பொய்யாறு ஓட்டும் செய்யாறு..; பொறிந்து தள்ளிய 96 பட இயக்குனர் பிரேம்குமார்

பொய்யாறு ஓட்டும் செய்யாறு..; பொறிந்து தள்ளிய 96 பட இயக்குனர் பிரேம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செய்யாறு பாலு சொல்வதெல்லாம் பொய், பொறிந்து தள்ளிய 96 பட இயக்குனர் பிரேம்

அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு,

வணக்கம்,

நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ என்ற Youtube Channel’ல், ‘உங்களுக்கு ஆண்மை இல்லீயா, என் பாட்டை யூஸ் பண்ணி இருக்கீங்க.. நாக்க புடுங்கறா மாதிரி கேட்ட இளையராஜா’ என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியானது.

அதில் திரு.செய்யாறு பாலு வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் நான் எழுதி இயக்கி 2018-ல் வெளியான ’96’ படத்தில் பயன்படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நாங்கள் முறையான அனுமதி பெறாதவாறு பேசியுள்ளார்.

குறிப்பாக, ’96 பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியதோடு நிறுத்தாமல், *இன்னொரு வார்த்தை, ‘பொ’ என்கிற வார்த்தையை வேற யாராவது இருந்தா யூஸ் பண்ணி இருப்பாங்க’* என்றும் பேசியுள்ளார்.

மேலும் அதற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மன்னிப்பு கேட்டதாகவும் சொல்கிறார். வன்மம் நிறைந்த இந்த கருத்துகளுக்கு பதில் சொல்லாமல் என்னால் கடந்து செல்ல இயலவில்லை.

திரு. செய்யாறு பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ள மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கும், 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களுக்கும் Think Music வாயிலாகவும், அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாகவும், இரண்டு திரைப்படங்களும் வெளியாவதற்கு முன்னரே அதற்கான அனுமதியை பணம் செலுத்தி பெற்றுவிட்டோம்.

ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்துகொண்டு இந்த முக்கியமான தகவலை கூட விசாரிக்காமல், அல்லது அந்த உண்மையை உள்நோக்கத்துடன் மறைத்து பொய் கூறியதேன்? ஒரு காணொளியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு ஒரு செய்தியாளரின் அடிப்படை அறத்தை விட்டுக்கொடுப்பதா?

அந்த காணொளி இசைஞானி இளையராஜா அவர்களை பற்றியது. அவருடைய பெருமையை பேசுவதற்கு அவர் இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களிலிருந்து ஏதோ ஒரு பாடலே போதுமானது. அப்படி இருக்க, முறையாக ஒரு செயலை செய்த எங்களை சிறுமைப்படுத்துவதேன்? ஒன்றை உயர்த்த இன்னொன்றை தாழ்த்த வேண்டும் என்பது அடக்குமுறை அல்லவா…..

மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் 96 திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தினோம் என்பதை விட, அது அவருடைய இசைக்கான எங்கள் சமர்ப்பணம். இசைஞானியின் இசையை கேட்டு பிறந்து, வளர்ந்த தலைமுறை நாங்கள்.

’96 பற்றி இசைஞானி இளையராஜா Daring’ஆக ஒரு அறிக்கை வெளியிட்டார் என்று திரு. செய்யாறு பாலு சொல்கிறார்.

தவறு,

அது ஒரு நேர்காணலில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில். அதற்கான உரிய விளக்கத்தை நாங்கள் கொடுத்த பிறகு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது.

மேலும், அதற்கு ’96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் மன்னிப்பு கேட்டதாக ஒரு பொய்யான தகவலையும் சொல்கிறார் திரு. செய்யாறு பாலு. முதலில் 96 படத்தின் இசையமைப்பாளர் பெயர் கோவிந்த் வசந்தா. கோவிந்த் வசந்த் அல்ல. அடுத்ததாக அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை.

திரு. செய்யாறு பாலு எங்களைப் பற்றிய உண்மையைதான் சொல்ல வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், எங்களைப் பற்றி பொய் சொல்ல வேண்டாம்.

சினிமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமானது அல்ல. சினிமாவைப் பற்றி விமர்சித்து செய்தி வழங்கும் செய்தியாளர்களுக்கும் அது சொந்தமானதுதான்.

சினிமாவை பாதுகாப்பது இருவரின் கடமைதான்.

கடந்த காலத்தில் 96 திரைப்படத்திற்கு வந்த ஒரு முக்கியமான பிரச்சினையை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் துணையோடுதான் தீர்வு கண்டு, மீண்டு வர முடிந்தது.

அந்த நன்றியை நான் மறக்கவே மாட்டேன்.

ஐந்து வருடங்கள் கடந்தும், மீண்டும் ஒரு பிரச்சினை திரு. செய்யாறு பாலுவின் மூலமாக வந்துள்ளது.

தன்னிலை விளக்கம் அளிக்கவும், உண்மையை நிலைநாட்டவும் எனக்கு வேறு வழி தெரியவில்லை, உங்களையே மீண்டும் நாடுகிறேன்.

உண்மை விளங்கட்டும்.

நன்மை விளையட்டும்.

பேரன்புடன்,

ச. பிரேம்குமார்

96 Director Premkumar statement against Media person

மீண்டும் ரஞ்சித் & நிகேஷுடன் படங்கள்..; வெங்கியை சுற்றி பெண்கள்.. ‘ரெபல்’ இசை விழாவில் ஜிவி பிரகாஷ் பேச்சு

மீண்டும் ரஞ்சித் & நிகேஷுடன் படங்கள்..; வெங்கியை சுற்றி பெண்கள்.. ‘ரெபல்’ இசை விழாவில் ஜிவி பிரகாஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீண்டும் ரஞ்சித் & நிகேஷுடன் படங்கள்..; வெங்கியை சுற்றி பெண்கள்.. ‘ரெபல்’ இசை விழாவில் ஜிவி பிரகாஷ் கலகல

ரெபல் பட இசை வெளியீட்டு விழா

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’.

இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது…

ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது.

இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. அவரைத்திருப்திப் படுத்துவது தான் எங்கள் வேலையாக இருந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் இங்கு வேலை காரணங்களால் வரமுடியவில்லை. மும்பையில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் சில திரைப்படங்கள் ஆரம்பிக்கிறது அதனால் தான் வரமுடியவில்லை. அவருக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வருடமாக அமையும்.

இங்கு வாழ்த்த வந்துள்ள எங்கள் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ஒரு இயக்குநராக மட்டுமில்லாமல், அவர் ஒரு நிறுவனம் மூலமாக 10க்கு மேற்ப்பட்ட அறிமுக இயக்குநர்களைத் திரை உலகிற்குத் தந்துள்ளார். அவரளவிற்கு இல்லாவிட்டாலும் அது போல் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்தப்படம் மூலம் நிகேஷ் பெரிய அளவில் சாதிப்பார். 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் உருவாகியுள்ளது. ஜீவி பிரகாஷ் அட்டகாசமான ஆக்சன் செய்துள்ளார். இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

இயக்குநர் நிகேஷ் பேசியதாவது…

நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன் சார், அவருக்கு நன்றி. ஜீவி பிரகாஷ் அண்ணா என்னை நம்பி இந்தக்கதை கேட்டார், கேட்டவுடன் தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார். அவருக்கு என் நன்றி. இந்த மொத்தப்படமும் அவர் மீது தான் பயணிக்கிறது.

நாயகி மமிதா பைஜு, மிக ஆழமான அழுத்தமான கேரக்டர், ஆனால் அதைப் புரிந்து நடித்த தந்தார் அவருக்கு என் நன்றிகள். பா ரஞ்சித் அண்ணா என் படத்தின் பூஜைக்கு வந்தார், இப்போது இங்கு வாழ்த்த வந்துள்ளார் நன்றிகள். கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், என ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். அருண் மிக அற்புதமான ஒளிப்பதிவைத் தந்துள்ளார்.
உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது…

இந்தப்படத்தின் கதை 2 1/2 வருடம் முன்னாடி முடிவானது. இந்த 2 1/2 வருடங்களில் இப்படத்திற்காகப் போராடிப் படத்தை அருமையாகக் கொண்டு வந்துள்ள இயக்குநர் நிகேஷ் அவர்களுக்கு நன்றி. ஜீவி அண்ணா அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அவர் நேரில் தம்பி போல் என்னைப் பார்த்துக்கொண்டார்.

