தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் செல்வராகவன்.
இதனையடுத்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன்.
இதனிடையில் சில தினங்களுக்கு முன், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய்-செல்வராகவன் இணையவுள்ளதாக செய்திகள் வந்தன.
ஆனால் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.
இந்நிலையில், தற்போது சூர்யாவுடன் செல்வராகவன் இணைய உள்ள படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதை என்று தெரிய வந்துள்ளது.