ராஜமௌலி ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இணைந்த RRR படத்தை 550 தியேட்டர்களில் வெளியிடும் லைக்கா

ராஜமௌலி ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இணைந்த RRR படத்தை 550 தியேட்டர்களில் வெளியிடும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

பிரம்மாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிடுகிறது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கவுள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இது ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.

படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்தின் மையக்கரு என இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.

ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். இதை தவிர ஒளிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Lyca will release RRR movie in 550 screens

குட் டச் பேட் டச் போல IPC சட்டங்களையும் குழந்தைகளுக்குச் சொல்ல வரும் ‘ஹரா’

குட் டச் பேட் டச் போல IPC சட்டங்களையும் குழந்தைகளுக்குச் சொல்ல வரும் ‘ஹரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துக் கொண்டார் .

சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை குழுவினர் தொடருவார்கள்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, IPC சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

Mohan takes action hero avatar in Haraa with Vijay Sri

மாஸ்டர் மகேந்திரனின் ‘அமீகோ கேரேஜ்’-ஜில் இணைந்த ஜிவி பிரகாஷ் & ஷிவாங்கி

மாஸ்டர் மகேந்திரனின் ‘அமீகோ கேரேஜ்’-ஜில் இணைந்த ஜிவி பிரகாஷ் & ஷிவாங்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில், இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர்.

திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் காந்தக்குரலும், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் வசீகர குரலும் இணைந்து, இப்பாடலை மிக அற்புத அனுபவமாக மாற்றியுள்ளது.

அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் அருமையான மெலடி கீதமாக, விரைவில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது.

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர் தசரதி, தீபா பாலு, ஆதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார்.

ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, கு.கார்த்திக் படத்தின் அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார்.

விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

GV Prakash and Sivaangi joins for Amigo garage

சிம்பு கிட்ட மனிதநேயத்தை எதிர்பார்ப்பது தவறு.. சிம்பு மீதும் வழக்கு போடனும்..; பால் முகவர்கள் சங்கம் புகார்

சிம்பு கிட்ட மனிதநேயத்தை எதிர்பார்ப்பது தவறு.. சிம்பு மீதும் வழக்கு போடனும்..; பால் முகவர்கள் சங்கம் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் வசித்து வரும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளியான முனுசாமி (வயது-70) அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள இளங்கோ – பிரார்த்தனா சாலை சந்திப்பில் சாலையை கடக்க சாலையில் தவழ்ந்தபடி வரும் போது அவ்வழியே வேக வேகமாக வரும் வாகனங்களை நிறுத்தி அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்யாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தது மிகுந்த மனவலியை தந்தது.

இந்த நிலையில் அவ்வழியே வரும் அடையாளம் தெரியாத டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையை தவழ்ந்தபடி கடந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி முனுசாமி மீது ஏற்றி இறக்கி விட்டு நிற்காமல் வேகமாக செல்லும் சிசிடிவி காட்சி பதை பதைக்க செய்கிறது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த புகார் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது நடிகர் சிம்புவின் கார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

தற்போது கார் ஓட்டுநர் செல்வம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடிகர் சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

சாலையை கடக்க அந்த மாற்றுத்திறனாளி தவழ்ந்தபடி வருவதை அவ்வழியே சென்ற நபர்களில் எவர் ஒருவரேனும் அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்திருந்தாலோ அல்லது நடிகர் சிம்புவின் கார் ஓட்டுநர் சற்று நிதானித்து நின்று அவர் சாலையை கடந்த பின்னர் சென்றிருந்தாலோ முனுசாமி இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்.

இது போன்ற மனிததன்மையற்ற, பொறுப்பற்ற மனிதர்களால் பல நேரங்களில் மனிதநேயம் கூட மரித்து தான் போகிறது.

சட்டம் என்பது எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் தனியொரு மனிதனாக இவ்வுலகில் மாறாத வரை மாற்றங்கள் என்பது சாத்தியமில்லை.

அதே நேரம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர் சிம்பு போன்ற திரையுலக பிரபலத்தின் செயல்பாடே இப்படி இருக்கிறது என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகர்களின் நிலை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..? “பீப் பாடல்” எழுதி அதற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சினை எழுந்த போது கூட அதற்காக வருந்தாமல் அது போல இன்னும் 150 பாடல்கள் இருக்கிறது என கூறியவர், தனது “பட கட்அவுட்டுகளுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம்” செய்ய சொன்னவரிடம் இருந்து மனிதநேயத்தை எதிர்பார்ப்பது என்பது மிகப்பெரிய தவறு தான் என்பதை இந்நிகழ்வு உறுதி செய்கிறது.

ஊருக்கு உபதேசம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் இனியேனும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு :- *சிசிடிவி காட்சி பதிவு*

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனத் தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
WhatsApp :- 9566121277
24.03.2022 / காலை 8.43மணி

Milk vendor association condemns STR

சிம்பு கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் மரணம்.; டி.ஆர் உடனிருந்தார்.. போலீசார் விசாரணை

சிம்பு கார் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் மரணம்.; டி.ஆர் உடனிருந்தார்.. போலீசார் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை தேனாம்பேட்டை அருகே முனுசாமி என்ற மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அங்கு வந்த நடிகர் சிலம்பரசனின் கார் அந்த முதியவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசனின் கார் என்பது உறுதியானது.

டிரைவர் செல்வம் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார். காரின் பின் சீட்டில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் காரில் இருந்துள்ளார்.

ஆனால், இந்த விபத்திற்கும், டி.ராஜேந்தருக்கும் சம்பந்தம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டிரைவர் கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

தற்போது இது குறித்த CCTV காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Simbu’s car involved in freak accident

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ எஎன்ற படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘அந்தாதூன்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்காகும்.

இந்த தமிழ் பதிப்பில் நடிகர் பிரசாந்த் உடன் நடிகர் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு கைப்பற்றியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் நடித்துள்ள படம் வெளியாக உள்ளதால் ‘அந்தகன்’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் பிரசாந்திடம் நான் பேசியபோது…

‘அந்தகன்’ ரிலீசுக்கு பிறகு உடனடியாக திருமணம் நடைபெற உள்ளதாமே

பெண் யார் என்று கேட்டபோது…?

உங்களுக்கு சொல்லாமல் இருப்பேனா.? கண்டிப்பா சொல்றேன்.. வெய்ட் பண்ணுங்க ராஜேஷ் ப்ரோ..” என்று பதிலளித்தார்.

Director Thyagarajan talks about Prashanth marriage

More Articles
Follows