ரஞ்சித் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அவருக்கு நன்றி. மமிதா பைஜு இன்னும் நிறைய வெற்றிப்படங்கள் தர வாழ்த்துக்கள். நிறைய மலையாள நண்பர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் கல்லூரி வினோத் பேசியதாவது…

ஜீவி பிரகாஷ் சாருக்கு வணக்கம் , இந்தப் படத்தில் நான் தான் இறுதியாகக் கலந்து கொண்ட கதாபாத்திரம், இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், ரஞ்சித் அண்ணாவை எனக்கு மிகவும் பிடிக்கும் , அவரது படம் போல இந்தப் படமும் ஒரு முக்கியமான அரசியலை மைய்யாமாக வைத்து உருவாகியுள்ளது.

அது மட்டுமில்லை அதில் ரசிக்கும்படி பாடல்கள் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளது. இயக்குநர் நிகேஷ் சாருக்கு நன்றி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி. ஜீவி பிரகாஷ் சாரின் ரசிகன் நான். வெயில் படத்தின் பாடல்கள் முதல் இன்று வரை அவரது பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவருடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் – நடிகர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது…

முதல் படம் ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட படமாக, பொதுவுடைமை கருத்தைத் தைரியமாகச் சொல்லும் படமாக இயக்கியிருக்கிறார் நிகேஷ். முதல் படத்தில் இதை செய்வது மிகப்பெரிய விசயம்.

தமிழை முதல் படத்தில் இவ்வளவு தைரியமாகப் பேசி எடுப்பது பெரிய விசயம் நிறைய ஹீரோக்கள் இதைச் செய்யப் பயந்திருப்பார்கள். ஆனால் மிகத் தைரியமாகச் செய்துள்ள ஜீவிக்கு நன்றி. அவர் சமூகத்தில் சின்ன சின்ன விசயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவரால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்.

இந்தப்படம் பார்க்கும் போது எனக்கு நாயகன் தான் ஞாபகம் வந்தது. அந்தப்படமும் மும்பையில் தமிழ் கஷ்டங்களைப் பேசும் படம். ரனினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இது பெயர் சொல்லும் ஆக்சன் படமாக இருக்கும். ரஞ்சித் எனக்கு மிகப்பிடித்த இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆர் பி சௌத்திரிக்குப் பிறகு அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார் ரஞ்சித் அவருக்கு என் நன்றி. இந்தப்படம் தான் உண்மையான மஞ்ஞும்மள் பாய்ஸ். தமிழ் பசங்க கேரளா போவது தான் கதை. ஒரு அருமையான போராளிப்படம். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் நன்றி.

நாயகி மமிதா பைஜு பேசியதாவது…

இது எனது முதல் தம்ழிப்படம். எனக்கு மனதுக்கு மிக நெருக்கமான படம். ஜீவி பிரகாஷ் சார் அருமையான கோ ஸ்டார். எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். எல்லோரும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்துள்ளனர். இந்தப்படம் அருமையாக வந்துள்ளது, தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…

இந்தப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்தேன், முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் மிரட்டி விட்டார். ஒரு போராளிக்கதை அதை தனித்த கண்ணோட்டத்தில், பார்க்கும் திறமையுடன் இருக்கக்கூடியவர்.

ஆனால் முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படாமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிகேஷ். இது தெறிக்கும் கமர்ஷியல் படம். ஜீவி பிரகாஷ் சார் முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருக்கிறார். படத்தில் 200 பேரை அடிக்கிறார். ஆனால் அதை அத்தனை நம்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக்காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கும். ஞானவேல் சாரின் நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது.

