திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.

இதனையடுத்து இருவரும் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மற்றும் கோலிவுட் பிரபல நட்சத்திரங்களும் பங்குபெற்று தம்பதியினரை வாழ்த்தினர்.

இதனையடுத்து மறுநாள் அதாவது நேற்று ஜூன் 10ஆம் தேதி இருவரும் திருப்பதி சென்று திருமலையானை தரிசித்தனர்.

ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்துக் கொண்டனர். அப்போது அங்கே மணமக்களுக்கு போட்டோ ஷுட் நடத்தினர்.

கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

தற்போது இது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என விசாரணை நடத்த உள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாம் தேவஸ்தான நிர்வாகம்.

Newly wed couple Nayanthara and Vignesh Sivan break the rules in Tirupati

சொன்னதை செய்தார் லாரன்ஸ்.; ‘ஜெய்பீம்’ பட நிஜ பார்வதி அம்மாளுக்கு உதவினார்

சொன்னதை செய்தார் லாரன்ஸ்.; ‘ஜெய்பீம்’ பட நிஜ பார்வதி அம்மாளுக்கு உதவினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை ஊடகங்கள் மூலம் ராகவா லாரன்ஸ் அறிந்து கொண்டார்.

பார்வதி அம்மாவுக்கு அவரது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்ததை அனைவரும் அறிவீர்கள்.

சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்துவந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தகவல் வெளியானது.

பார்வதி அம்மாவின் வறுமை நிலையை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் அப்போது தெரிவித்திருந்தார்.

அதேநேரம் அவர் வாக்குக்கொடுத்தபடி, பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்குவது என்று முடிவு செய்து, அதன்படி, பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார்.

பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர். த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார் லாரன்ஸ்.

Lawrence did as he was told .; ‘Jaibhim’ helped real Parvati Ammal

இளையராஜா இசையில் இணையும் வெங்கட் பிரபு & நாகசைதன்யா

இளையராஜா இசையில் இணையும் வெங்கட் பிரபு & நாகசைதன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார்.

இந்த படம் உலக அளவில் ரூபாய் 117 கோடியை வசூலித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘மன்மதலீலை’ என்ற படத்தை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு.

இந்த படமும் ரசிகர் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.

இந்த இரண்டு படங்கள் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது வெற்றிக்காக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணைய உள்ளார் வெங்கட் பிரபு.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகுகிறது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இது. தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது. நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படமும் இதுவே.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். ஒளிப்பதிவை S.R. கதிர் கவனிக்கிறார்.

இன்னும் இரண்டு வாரங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. தற்போது சாங் ரெக்கார்டிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பே இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்தான் வெங்கட்பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraja to score music for Venkat Prabhu – Naga Chaitanya film

கஜானா-வை நிரப்ப பான் இந்தியா படத்தில் யோகி பாபு வேதிகா இனிகோ

கஜானா-வை நிரப்ப பான் இந்தியா படத்தில் யோகி பாபு வேதிகா இனிகோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, முதல் முறையாக பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார்.

‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா திரைப்படமாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் சாகச காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரம்மாண்டமான சாகச திரைப்படமாக உருவாகிறது.

இதில் வேதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

அந்த காட்சிகள் படத்திற்கு கூதல் பலம் சேர்த்திருப்பதோடு, ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

வேதிகா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகில் கிரங்கடிக்கவும் செய்வார்.

மேலும், இனிகோ பிரபாகர், யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

VFX தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

இப்படத்தின் முந்தைய தலைப்பால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது மற்றும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவது பற்றிய தகவல்கள் வெளியானதால் இப்படத்தை பற்றி கோலிவுட் பிரபலங்களும் பேச தொடங்கியிருக்கிறார்கள்.

Yogi Babu Vedihka Inigo Prabakar in the film Pan India

பயில்வான் வீடியோஸ்.: கார்த்திக் தனுஷ் வெங்கட்பிரபு செய்த சதி.; பாடகி சுசீத்ரா போலீசில் புகார்

பயில்வான் வீடியோஸ்.: கார்த்திக் தனுஷ் வெங்கட்பிரபு செய்த சதி.; பாடகி சுசீத்ரா போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகி சுசித்ரா (42). பாடகி, ரேடியோ ஜாக்கி என பணியாற்றியவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இவர் ரேடியோ மிர்ச்சியில் “ஹலோ சுசி” நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுசீ அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது…

“யு டியூப்’ சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்பவர், என்னை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி, வீடியோ வெளியிட்டு உள்ளார்.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்; போதைக்கு அடிமையானவர். வாய்ப்புக்காக, பாலியல் இச்சைக்கு உடன்படுபவர்’ என, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.

பயில்வான் ரங்கநாதனை தொடர்பு கொண்டு, ‘என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளீர்கள்; அதற்கான ஆதாரங்களை தாருங்கள்’ என்று கேட்டேன்.

அவரிடம் இருந்து, எந்த பதிலும் இல்லை. எனக்கும், அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கார்த்திக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

இந்நிலையில், 2017ல் என், ‘ட்விட்டர்’ பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், டுவிட்டரில், ‘சுசிலீக்ஸ்’ என, கணக்கு துவங்கி, நடிகர், நடிகையரின் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

இதன் பின்னணியில், என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தேன்.

மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானதால், என் சினிமா வாய்ப்புகள் பறிபோயின; வருமானமும் நின்று போனது.

தற்போது, என்னை பற்றி பயில்வான் ரங்கநாதன், அவதுாறு வீடியோ வெளியிட்டதன் பின்னணியில், கார்த்திக்குமார், தனுஷ், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் இருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது.

தனுஷுக்கு வேண்டிய நபர்கள், ஏற்கனவே என் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். நான் தனியாக வசித்து வருகிறேன். இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. பயில்வான் ரங்கநாதன் மற்றும் அவருக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் பற்றி தீர விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சுசிலீக்ஸ் கேள்வியால் தனுஷ் டென்ஷன்; என்ன செய்தார் தெரியுமா?

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார் பாடகி சுசீத்ரா.

கூடுதல் தகவல்..

நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது தொடர்ந்து புகார்கள் வருவதால் இது தொடர்பான விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அவர் பல யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருவதால் அந்த யூடியூப் சேனல் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Singer Suchitra complains to police

அருள்நிதி பிறந்த நாளில் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘தேஜாவு’

அருள்நிதி பிறந்த நாளில் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘தேஜாவு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் நாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’.

இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21-ம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

‘Tejavu’ to be released in theaters on Arulnithi’s birthday

More Articles
Follows