தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் சேர்த்து வளைத்து போட்டவர் சாய்பல்லவி.
எனவே, இந்த மலர் டீச்சர் தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானத்துடன் சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
ஓரிரு தினங்களுக்கு முன், விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சந்தானம்.
மேலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் செல்வராகவன் பிஸியாக உள்ளார்.
இவர்கள் இருவரும் இப்படங்களை முடித்துவிட்டு இணையக்கூடும் என சொல்லப்படுகிறது.