இன்னும் ரிலீஸாகாத தனுஷ் பட நாயகி ரஜினியுடன் இணைகிறார்

இன்னும் ரிலீஸாகாத தனுஷ் பட நாயகி ரஜினியுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress megha akashஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார் நடிகை மேகா ஆகாஷ். இது இன்னும் வெளியாகவில்லை.

இதன்பின்னர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார்.

கவுதம் மேனன் இயக்கி வரும் இப்படம் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜனி நடிக்க இருக்கும் படத்தில் மேகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தில் ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹாவும், சனந்த் ஷெட்டியும் நடிக்கிறார்கள்.

இதில் ரஜினி மகன்களில் ஒருவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக சமூக போராளியாக மாறும் *யங்” ரஜினி

கார்த்திக் சுப்பராஜ் படத்துக்காக சமூக போராளியாக மாறும் *யங்” ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthik subbaraj and rajiniரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை ரிலீஸாகிறது.

இதற்கு முன்பே தயாரான 2.0 படம் கிராபிக்ஸ் காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

அதற்குள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினி.

அதற்காக இன்று காலை ரஜினிகாந்த் டெக்ராடூன் செல்கிறார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து கர்நாடகாவில் காலா ரிலீஸ் குறித்து பேட்டியளித்தார்.

கபாலி மற்றும் காலா படத்திற்காக வெண் தாடியில் ரஜினிகாந்த் இருந்தார்.

அதே கெட்டப் அப்புடன் வெளியுலகிலும் வலம் வந்தார்.

ஆனால் சில தினங்களாக கருப்பு தாடி மற்றும் கருப்பு தலைமுடியுடன் வலம் வருகிறார்.

இது கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காகத்தான் என தெளிவாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறவுள்ளாராம் ரஜினி.

முக்கியமாக, முந்தைய படங்களின் சாயல் இல்லாத ஒரு கெட்டப்புக்கு ரஜினி மாறவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நம் சமுதாயத்திற்காக போராடும் ஒரு சமூக போராளியாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி மாதிரி வரனும்னு ஆசைப்படுவது தப்பா..? தனுஷுக்கு சிம்பு பதிலடி.?

ரஜினி மாதிரி வரனும்னு ஆசைப்படுவது தப்பா..? தனுஷுக்கு சிம்பு பதிலடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str and dhanushஇந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி பேசும் திரைப்படங்கள் உள்ளன.

எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் இருந்து வருகிறார்.

ஆனால் இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் 10 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார்களாக இருந்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் மட்டுமே கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று திரையுலகினரால் அழைக்கப்படுகிறார்.

ரஜினி என்ற அந்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு இன்று பலரும் ஆசைப்படுகிறார்கள் என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ‘காலா’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசியிருந்தார்.

அந்த பேசி 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிம்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 20 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 10 நிமிடங்களுக்கு மேலாக ரஜினிகாந்த் பற்றியே பேசியுள்ளார்.

எனவே இது தனுஷுக்கு பதிலடி என பலரும் பேசி வருகின்றனர்.

அந்த வீடியோவின் முக்கிய அம்சங்கள்…

எனக்கும் ரஜினி சார் மாதிரி வரணும்கற ஆசை இருந்தது. ஆனால், அதற்காக நான் ரஜினியாக மாற ஆசை இல்லை. அந்த மாதிரி ஆகணும்கற ஆசை இருந்ததாலதான் நான் இப்ப இப்படி வந்திருக்கேன்.

என்னை ரொம்ப டீமோடிவேட் பண்ணாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும்.

எல்லாரும் தப்பான ஒரு விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்கிறாங்க. தியாகராஜ பாகவதர் இருந்தாரு, எம்ஜிஆர் இருந்தாரு, ரஜினி சார் இருந்தாரு, ஒவ்வொரு கால கட்டங்கள்ல ஒருத்தர் இருந்தாங்க. ஆனால், ரஜினி மாதிரி யாரும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது.

இப்படி யார் தெரியுமா சொல்வாங்க, தான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் சொல்வாங்க. அப்படி பேசறவங்களுக்கு ஒண்ணு புரியலை.

