’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

’96’ படம் ஹிந்தி ரீமேக் குறித்து விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கௌரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ’96’.

கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

தமிழில் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ் சினிமா அளவுக்கு இது வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், ’96’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார் அஜய் கபூர்.

இதில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.

’96’ ரீமேக் குறித்து விஜய்சேதுபதி தனது ட்விட்டர் கூறியிருப்பதாவது:

“ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வதில் எனக்கு அதீத சந்தோஷம் கிடைக்கும். அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது என் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது.

’96’ படம் எனக்கு சந்தோஷமான அனுபவத்தை தந்தது.

இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர் அந்தப் பயணத்தை ஹிந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார்.

அவருக்கு என் வாழ்த்துகள். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன்”.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

As an actor, it gives me immense joy to tell stories which strike a chord with the audience, the happiness is further elevated when it reaches a wider audience. ’96’ has been a lovely experience for me, now as Producer Ajay Kapoor takes this journey ahead with the Hindi remake, https://t.co/5FABpDWeDa

I wish him all the best! Can’t wait ???

#AjayKapoor
#AjayKapoorProductions

Makkal Selvan Vijay Sethupathi about 96 movie hindi remake

‘வலிமை’ ரிலீஸை போனி ஜீ அறிவித்தவுடன் மோதலுக்கு ரெடியான விஜய் ஜீ

‘வலிமை’ ரிலீஸை போனி ஜீ அறிவித்தவுடன் மோதலுக்கு ரெடியான விஜய் ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி என்பவர் தன்னுடைய ஜி மீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் அறிமுகமாகிறார்.

இவர் பெண் வேடம் ஏற்றும் நடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் அனித்ரா நாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) படமானது 2022ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்துள்ளார் விஜய் ஸ்ரீ ஜீ.

சற்று முன் தான் தயாரிப்பாளர் போனிகபூர் அஜித் நடித்த ‘வலிமை’ படம் அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு ரிலீஸ்’ என அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை ட்விட்டரில் டேக் செய்து தான் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#ValimaiPongal ? mass update sir @BoneyKapoor ????

#வலிமையுடன் எங்கள் பப்ஜி பொங்கல்
#PUBGPONGAL
@vijaysrig Directorial
@Onlyarjuman @Aishwaryadutta6
@mimegopi @catchAnithra @cinemabala @NaviinRavindran
@LahariMusic @onlynikil @onlygmedia #PUBGPONGAL https://t.co/BuBE00gNW2

Director Vijay’s PUBG will release on Pongal

ரஜினியால் ஒதுங்கிய அஜித்.? ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினியால் ஒதுங்கிய அஜித்.? ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்து வரும் கார்த்திகேயா நடித்துள்ளார்.

நேற்று செப்டம்பர் 21 கார்த்திகேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திகேயாவின் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்தினர்.

அப்போது கூட வலிமை ரிலீஸ் குறித்த அறவிப்பு எதுவுமில்லை.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனிகபூர் “அடுத்த ஆண்டு 2022 பொங்கலுக்கு வலிமை ரிலீஸ்’ என அறிவித்துள்ளார்.

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு வலிமை வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரஜினியின் ”அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தீபாவளிக்கு தியேட்டர்களை ஆக்ரமித்து விட்டதால் வலிமை அஜித்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

மேலும் சூட்டிங்கும் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என தெரிகிறது.

Ajith’s Valimai official release date is here

ஷார்ட் கட்-டில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய படத்திற்கு டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் 2 விருதுகள்

ஷார்ட் கட்-டில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய படத்திற்கு டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் 2 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச புகழ்பெற்ற டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை மணி தாமோதரன் இயக்கியுள்ள ‘ஷார்ட் கட்’ பெற்றுள்ளது.

மேலும், இந்த படத்தின் நாயகனான ஸ்ரீதர், டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகருக்கான (அறிமுகம்) விருதை பெற்றுள்ளார்.

மேலும் இப்படத்தில் உபாசனா, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன் மற்றும் ‘அறம்’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீதர்…

“எனது முதல் படத்திலேயே இந்த கவுரவமிக்க விருது கிடைத்திருப்பது எனக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்த டொராண்டோ தமிழ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி,” என்று கூறினார்.

படத்தின் இயக்குநர் மணி தாமோதரன் கூறுகையில்,…

“பணத்திற்காக வாக்குகளை விற்பது என்பது பணம் வாங்கிக் கொண்டு கழிப்பிடத்தை வாடகைக்கு விடுவதை போன்றதே. இதன் காரணமாகவே அரசியலும், நாடும் நாற்றமடைகிறது.

இது தான் ஷார்ட் கட்டின் மையக்கரு. இதை ஜனரஞ்சகமான முறையில், மக்களுக்கு புரியும் வண்னம், அதே சமயம் அவர்கள் ரசிக்கும் விதத்தில் கூறியிருக்கிறோம்,” என்றார்.

“கையில் சுத்தமாக பணமே இல்லாத நான்கு பேர் திடீர் ‘ஞானோதயம்’ பெற்று அடுத்தவர்களை ஏமாற்றி ஒரே நாளில் எவ்வாறு கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பதை லாஜிக்குடன் சொல்லி இருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ‘ரெட் ஜெமினி’ காமிராவை பயன்படுத்தி படம்பிடித்துள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மணி & மணி கிரியேஷன் தயாரித்துள்ள ஷார்ட் கட், அரசியல் சார்ந்த சமூக திரைப்படமாகும். படத்தை எழுதி இயக்கியுள்ள மணி தாமோதரன் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கே எம் ரயான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஸ்ரீதர் கையாண்டுள்ளனர். படத்தொகுப்புக்கு விது ஜீவா பொறுப்பேற்றுள்ளார்.

எம் சிவராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஷார்ட் கட்’ மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ShortCut a socio-political movie has bagged 2 awards at the Toronto Tamil International Film Festival.

சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட ‘காசு’ பாடல் இணையத்தில் வைரல்

சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ பட ‘காசு’ பாடல் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது.

காசு என்று தலைப்பில் வே. மதன்குமார் எழுதிய இப் பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார் இந்தப் பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இணைப்பு: http://youtu.be/zQ9uMQJxHGc

அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை
, 2D என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.

Kaasu from Raame Aandalum Raavane Aandalum goes viral

உயிர்க் கொல்லி நீட் தேர்வை இந்தியாவிலிருந்தே விரட்ட வேண்டும்.. – கமலஹாசன்

உயிர்க் கொல்லி நீட் தேர்வை இந்தியாவிலிருந்தே விரட்ட வேண்டும்.. – கமலஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு குறித்து கமல்ஹாசன் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது…

நீட் ஓர் உயிர்க் கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை..

நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இந்தத் தேர்வின் தீவிளைவுகளைப் பட்டியலிடுகிறது.

அதன்படி,
கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரமே போதுமானது.

நீட் தேர்வுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ் படிப்பில் சி.பி.எஸ்.இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90% தனியார் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்றவர்கள்.

நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று.

இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன.

நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக்கொண்டிருப்பது தமிழகம். இந்தத் தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும்.

நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்க்கிறது.

நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லித் தேர்வினை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் நீதி மய்யம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்..

NEET is very dangerous for students – MNM leader Kamal Haasan

More Articles
Follows