இடையில் சில வருடங்கள் அவருக்குப் பல கஷ்டங்கள் இருந்தது, ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக இருக்கும். இப்படம் மூலம் ஒரு அருமையான புதுமுக இயக்குநர் கிடைத்துள்ளார். ஜீவியுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் செய்கிறேன். இரண்டுமே அட்டகாசமாக வந்துள்ளது.

ரஞ்சித் சார் வந்துள்ளார். அவரின் சமீபத்திய தயாரிப்பான ஜே பேபி படத்தை நான் தான் ரிலீஸ் பண்ணியிருக்கிறேன். ஒரு படத்தில் புதுமுகங்கள் பெயர் பெற வேண்டும் என்பதற்காக, உழைக்கும் அவர் பண்பு வியக்கவைத்தது.

தொடர்ந்து சிறப்பான படங்களைப் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ரெபல் படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…

ரெபல் படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் உண்மையான ரெபல் பா ரஞ்சித் பற்றிப் பேச நினைக்கிறேன், உண்மையில் புதிய முகங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவரது இந்த புரட்சி பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியது.

அவரை சரோஜா படத்தில் உதவி இயக்குநராகப் பார்த்தேன். இன்று அவர் பல இயக்குநர்களை உருவாக்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது , அவர் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த பட வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்திற்குப் போவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பொருளையும் வெற்றியையும் ஈட்டித் தரும். இந்தப் படம் 80 கால கட்டங்களில் நடப்பது போலப் படமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த படக்குழுவினரின் உழைப்பு படத்தின் இந்த டிரெய்லரில் தெரிந்து விட்டது, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…

ரெபெல் படப்புகழ் மேடையா ? என்னைப் புகழும் மேடையா? எனத் தெரியவில்லை, இந்தப்பாராட்டுக்கள் மூலம் நான் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன் என்று நினைக்கிறேன்.

இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில், இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில், இந்தக்கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள்.

ஜீவியை எனக்கு தங்கலான் மூலமாகத் தான் தெரியும், எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள், ஆனால் நேரில் பழகியபிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனது கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும், நிறையப் பேருக்கு நல்லது செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்தப்படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது, என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது, இந்த நிலையில் தான், சக்திபிலிம் சக்திவேலன் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அவர் இந்த வேலையை நிறையச் செய்ய வேண்டும். நிகேஷ் இப்படத்தில் இருமொழியைப்பிரச்சனையைக் கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள். ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.

சக்தி ரெபல் படம் பார்த்துவிட்டார், அதனால் தான் இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார்.

இந்தப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது, இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலைச் செய்துள்ளார்.

ஆதித்யா இந்தப்படத்தின் மையமே அவன் தான். அவனது கேரக்டர் சரியாக அமைந்ததால் தான், இந்தப்படமே சரியாக வந்துள்ளது. அட்டகாசமாகச் செய்துள்ளான். நடிகர் வினோத் போனில் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் ஆனாலும் வைக்க மாட்டான், நல்ல பையன். இரவு 8 மணிக்கு மேல் அவருக்கு போன் செய்யக்கூடாது.

நன்றாக நடித்துள்ளான். மிக நீண்ட வருடம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன், அவர் தான் டார்லிங்க் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்.

நிகேஷ் படம் பார்த்துவிட்டு என் தயாரிப்பில் படம் செய்ய அட்வான்ஸ் தந்துள்ளேன். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். ஓஃப்ரோ மிகச்சிறப்பான பின்னணி இசை தந்துள்ளார், சித்துக்குமார் கேரளா சாங் செய்துள்ளார். அதை நான் தான் டிரெய்லரில் வைக்கச் சொன்னேன்.

வெங்கடேஷ் என்னிடம் எல்லாம் பேச மாட்டான் எப்போதும் பெண்களுடன் தான் பேசுவான். நல்ல நடிகன்.

எல்லோருமே மிக அர்ப்பணிப்போடு உழைக்கும் போது அந்தப்படம் சிறப்பாக வரும். மமிதா பைஜு அழகாக தன் கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்துள்ளார்.

