மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்

மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Sivakarthikeyanதான் ரஜினி ரசிகன் அல்ல. ரஜினி வெறியன் என்பதை கர்வத்துடன் கூறி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிக்கும் படங்களில் அவ்வப்போது ரஜினியின் பன்ச் டயலாக்கை பயன்படுத்துவார்.

மேலும் தன் படத்திற்கு ரஜினிமுருகன் என்றும் பெயரிட்டு இருந்தார்.

தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத் பாசில், பிரகாஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இது உயிர் காக்கும் மருந்துவத்தின் பெயரில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான வேலைக்காரன் என்று தலைப்பிடப்படவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Mohan Raja and Sivakarthikeyan project got Rajini movie title

விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் தாக்கிய இன்ப-துன்ப செய்திகள்

விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் தாக்கிய இன்ப-துன்ப செய்திகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayவிஜய் நடிப்பில் உருவான பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் 25 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே இப்படக்குழுவினர் வெற்றிவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இதனையறிந்த விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

இதனை கொண்டாடி வரும் வேளையில் அட்லி இயக்கும் விஜய்யின் அடுத்த படத்தில் இருந்து ஜோதிகா விலகிவிட்டதாக செய்திகள் வந்தன.

திருமலை, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்த ராசியான ஜோடியை மீண்டும் திரையில் காணவிருந்த ரசிகர்களுக்கு இச்செய்தி வருத்தத்தை அளித்துள்ளது.

Happy and sad news at same time for Vijay fans

விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலக யார் காரணம்?

விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலக யார் காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Jyothikaதெறி மற்றும் பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இவருடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்டத்தின் சூட்டிங்கை தொடங்கிய நிலையில் திடீரென ஜோதிகா விலகிவிட்டார்.

இதற்கு அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் காரணமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Jyothika is out of Vijay Atlee Project

‘சினிமா ஸ்டார் என்பதில் எனக்கு பெருமையில்லை…’ – ரஜினி ஓபன் டாக்

‘சினிமா ஸ்டார் என்பதில் எனக்கு பெருமையில்லை…’ – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் சினிமாவை விட அதிகம் நேசிப்பது ஆன்மிகத்தைதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது…

நான் ஒரு சினிமா நட்சத்திரம். ஆனால் ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதை விட, நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

பணம், பேர், புகழ் என ஒரு பக்கம் வைத்து மற்றொரு பக்கம் ஆன்மிகத்தை வைத்தால் நான் ஆன்மிகம் பக்கம்தான் போவேன்.

ஆன்மிகத்திற்கு அவ்வளவு பவர் இருக்கு. அதனால்தான் அந்த பவரை நான் விரும்புகிறேன்.

ஒரு விருந்தாளி நம் வீட்டிற்கு வருகிறார் என்றால் நாம் வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவோம்.

அதுபோல் கடவுள் என்கிற விருந்தாளி வர நம் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.” என்று பேசினார் சூப்பர் ஸ்டார்.

I am not proud to say that i am an actor says Rajinikanth

‘என் முதல் குரு அண்ணா சத்தியநாராயணாதான்..’ – ரஜினி பேச்சு

‘என் முதல் குரு அண்ணா சத்தியநாராயணாதான்..’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini his brother sathya narayananஒரு நடிகரின் படங்களை மட்டுமே ரசிகன் விரும்புவதில்லை.

அதை மீறி நடிகரின் நல்லொழுக்கம், உண்மை, உழைப்பு, எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றையும் நேசிப்பான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகளவில் மதிப்பு இருக்க இவைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
அதுபோல் ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர் ரஜினிகாந்த்.

இவர் தனது ராகவேந்திரா மண்டபத்தில், தன்னுடைய குருவின் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அதில்…

“பல பிறவிகளை எடுத்த பின்னரே நாம் மனிதப்பிறவியை அடைந்துள்ளோம்.
இது ஒரு அபூர்வமான பிறப்பு.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? கடவுள் யார்? நம்முடைய ஆத்மா யார்? என்ற கேள்விகள் நம்மில் எழுவது கடினம்.

ஆனால் அந்த கேள்விகள் வந்தபின்னர் அதற்கான விடை தருபவர்தான் குரு.

குரு வந்த பின்னர் அவரின் அருள் கிடைப்பது அபூர்வம். அதை விட அவரின் போதனைகள் கிடைப்பது அரிது.

இவையனைத்தும் கிடைத்தும் அவன் நிராகரித்தால் அவன் பைத்தியக்காரன்.

எனது முதல் குரு என் அண்ணன் சத்தியநாராயணன்.

நான் ஆன்மிகத்தில் ஈடுபட அவர்தான் காரணம்.

ராமகிருஷ்ணா பரமஹம்சர் என்னுடைய 2வது குரு.

ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன்.

ராகவேந்திரா ஆசிரமத்தில் பக்தியை கற்றுக்கொண்டேன்.

அதன்பின்னர் ரமண மகரிஷியிடம் நான் யார் என்று கேள்வி எழுப்புவதை கற்றுக்கொண்டேன்.

மேலும் தயானந்த சரஸ்வதியிடம் சமூக பிரச்சனைகளை தெரிந்துகொண்டேன்.

வேதத்தில் உள்ள சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டேன். சச்சிதானந்தர்தான் எனக்கு உபதேசம் செய்தவர்.” என்று பேசினார் ரஜினிகாந்த்.

rajini team

‘குழப்பத்தில் இருப்பவர்களே என்னை குழப்பவாதி என்கிறார்கள்’ – ரஜினி

‘குழப்பத்தில் இருப்பவர்களே என்னை குழப்பவாதி என்கிறார்கள்’ – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speechஎந்தவொரு துறையும் நாம் நேசித்தால் மட்டுமே, அந்த துறையில் வெற்றிப்பெற முடியும்.

அதுபோல் சினிமாவை நேசிப்பவர்களால் மட்டுமே அந்த துறையில் வெற்றிக் காண முடியும்.

ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவை தான் வெறுத்துவிட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதில் தற்போது வரை தொடர தான் நேசிக்கும் பாபாதான் காரணம் என்றார்.

ஆன்மிக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது…

சினிமாவே வேண்டாம் என வெறுத்து ஒதுங்கிய போது. அமெரிக்கா செல்ல நேர்ந்தது.

அப்போது பாபாஜி பற்றிய பத்தகத்தை படித்தேன்.

என்னை அறியாமல் ஏதோ ஒரு ஒளி என்னுள் பாய்வதை உணர்ந்தேன்.

ஆனால் அது கண்களுக்கு தெரியவில்லை. என்னுள் சில மாற்றங்கள் நடைபெற்றது.

சினிமா வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஆன்மிகத்தை சினிமாவில் நிச்சயம் சொல்லமுடியும்.

அப்படி சொன்னால் நிறைய பேரை அது சென்றடையும் என்றார்கள்.

அதன்பின்னரே நானே கதை எழுதி, பாபா படத்தை தயாரித்தேன்.

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், பாபாவினால் யாரும் நஷ்டமடைய கூடாது என்பதால் பணத்தை திருப்பி கொடுத்தேன்.

இவரு என்ன திடீரென இமயமலை செல்கிறார். குழப்புகிறார், இவர் குழப்பவாதியா என்று சிலர் நினைக்கலாம்.

அவர்கள் குழப்பத்தில் இருப்பதால் என்னை குழப்பவாதி என்று நினைக்கிறார்கள்.” என்று பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

More Articles
Follows