‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட ரிலீசுக்கு தடை..? கோர்ட் உத்தரவு… ‘டேய் ச்சும்மா இருடா…

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட ரிலீசுக்கு தடை..? கோர்ட் உத்தரவு… ‘டேய் ச்சும்மா இருடா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

5 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் இருந்தது.

இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இத்துடன்… நேற்று இந்த படத்தின் முன்னோட்ட காட்சி (டேய் சும்மா இருடா) ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம்,ரேடியன்ஸ் மீடியாவிடம் ₨1.24 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக மனுவில் புகார்.

ஆனால் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Nenjam Marappathillai release post poned ?

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு இழுபறி…; தனி சின்னத்தில் போட்டியிட வைகோ முடிவு

திமுக-மதிமுக தொகுதி பங்கீடு இழுபறி…; தனி சின்னத்தில் போட்டியிட வைகோ முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல்6-ந்தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன.

திமுக & காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர்.

மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாம்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

“மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும்.

எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.

திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும்.

திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு.

மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும்” என வைகோ கூறினார்.

DMK allots 5 seats to MDMK ?

பாக்யராஜ் பட டைட்டில்… ஹிந்தி பட ரீமேக்..; ஹாட்ரிக் அடிப்பாரா ஆர் ஜே பாலாஜி..?!

பாக்யராஜ் பட டைட்டில்… ஹிந்தி பட ரீமேக்..; ஹாட்ரிக் அடிப்பாரா ஆர் ஜே பாலாஜி..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த, எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய 2 படங்களும் அவருக்கு நல்ல பெயரையும் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.

எனவே மீண்டும் ஹீரோவாகவே வேஷம் கட்ட வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

இந்த முறை சூப்பர் ஹிட்டான ஹிந்தி படத்தை ரீமேக் செய்ய நினைக்கிறாராம்.

2018ல் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் வெளியான ‘பாதாய் ஹோ’ என்ற காமெடி படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

இந்த படத்திற்கு 1994ல் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷங்க’ படத்தலைப்பை வைக்க முடிவெடுத்துள்ளார்.

இந்த தலைப்பை கொடுக்க பாக்யராஜ் ஒத்துக் கொள்வாரா..?

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த, எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டும் வெற்றிப் பெற்றது. 3வது படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடிப்பாரா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RJ Balaji’s next is a superhit hindi remake?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி..; உடல் நோய்த் தடுப்பூசி உடனடி.. ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி..; உடல் நோய்த் தடுப்பூசி உடனடி.. ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

COVID 19 என்ற கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் பணி ஏற்கெனவே அறிவித்தப்படி நேற்று மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

அதன்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

இவரைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் போட்டு கொண்டனர்.

தமிழகத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தடுப்பூசி போட்டு கொண்டார்.

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் போட்டுக் கொண்டதாக போட்டோ போட்டு தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

PM modi and Kamal Haasan taking corona vaccine

நாயகியின் உயிரை காப்பாற்ற நாயகனுடன் கை கோர்க்கும் ‘டெடி’

நாயகியின் உயிரை காப்பாற்ற நாயகனுடன் கை கோர்க்கும் ‘டெடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Teddy (1)தமிழ் சினிமாவில் சிறந்த மற்றும் புதுமையான திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “டெடி” . டிஸ்னி + ஹாட்ஸ்டார் மல்டிப்ளெக்ஸ் தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகும் தமிழ் மொழி திரைப்படமாகும்.

“டெடி” டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.

‘டெடி’ படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், “டெடி” படத்திலிருந்து முதல் தனிப்பாடலாக ‘என் இனிய தனிமையே’ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்த பாடல் உங்கள் தனிமையை போக்கும் விருந்தாக இருக்கும். தனிமையின் எதார்த்தத்தை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின் வியக்க வைக்கும் இசையில், சித் ஸ்ரீராம் தனது அழகான குரலில் இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடலின் மயக்கும் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

‘டெடி’ படத்தில் நிஜத்தில் காதல் தம்பதிகளாக உலா வரும் ஆர்யா மற்றும் சயீஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அவர்களுடைய காதலின் எழில்மிகு தருணங்கள் அட்டகாசமான வகையில் திரையிலும் உயிர்பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குநர்களில் ஒருவரான சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் K.E.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “டெடி” படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.

பாடலைப் பற்றி இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…

” என் இனிய தனிமையே” பாடல் மாடர்ன் உலகின் பாடல். இளைஞர்களின் இதயதுடிப்பை பிரதிபலிக்கும் அழகான பாடல். மதன் கார்க்கி எழுதிய அழகான பாடல் வரிகளை, சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியுள்ளார். இளைஞர்கள் விரும்பும் நட்சத்திர நடிகர் ஆர்யா நடித்திருப்பதால், “டெடி” பார்வையாளர்களால் விரும்பப்படுவது உறுதி என்றார்.

பாடல் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது…,

” என் இனிய தனிமையே” ஒரு அருமையான பாடல், குறிப்பாக தனிமையை நேசிக்கும், தன்னை நேசிக்கும், தற்காலத்திய சிங்கிள் உலகத்தினருக்கான பாடல். இசையமைப்பாளர் டி. இமான், “டெடி” படத்திற்கு வெகு சிறப்பான இசையை வழங்கியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களை மயக்கும் அதே நேரத்தில் உத்வேகம் தரும் ஆற்றலும் கொண்டுள்ளது. என்னைப் போலவே ரசிகர்களும் பாடலையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். ” என்றார்.

கதை சுருக்கம்:

ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுல்லா பயணத்தின் போது துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்து ஒரு மருத்துவமனையில் தனியாக இருக்கிறார்.

இந்த மருத்துவமனையின் பணிபுரியும் சில கெட்ட குணம் கொண்ட மருத்துவர்கள், உதவியற்று, தனியாக இருக்கும் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கின்றனர்.

கரடி பொம்மையாக வாழும் பேச்சுதிறன் கொண்ட “டெடி” ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறது.

ஆனால் அது தனியாக இதைச் செய்ய முடியாது என்பதை அறியும். ஒரு நாள், சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை “டெடி” காண்கிறது.

மேலும் ஶ்ரீ வித்யா விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி சிவாவிடம் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.

ஆர்யா-சயீஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ‘டெடி’ படத்தின் உலகளாவிய பிரீமியரை அனைவரும் கண்டுகளியுங்கள்.

இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக 12 மார்ச் 2021 அன்று வெளியிடப்படுகிறது.

Everything you need to know about Teddy

கௌதம் & சேரன் இணையும் படத்திற்கு அழகான பெயர் வைத்த நந்தா பெரியசாமி

கௌதம் & சேரன் இணையும் படத்திற்கு அழகான பெயர் வைத்த நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன், சிநேகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார்.

நாயகியாக சிவாத்மிகா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ரங்கநாதன் தயாரித்து வருகிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பொர்ரா பாலபரணி, இசையமைப்பாளராக சித்துகுமார், கலை இயக்குநராக சகு, எடிட்டராக ஆர்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்துக்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ எனப் பெயரிட்டு, பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

ஒரே கட்டமாக இப்பட படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

Gautham Karthik’s next film title is revealed

More Articles
Follows