ஆண்டனி லவ் ஸ்டோரி சொல்வார் பிரமிப்பாக இருக்கும். ஒரு குழுவாக எல்லோரும் விரும்பி உழைத்திருக்கும் படம். தமிழ் உரிமை பற்றிப் பேசும் அழுத்தமான படம் உங்கள் எல்லோருக்கும் இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

Gv Prakash funny speech about Rebel villain Venky

நான் ஹீரோ இல்லை.. சினிமாவை நினைத்து பயந்துட்டேன்.; ‘அமீகோ கேரேஜ்’ படவிழாவில் மகேந்திரன் பேச்சு

நான் ஹீரோ இல்லை.. சினிமாவை நினைத்து பயந்துட்டேன்.; ‘அமீகோ கேரேஜ்’ படவிழாவில் மகேந்திரன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் ஹீரோ இல்லை.. சினிமாவை நினைத்து பயந்துட்டேன்.; ‘அமீகோ கேரேஜ்’ படவிழாவில் மகேந்திரன் பேச்சு

அமீகோ கேரேஜ் படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’.

கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார்.

இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

நடிகர் மகேந்திரன் பேசியதாவது…

நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி.

கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார்.

அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.  

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது…

இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம்.

ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.  இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார்.

கமல் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர்.

இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

NV Creations தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது..

இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன்,  அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாக தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  

Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது…

அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது…

2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து  மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

நடிகர் முரளி பேசியதாவது…

மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப்படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று  தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அனைவருக்கும் நன்றி.  

ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து பேசியதாவது..

இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது…

மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது…

அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை  தாருங்கள்.

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது…

அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி .

நடிகர் தாசரதி பேசியதாவது…

இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான்.  இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது…

இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஶ்ரீக்கோ உதயா பேசியதாவது…

ஊடக நண்பர்களுக்கு நன்றி. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.  இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

நடிகர் மதன கோபால் பேசியதாவது…

எங்கள் குழுவே அமீகோ கேரேஜ் படத்திற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தோம். இந்த படக்குழு எனக்கு புதியது, மகி மட்டும் தான் நண்பர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து, இப்போது எல்லோரும் குடும்பமாகிவிட்டார்கள்.

இந்த டீமில் நானும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி கோபால் பேசியதாவது…

இந்தப் படம் ஃபிரண்ட்ஸ் இல்லாவிட்டால் நடந்திருக்காது. இயக்குநர் பிரசாந்த் தான் அனைவருக்கும் வாழ்க்கை தந்துள்ளார். எல்லோரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,  சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

Mahendran speech at Amigo Garage press meet

அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்துக்கு V சென்டிமென்ட்.. வெண்பாவுக்கு A சென்டிமென்ட்.. வரிசை கட்டும் படங்கள்

கோலிவுட்டில் சிறு வயது முதலே நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்களில் ஒரு சிலர் மட்டுமே ஜெய்ப்பது உண்டு.

கமல் ஸ்ரீதேவி விஜய் மீனா சிம்பு உள்ளிட்டவர்கள் வரிசையில் இணைந்தவர் தான் நடிகை வெண்பா.

சிறுவயதில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, கற்றது தமிழ் கஜினி சிவகாசி, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

வளர்ந்து குமரியான பின்னர் காதல் கசக்குதையா, பள்ளிப் பருவத்திலே, மாய நதி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கேரக்டரில் வெண்பா நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவரது கைவசம் தற்போது 5-6 படங்கள் உள்ளன.. இதில் மூன்று படங்களுக்கு அ என்ற எழுத்தில் தலைப்பு இடம் பெற்றுள்ளது.

முதல் படம் ‘அக்கரன்’..

அருண் பிரசாத் இயக்கி வரும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வந்த் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் வெண்பா நாயகியாக நடித்து வருகிறார்.

இரண்டாவது படம் ‘அஸ்திரம்’..

