தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இதில் ஹீரோ எஸ்ஜே சூர்யா பெயர் ராமசாமி (என்ற) ராம்சே.
தற்போது இந்த பெயர் சர்ச்சையாகியுள்ளது.
ஒரு பிரபல செய்தியாளர் செல்வராகவனிடம் கேட்ட கேள்வியில்..
“நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ராமசாமி என்கிற பெயரை கொண்டவருக்கு எதிராகக் கடவுளை எதிர்கொள்ள வைத்துள்ளீர்கள்.?
அதற்கு செல்வராகவன் ஆமாம் என்கிறார்.
இதனால் பெரியாருக்கு எதிராக செல்வராகவன் செயல்பட்டதாக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தன்னுடைய அந்த வீடியோ பேட்டிக்கு செல்வராகவன் விளக்கம் அளித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
நண்பர்களே, அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என கூறியுள்ளார்.
Director Selvaraghavan’s latest statement about controversy in Nenjam Marapathillai