தாங்கள் பெறுவீர்கள்” என உற்சாகப்படுத்தினர்!
இந்தப் படத்தில் நடித்ததற்காக விருது ஒன்று தனக்கு கிடைத்தால், அந்த விருதை ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்வேன் என்றார் வையாபுரி.
Submission to fans and media if awarded actor Vaiyapuri