தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.
தனுஷுடன் ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 9ல் திரைக்கு வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க…’ என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவியதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்தன.
தற்போது ‘பண்டாரத்தி புராணம்…’ என்ற பாடலில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிகளை நீக்கும் வரை ‘கர்ணன்’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரி மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் ரவி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் மாரி செல்வராஜ், திங்க் மியூசிக் இந்தியா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
எனவே ‘கர்ணன்’ பட ரிலீசில் சிக்கல் உருவாகியுள்ளது.
Plea in HC seeks ban on Dhanush’s Karnan