தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படம் முடிந்த கையோடு சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்கியிருந்தார் சிவா..
இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் திடீரென ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சிவா இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
எனவே அண்ணாத்த படத்திற்கு பிறகு சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் திடீரென வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வெளியானது. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்க வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் நடந்தது.
எனவே வாடிவாசல் படம் தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க சென்றார் சூர்யா.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கன்னியாகுமரி நடந்து வருகிறது.
இதன்பின்னர் ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் ஒரு படத்திலும் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இவை இல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம் 3’ திரைப்படத்திலும் ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
எனவே சூர்யா சிவா இணையும் படத்தை ஞானவேல்ராஜா தயாரிப்பாரா.? இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
ஆனால் கண்டிப்பாக இந்த படம் கைவிடப்படாது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என தெரிய வத்துள்ளது.
இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதால் அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதால்தான் இந்த தாமதம் எனவும் தெரிய வந்துள்ளது.
New update of Surya starrer directed by Siva