கபாலிக்காக காத்திருந்த தனுஷ்-சிம்பு படங்கள் ஆகஸ்ட்டில் ரிலீஸ்

கபாலிக்காக காத்திருந்த தனுஷ்-சிம்பு படங்கள் ஆகஸ்ட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and dhanushபெரும் எதிர்பார்ப்பில் உருவான ரஜினியின் கபாலி, ஒருவழியாக கடந்த ஜுலை 22ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

அன்றைய தினம் வேறு எந்த படங்களும் தென்னிந்தியாவில் வெளியாகவில்லை.

தற்போது மற்ற படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

ஆகஸ்ட்டில் 5ஆம் தேதி ஜீவா, நயன்தாரா நடித்துள்ள திருநாள் வருகிறது.

இதனையடுத்து ஆகஸ்ட் 12இல் தொடரி மற்றும் விஜய்சேதுபதியின் தர்மதுரை ரிலீஸ் ஆகிறது.

இதன்பின்னர், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, நயன்தாராவின் செல்வி, விக்ரம்பிரபுவின் வாகா, மோகன்லாலின் நமது, கேஎஸ் ரவிக்குமாரின் முடிஞ்சா இவன புடி, ராஜீமுருகனின் ஜோக்கர், அட்டக்கத்தி தினேஷின் உள்குத்து மற்றும் மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதுவரை வந்துள்ள தகவல்களின் படி மொத்தம் ஒரு டஜன் படங்கள் ஆகஸ்ட்டில் வெளியாகவுள்ளதாம்.

கபாலி க்ளைமாக்ஸ்க்கு ரஜினி ஓகே சொல்ல இதான் காரணம்

கபாலி க்ளைமாக்ஸ்க்கு ரஜினி ஓகே சொல்ல இதான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali press meetரஜினிகாந்த் நடித்து வசூலில் சக்கை போடு போடும் கபாலி படத்தின் வெற்றி குறித்து பேச பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

இதற்கான சந்திப்பு, சென்னையிலுள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது….

“இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினி சாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

க்ளைமாக்ஸ் காட்சிக்கு ரஜினி எடுத்த தைரியமான முடிவே காரணம்.

டைகர் ஹரி துப்பாக்கியால் சுடும் காட்சியை நீக்க முடிவு செய்தோம்.

ஆனால் படம் பார்த்துவிட்டு சென்ற ரஜினி, இரண்டு மணி நேரம் கழித்து போன் செய்து அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் இருக்கட்டும்.

அது இல்லையென்றால் வழக்கமான ரஜினி படமாக அது மாறிவிடும்.” என்றார்.

ஆறு நாட்களில் அசர வைக்கும் கபாலி வசூல்; நெருங்குடா… முடியுமா.?

ஆறு நாட்களில் அசர வைக்கும் கபாலி வசூல்; நெருங்குடா… முடியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali cross rs 320c in 6 days worldwideகபாலி.. பேர கேட்டாலே பாக்ஸ் ஆபிஸே ச்சும்மா அதிருமுல்ல… என்கிற அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது.

இப்படம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் என்ன? என்பதை தயாரிப்பாளர் தாணுவே உறுதி செய்துள்ளார்.

கபாலி படத்தின் சக்ஸஸ் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

ரஜினி, ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா தவிர மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் அங்கே ஆஜர்.

இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 320 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இச்சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் சென்னையில் மட்டும் 7 நாட்களில் ரூ. 7 கோடியை எட்டியுள்ளதாம்.

இப்படத்தின் வசூலை வேறு படங்கள் நெருங்குமா? முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவேளை அடுத்த ரஜினி படம் வரும்போது சாத்தியமாகலாம்.

ஜி.வி.பிரகாஷ்-ராஜேஷ் கூட்டணியில் இணையும் சந்தானம்

ஜி.வி.பிரகாஷ்-ராஜேஷ் கூட்டணியில் இணையும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ப்ரூஸ் லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படக் காட்சிகளை மலேசியாவில் படமாக்கினர்.

இந்நிலையில் இப்படத்தில் ராஜேஷின் ஆஸ்தான நடிகர் சந்தானம் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம்.

என்னதான் தனி ஹீரோவாக சந்தானம் மணக்க ஆரம்பித்தாலும் தனக்கு திருப்புமுனை கொடுத்த இயக்குனரின் படத்தில் நடிப்பது பாராட்டுக்குரியதுதான்.

விரைவில் ஜெய்-அஞ்சலி காதல் திருமணம்..?

விரைவில் ஜெய்-அஞ்சலி காதல் திருமணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai anjaliசினிமாவில் இணைந்து நடிக்கும்போது ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விடுகிறது.

எனவே திரையில் இணைந்த இவர்கள் நிஜ வாழ்விலும் இணைகிறார்கள்.

இதுபோல் பல நட்சத்திர தம்பதிகளை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது நட்சத்திர தம்பதிகள் ஜெய் மற்றும் அஞ்சலி இணைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்து மீண்டும் பலூன் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தனியார் டிவி ஒன்று தெரிவித்துள்ளது.

அஜித்துக்காக விக்ரமுக்கு கல்தா கொடுக்கும் காஜல்?

அஜித்துக்காக விக்ரமுக்கு கல்தா கொடுக்கும் காஜல்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal agarwalதிரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கருடா படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனார்.

சில்வர்லைன் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படாமல் தாமதம் ஆகிவருகிறது.

இதனிடையில் சிவா இயக்கும் அஜித்தின் ஏகே 57 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் காஜல்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் துவங்கவுள்ளதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்படும் என தெரிகிறது.

எனவே அஜித் படத்தில் நடிக்கவிருப்பதால் விக்ரம் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகக்கூடும் எனத் தெரிகிறது.

More Articles
Follows