அரவிந்த ராஜகோபால் இயக்கி வரும் இதில் ஷாம் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் வெண்பா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படம் ‘போர்த் தொழில்’ பாணியில் ஆன திரில்லர் கதை என கூறப்படுகிறது.

மூன்றாவது படம் அத்திப்பூ

எஸ் ஏ செல்வகுமார் என்பவர் இயக்கியவர் இந்த படத்தில் வெண்பா நாயகியாக நடித்து வருகிறார்.. இவர்களுடன் சரவணன் சிங்கம்புலி, பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்..

நடிகர் அஜித் ‘வி’ செண்டிமெண்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.. விஸ்வாசம் விவேகம் வீரம் வலிமை தற்போது உருவாகி வரும் விடாமுயற்சி உள்ளிட்ட அனைத்து படங்களும் ஆங்கில எழுத்தில் வி என்ற முதல் எழுத்திலேயே தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Venba movie titles starts with A sentiment

NEET ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ பாராட்டிப் பேசிய கே.ராஜன் – உதயகுமார் – பேரரசு

NEET ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ பாராட்டிப் பேசிய கே.ராஜன் – உதயகுமார் – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NEET ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ பாராட்டிப் பேசிய கே.ராஜன் – உதயகுமார் – பேரரசு

நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது நீட் தேர்வுக்கு எதிரான படமா, நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது எங்களுக்கு தெரியாது பட துவக்க விழா!

சாய் ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சூர்யா சுப்ரமணியன் தயாரித்து இயக்கும் படம் ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’. நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவர்கள் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் நீட் தேர்வின் உண்மை பின்னணி என்ன? போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 7 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜான் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்…

“’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்ற தலைப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதோடு, அந்த தலைப்பின் அருகே இருக்கும் குறியீடுகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பும் என்று புரிய வைக்கிறது. ஆனால், தணிக்கை குழுவில் சிக்காதவாறு காட்சிகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், நீட் தேர்வை எதிர்த்து போராடும் மனநிலையை நாம் கடந்து வந்துவிட்டோம் என்று தான் நினைக்கிறேன். எனவே அதற்காக நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம், இந்த படத்தின் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. இதில் நாயகன், நாயகன் யார்? என்பது எங்களுக்கு தெரியாது, இயக்குநரும் எங்களிடம் சொல்லவில்லை. இசை வெளியீட்டு விழாவில் அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார். எனவே, முகம் தெரியாத அந்த நாயகன், நாயகி, இயக்குநரும் தயாரிப்பாளருமான சூர்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில்…

“இந்த படத்திற்கு ‘நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்று தலைப்பு வைத்திருக்கும் சூர்யா சுப்ரமணியம் கேப்ஷனாக NEET என்று போட்டிருக்கும் போதே படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பது புரிந்துவிடுகிறது.

அதேபோல் நீட் என்ற ஆங்கில வார்த்தையில் ஒவ்வொரு எழுத்துக்கும் அவர் கொடுத்திருக்கும் விளக்கமும் கவனம் ஈர்க்கிறது. இந்த படத்தின் தலைப்பை வெளியிடுவதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள், அதில் மறைந்த அனிதா புகைப்படத்தை காண்பித்தார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், இனி அனிதா போல் யாரும் இறக்க கூடாது.

பொதுவாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், படப்படிப்பில் ஹரியர் வைத்த மாணவர்கள் யாராவது அதுபோன்ற தவறான முடிவை எடுப்பதில்லை. அதற்கு காரணம், கல்லூரி படிக்கும் போது அவர்கள் பக்குவமான மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆனால், பள்ளி மாணவர்கள் பக்குவமில்லாத காரணத்தினால் தான் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்த நிலையை அரசு மாற்ற வேண்டும், அதற்காக மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல், அனிதா போல் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கி விட்டால் மட்டும் போதுமானதல்ல, அவர்கள் கொடுக்கும் அந்த பணம் அவரது உயிருக்கு ஈடாகுமா?, அனிதா போல் இனி யாரும் தற்கொலை செய்துக்கொள்ளக் கூடாது. அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை தான் அனிதாவின் மரணத்திற்கான சரியான தீர்வாக இருக்கும்.

