‘மார்க் ஆண்டனி’ டீசர் அப்டேட்..; மாஸ் காட்டும் ஸ்டைலிஷ் எஸ்.ஜே. சூர்யா

‘மார்க் ஆண்டனி’ டீசர் அப்டேட்..; மாஸ் காட்டும் ஸ்டைலிஷ் எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா, கடந்த வாரம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.

தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.

இப்படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் பிரம்மாண்டாக தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ டீசர் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் செம மாஸாக ஸ்டைலாக எஸ்.ஜே. சூர்யா போஸ் கொடுத்துள்ளார்.

மார்க் ஆண்டனி

MarkAntony Teaser release update by sj suryah

வைரலாகும் ராம்சரண் – உபாசனா தம்பதியரின் வளைகாப்பு ஸ்டில்ஸ்

வைரலாகும் ராம்சரண் – உபாசனா தம்பதியரின் வளைகாப்பு ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் ‘வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது.

அதன் போது தனது கர்ப்பிணியான மனைவி உபாசனாவின் கைகளை மடக்கி, அவர்கள் நடந்த தருணங்களை… உண்மையிலேயே அனைவராலும் விரும்பப்பட்டது.

 ராம்சரண் - உபாசனா

இந்நிலையில் துபாயில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ராம் சரணுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த கொண்டாட்ட விழாவில் இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ராம்சரண்- உபாசானா காமினேனி கொனிடேலா தம்பதிகளுடன் பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் சகோதரிகளான சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா, உபாசனாவின் தாயார் திருமதி சோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 ராம்சரண் - உபாசனா

இந்நிகழ்வில் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா ஒரு பிங்க் வண்ண உடையில்… தளர்வான ஸ்டைலில் ஜொலிக்க… ராம் சரண் கருப்பு வண்ண உடையில் ஸ்மார்ட் சினோஸ் எனப்படும் வெள்ளை சட்டையிலும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இந்த பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு அனைவரும் அன்பான ஆசீர்வாதத்தை வழங்குவதையும் காண முடிகிறது. ராம் சரணும் உபாசனாவும் கடந்த சில காலமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர்களாக இருந்தனர். அதற்கான உண்மையான காரணத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகிறது.

 ராம்சரண் - உபாசனா

Ram Charan and Upasana couple Baby Showers

அஜித் – ஷாலினி திருமணநாள்.; தல ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்

அஜித் – ஷாலினி திருமணநாள்.; தல ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா பிரபலங்களில் எவ்வோளவோ புதிது புதிதாக தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் மனதில் முதலில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான்.

1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள்.

அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அதனையடுத்து இருவரும் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

இன்று இவர்கள் இருவரும் தங்கள் 23 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஜோடி 23 ஆண்டுகள் ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 3 மணி நேரத்தில் ட்விட்டரில் அதிகம் டிரெண்டிங் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் ஷாலினி அஜித் குமாரும் ஒருவர்.

மேலும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ajith and Shalini celebrate their 23rd wedding anniversary

லிங்குசாமிக்கு 6 மாத சிறைத்தண்டனை.; நிபந்தனை விதித்த நீதிமன்றம்

லிங்குசாமிக்கு 6 மாத சிறைத்தண்டனை.; நிபந்தனை விதித்த நீதிமன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனியார் நிறுவனத்தில் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு, 6 ​​மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2014-ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” படத்தை தயாரிப்பதற்காக ‘நான் ஈ’, ’இரண்டாம் உலகம்’ படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கடனாக பெற்றிருந்தனர்.

கடனுக்காக லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சைதாப்பேட்டை பெஞ்ச் நீதிமன்றம், லிங்குசாமியும் அவரது சகோதரரும் கடனில் 20% செலுத்திவிட்டதாகத் தீர்ப்பளித்தது.

மீதமுள்ள கடன் தொகையையும் செலுத்த இயக்குனர் ஏற்பாடு செய்திருந்ததால், அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.

ஆறு வாரங்களுக்குள் முழுத் தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிறைத்தண்டனை நோட்டீஸை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Madras High Court suspends director Lingusamy’s 6 months jail

இன்னும் ஒரே நாள்.; அதிகபட்ச உற்சாகத்தில் நடிகர் விஷால்

இன்னும் ஒரே நாள்.; அதிகபட்ச உற்சாகத்தில் நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படத்தில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க, வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘மார்க் ஆண்டனி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, கடந்த வாரம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்திருந்தார்.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் ஒரு படத்தைப் பகிர்ந்து. அதில், மார்க்ஆண்டனியைப் பற்றி எல்லாமே நேர்மறையானவை. பாடல் படப்பிடிப்பு முடிந்தது. இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு உள்ளது, உற்சாகம் அதிகபட்சம்” என்று எழுதினார்.

Vishal’s Mark Antony nearing completion

PS2 முடித்து விட்டு தங்கலானில் தனிக்கவனம் செலுத்தும் விக்ரம்

PS2 முடித்து விட்டு தங்கலானில் தனிக்கவனம் செலுத்தும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

அதே நேரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை கர்நாடகாவில் உள்ள பெங்களூரு அருகே அமைந்துள்ள கோலார் தங்கச் சுரங்கத் தொழிற்சாலையைச் சுற்றி வருகிறது.

விக்ரம் இன்னும் ‘தங்கலான்’ படத்தின் சில பகுதிகளை படமாக்க உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெறும் என்றும் சென்னை மற்றும் மதுரையில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் விளம்பரங்களை முடித்த பிறகு நடிகர் தனது படப்பிடிப்பிற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

The final schedule of Vikram’s ‘Thangalaan’

More Articles
Follows