தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.
அவரது உடல் மருத்துவமனையிலிருந்து நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘புலமைப்பித்தன்’ பற்றி சில தகவல்கள்…
1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்தவர் புலமைபித்தன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற ‘குடியிருந்த கோயில்..’ திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார்.. நான் யார்.. நீ யார்… என்ற பாடலின் மூலம் புகழ் பெற்றவர் புலமைப்பித்தன்.
மேலும் அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உலகம் சுற்றும் வாலிபன் என படங்களுக்கும் பாடல்களை எழுதி உள்ளார்.
ரஜினியின் பணக்காரன், சிவா உள்ளிட்ட பல படங்களுக்கும் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடலையும் எழுதியிருக்கிறார்.
கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் (“நான் சிரித்தால் தீபாவளி”… “நீ ஒரு காதல் சங்கீதம்) எழுதியவர் இவர்தான் தான்.
இவர் 1000க்கும் மேற்பட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் அறிமுக பாடலான ஆயிரம் நிலவே வா… என்ற பாடலையும் இவர் தான் எழுதினார்.
பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் இடம் பெற்ற “அம்மாடி இது தான் காதலா” மற்றும் “காமதேவன் ஆலயம்” ஆகிய சூப்பர் ஹிட் பாடலையும் இவர்தான் எழுதினார்.
விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற (வளைகாப்பு பாடலான) தாய்மை வாழ்கென… என்ற பாடலை எழுதியவரும் புலமைப்பித்தன் தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lyricist Pulamaipithan passes away at 85