தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என இரு வெற்றிப் படங்களை கொடுத்தாலும், கபாலி வாய்ப்பு வந்தவுடன் இந்தியா முழுவதும் பிரபலமானார் இயக்குனர் ரஞ்சித்.
தற்போது டீசர் மற்றும் பாடல்கள் பட்டைய கிளப்பி வரும் நிலையில், உலகம் முழுக்க தெரிந்த நபர் ஆகிவிட்டார் எனலாம்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு மலையாள பத்திரிகைக்கு கபாலி குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது….
- ரஜினி படம் வாய்ப்பு வந்தவுடன் டென்ஷனாக இருந்தேன். ஆனால் ரஜினியோ இது உங்க படம். தைரியமாக நினைச்சப்படியே செய்யுங்க.. நல்லதே நடக்கும்’ என்றார்.
- கபாலியில் ரஜினி மூன்று விதமாக தோன்றி ரசிகர்களை மகிழ்விப்பார்.
- இதில் சென்டிமெண்ட் இருக்கும். ஆக்ஷன் இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கு உரிய அனைத்தும் இருக்கும்.
- இதில் உள்ள பாடல்கள் வழக்கமான பாடல்களாக இருக்காது. படத்திற்கு அவசியமான பாடல்களாக அவை இருக்கும்.
- சகஊழியரையும் அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொண்டார்.
- நிஜத்திலும் அவர் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார். யாராலும் அவரை நிச்சயம் வெறுக்க முடியாது.
- ரஜினி சாரை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம்.
- ஆனால் அதைவிட பல மடங்கு அவரை நேரில் கண்டு அவரது எளிமை, பண்பு ஆகியவற்றை உணர்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.