தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
5 வருடங்களுக்கு முன்னர் கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் இருந்தது.
இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இத்துடன்… நேற்று இந்த படத்தின் முன்னோட்ட காட்சி (டேய் சும்மா இருடா) ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
*ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம்,ரேடியன்ஸ் மீடியாவிடம் ₨1.24 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக மனுவில் புகார்.
ஆனால் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Nenjam Marappathillai release post poned ?