மருத்துவம் என்பது மிக முக்கியமானது. உயிரை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு படிப்பவர்கள் சரியானவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கான படிப்பில் சேருபவர்கள் அதற்கு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். அதற்காக தான் நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள்.

சில விசயங்கள் தனிப்பட்ட முறையில் பார்க்கும் போது சரியாக இருக்கும், ஆனால் சமூகத்தின் பார்வையில் தவறாக இருக்கும். அதேபோல், சமூகத்தின் பார்வையில் சரியாக இருப்பவை, தனிப்பட்ட பார்வையில் தவறாக தெரியும். அதுபோல தான் நீட். சில பார்வைக்கு தவறாக தெரிந்தாலும், சமூகத்தின் பார்வையில் சரியானதாக இருக்கும்.” என்றார்.

விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் பேசுகையில்…

“’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ படத்தின் துவக்க விழா இனிதே நடந்திருக்கிறது. இன்று பலர் நியாயம் தெரியாமல் தான் இருக்கிறார்கள்.

ஆனால், இந்த தலைப்பு வைத்து படம் எடுக்கும் இயக்குநர் சூர்யா சுப்ரமணியம் நியாயமான விசயம் ஒன்றை படத்தில் வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கன் போன்றவரக்ள் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள்.

குறிப்பாக கக்கன் ஒரே ஒரு கதர் சட்டையுடன் இருந்தார், இத்தனைக்கும் அவர் போலீஸ் அமைச்சராக இருந்தார். ஆனால், இப்போதைய அரசியல்வாதிகள் ஒரு நாளில் பல சட்டைகளை மாற்றுகிறார்கள், மனைவிமார்களை மாற்றுகிறார்கள். ஊருக்கு ஒரு பொண்டாட்டி என்று வாழ்கிறார்கள். அந்த அளவுக்கு நியாயம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு படம் வெற்றி பெற இயக்குநர் தான் முக்கியம், அதனால் இயக்குநருக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்தியில் ஷாருக்கானின் ஜக்தே இந்தியா என்ற ஒரு படம் பார்த்தேன், மிக சிறப்பான படம். கதைக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே படமாக்கியிருக்கிறார்கள்.

அதனால் அந்த படம் மிக சிறப்பான படமாக இருந்தது. அதேபோன்ற பாணியில் நம்ம ஊர்ல ஒரு படம் வந்தது. அதில் ஹீரோவுக்காக என்னவெல்லாம் செய்தார்கள். கிறிஸ்தவ தேவலாயத்தில் ஹீரோயினுக்கு திருமணம் நடக்க இருக்கும் போது ஹீரோ அங்கே போகிறார். அவரை பார்த்த ஹீரோயின் கண் அடிக்கிறார்.

அந்த ஹீரோவுக்கு ஒரு அப்பா அவர் பெரிய ரவுடி, இப்படி கதையில் என்னவெல்லாம் திணிக்க வேண்டுமோ அதை எல்லாம் திணித்து எடுத்தார்கள். அதனால் அந்த படம் மிகப்பெரிய பட்ஜெட் படமானது. ஆனால், தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்ட்டத்தை கொடுத்தது.

அதனால் தேவையில்லாத விசயங்களை வைத்து படம் எடுக்க கூடாது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்குநராக வளர்ந்துவிட்டார். ஆனால், தனது உதவியாளர்களை இயக்குநராக அறிமுகப்படுத்துவதற்காக படங்கள் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் படங்களை சமீபத்தில் பார்த்தேன், மிக சிறந்த படங்களாக இருக்கிறது. பா.இரஞ்சித் நீ வாழ்க, அப்படி இருக்க வேண்டும். மற்றவர்களை தூக்கி விட வேண்டும்.

