தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.
இதனையடுத்து சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங்குங்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2ஆம் பாகம் குறித்து செல்வராகவன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களின் 2ஆம் பாகத்தை இயக்க ஆசையுள்ளது. அதற்கான கதையை கூட எழுதிவிட்டேன்.
ஆனால் இப்போது அந்த படங்களை எடுக்க நேரமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை சூர்யா படத்தை முடித்துவிட்டு, கார்த்தி (ஆயிரத்தில் ஒருவன்) மற்றும் தனுஷ் (புதுப்பேட்டை) படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
Selvaraghavan will direct Aayirathil Oruvan and Pudupettai sequels soon