தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
இதனையடுத்து இருவரும் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மற்றும் கோலிவுட் பிரபல நட்சத்திரங்களும் பங்குபெற்று தம்பதியினரை வாழ்த்தினர்.
இதனையடுத்து மறுநாள் அதாவது நேற்று ஜூன் 10ஆம் தேதி இருவரும் திருப்பதி சென்று திருமலையானை தரிசித்தனர்.
ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்துக் கொண்டனர். அப்போது அங்கே மணமக்களுக்கு போட்டோ ஷுட் நடத்தினர்.
கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.
தற்போது இது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என விசாரணை நடத்த உள்ளனர்
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாம் தேவஸ்தான நிர்வாகம்.
Newly wed couple Nayanthara and Vignesh Sivan break the rules in Tirupati