இந்த படத்தில் தமிழ் பேசும் பெண்ணை நாயகியாக்கி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தமிழர்கள் இல்லை என்றால் பிறருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தப்பில்லை. மிக சிறந்த கருத்தை சொல்லும் திரைப்படமாக உருவாக உள்ள நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது படத்திற்கும் இயக்குநர் சூர்யா சுப்பிரமணியம் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சூர்யா சுப்ரமணியன் பேசுகையில்…

“நிச்சயம் இந்த படத்தில் எதிர்பார்த்த விசயங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத விசயங்கள் இருக்கிறது. படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக்கொள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா வரை காத்திருங்கள்.

சுமார் 30 முதல் 35 நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன், அதுவரை எனக்காக காத்திருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் உங்கள் காத்திருப்பு வீண் போகாதபடி சிறந்த படைப்பாக ’நியாயம் எதுவும் எங்களுக்கு தெரியாது’ இருக்கும்.” என்றார்.

கல்யாணசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மலேசியாவை சேர்ந்த இளவரசு இசையமைக்கிறார்.

Rajan Udhayakumar Perarasu launches Neet titled movie

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து பிஸியான நடிகர் லஷ்மணன்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து பிஸியான நடிகர் லஷ்மணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் லஷ்மணன் (Actor R. Lakshmanan)

நடிகர் R. லஷ்மணன் (Actor R. Lakshmanan) வந்தவாசியில் பிறந்தவர். சிறுவயதிலிலே கலைகளின் மேல் ஆர்வம் உண்டு. பாடம் படிப்பதை விட நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து கரைத்து குடித்தவர்.

ஜெயகாந்தன் முதல் தற்போதைய ஜெயமோகன் வரை அறிந்தவர். கதை கவிதை கட்டுரை என எல்லா தளங்களிலும் இலக்கிய அறிவை மேம்படுத்தியவர்.

சிறுவயதிலேயே பள்ளி, மேடை நாடகங்களில் நடித்தும் கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி என பல பரிசுகளை பெற்றவர். வீட்டை நிறைக்கும் அளவுக்கும் சிறுவயது முதல் கல்லூரி வரை பல பரிசுகளை பெற்றவர்.

எம்ஜிஆர், சிவாஜி என எல்லா நடிகர்களின் படங்களையும் பார்த்து விடுவார். எல்லோரும் இவரைப் பார்த்தவுடன் விஜயகாந்த் மாதிரி இருக்கே.. சினிமாவுக்குப் போ என சொல்ல ஆரம்பித்தனர்..

ஆனால் இவர் கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தார். பெற்றோர் விருப்பத்திற்காக BE Civil Engineer முடித்து வேலை பார்த்துக் கொண்டே சினிமா தேடலை துவங்கினார். பல குறும்படங்களில் நடித்து பாராட்டு வாங்கியதோடு மட்டுமல்லாமல் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.

ஒரே சமயத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார். சுந்தரம் என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். வெளிநாடுகளில் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டது.

2026 என்கிற படத்தை Science Fiction படத்தை உருவாக்கி உள்ளார். படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகிறது.

தன் நண்பர்களான Rock & Role Productions சேர்ந்து ‘வாங்கண்ணா வணக்கங்கன்னா..’ என்கிற படத்தை இணை தயாரிப்பாளராக A. P. Productions சார்பில் இவரது மனைவி மணிமேகலை லட்சுமணன் அவர்கள் தயாரித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது.

ராஜ் கண்ணாயிரம் இயக்கத்தில் நடிகர் செந்தில் மற்றும் சுந்தர் மகாஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் சுந்தர் மகாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் , ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண், மாதவன், விஷ்ணு ராஜ்,தயாரிப்பு -யாஸ்மீன் பேகம், மணிமேகலை லட்சுமணன்
மக்கள் தொடர்பாளர் – பா. சிவக்குமார்

இவரது படங்கள் குறித்து லஷ்மணன் கூறியதாவது..

‘வாங்கண்ணா வணக்கங்கன்னா..’ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளேன். பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. அடுத்தடுத்த படங்களில் பெரிய திரையில் விரைவில் என்னைப் பார்க்கலாம்” என்றார்.

Actor Lakshmanan speaks about his acting and Production movies

More Articles
Follows