தியாகராஜ பாகவதர் மாறி வரணும்னு நினைச்சதால எம்ஜிஆர் வந்தாரு. எம்ஜிஆர் மாதிரி வரணும்னு நினைச்சதால ரஜினி வந்தாரு. ரஜினி மாதிரி வரணும்னு நினைச்சதால அஜித், விஜய் வந்திருக்காங்க.

இவங்கள மாதிரி வரணும்னு நினைச்சதாலதான் நான் வந்திருக்கிறனான்னு தெரியலை. இருந்தும் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு.

நான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் இதை மாதிரி பேசறாங்க. ஆனால், ரஜினி மாதிரி வரணும்னு நினைக்கிறன்னு நாம பேசும் போது அதை தப்பாவே வெளிய பேச வைக்கிறாங்க,” என்கிறார் சிம்பு.

தன்னையே ரஜினியா நினைக்கிறவங்கதான் இப்படி பேசறாங்க என சிம்பு பேசியிருப்பதால் இது ரஜினியின் மருமகன் தனுஷை பற்றி இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தனுஷோ ரஜினி ஒருவர்தான் அவர் மட்டுமே என பலமுறை சொல்லிவிட்டார்.

காலாவை வெளியிடும் விநியோகஸ்தர் ஆபிஸை அடித்து நொறுக்கிய கும்பல்

காலாவை வெளியிடும் விநியோகஸ்தர் ஆபிஸை அடித்து நொறுக்கிய கும்பல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini in kaalaரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியபோது,

‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.

காவிரி மேலாண்மை பிரச்னையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.” என ரஜினி பேசினார்.

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்ப்போது இப்படம் 130 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் காலா படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடி உள்ளனர்.

அங்கிருந்த காலா பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர்.

இந்த படங்கள் வீடியோக்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

முக்கியமான 2 தியேட்டர்களில் காலா ரிலீஸ் இல்லை; உண்மையான காரணம் இதுதான்

முக்கியமான 2 தியேட்டர்களில் காலா ரிலீஸ் இல்லை; உண்மையான காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Rajinikanthரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் துபாய் மற்றும் சில நாடுகளில் பிரிமீயர் காட்சிகள் தொடங்கவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி வெளியானவுடன் காலா படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க சொன்னார்கள். அதனால்தான் காலா படத்தை வாங்கவில்லை என தியேட்டர் நிர்வாகம் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தான் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்

1000 கோடி இருக்கு; இனி நடிப்பேனா தெரியல.?; சிம்பு பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

1000 கோடி இருக்கு; இனி நடிப்பேனா தெரியல.?; சிம்பு பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont know whether i will act hereafter says Simbuமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய 3 ஹீரோக்களுடன் நடித்துள்ளார் சிம்பு.

அண்மையில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.

சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

இந்த செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க, திடீரென சிம்பு நடிக்கவுள்ள 4 பட செய்திகளை பார்த்தோம்.

சிம்பு 34 – `பைரவா’, `வீரம்’ முதலிய படங்களை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறார்.

சிம்பு 35 – இங்கிலீஷ் படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார்.

சிம்பு 36- லைகா தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் `விண்ணைத்தாண்டி வருவேன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

சிம்பு 37- கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைகிறார்.

இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் சிம்பு பேசிய வீடியோ ஒன்று வெளியானது.

அதில் இனி சினிமாவில் நடிப்பேனா இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன்.

இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன்.

ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார்.

அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.

நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது.

ரூபாய் 1000 கோடி இருக்கு. நல்லா வசதியா வாழலாம். எனக்கு வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன்.

தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை’.

எனக்கு எல்லாமே என் ரசிகர்கள்தான் என உருக்கமாக பேசியுள்ளார்.

தற்போது 4 படங்களை கமிட்டாகியுள்ள சிம்பு ஏன் இப்படி பேசினார் என்பதுதான் புரியவில்லை.

I dont know whether i will act hereafter says Simbu

More Articles
Follows